உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்

இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்

சென்னை:உயர்கல்வித் துறையின் அறிக்கை:தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025 - 26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, https://www.tngasa.inஎன்ற இணையதளத்தில் நடந்து வருகிறது. இணையதளம், மே 7ல் துவங்கி எவ்வித இடர்பாடும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது. இதுவரை, 2.08 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியே விண்ணப்பித்துள்ளனர்; 81,923 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடும் இல்லை. கல்வி இயக்ககத்தின், tndce.tn.gov.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக சென்றும், https://www.tngasa.inஇணையதளத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி