உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் அரசியல் வருகை கண்டு பயப்படுகிறதா தி.மு.க.,?

விஜய் அரசியல் வருகை கண்டு பயப்படுகிறதா தி.மு.க.,?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வை பார்த்து விஜய் பயப்படுகிறாரா, விஜயைப் பார்த்து தி.மு.க., பயப்படுகிறதா என சந்தேகம் எழும் வகையில் அமைச்சர்கள் பேச்சு அமைந்துள்ளது.தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: தி.மு.க.,வுக்கு விஜய் எச்சரிக்கை விடுப்பதாக சொல்வது, அவர் தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தமாகிறது. அவரது விமர்சனங்கள் தி.மு.க.,வை நோக்கியே இருப்பதால், தி.மு.க.,வை பார்த்து அவர் பயப்படுவதாகவே அர்த்தம்.டவுட் தனபாலு: தி.மு.க.,வை பார்த்து விஜய் பயப்படுற மாதிரி தெரியலையே... அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் வரிஞ்சு கட்டிட்டு மாறி மாறி பதிலடி தருவதை பார்த்தாலே, நீங்க தான் அந்த கட்சியை பார்த்து பயப்படுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தமிழன்
டிச 11, 2024 15:18

ஒரு சிலர் தான் திமுகவுக்கு எதிரி ஒரு சிலர் தான் உதயநிதிக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருந்தோம். ஆனால் இப்போ தான் புரிகிறது ஒட்டு மொத்த தமிழகமே திமுகவுக்கு எதிர் அணியில் இருக்கிறது. திமுவி லேயே அமைச்சர் உதயநிதிக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது ... இப்போ தான் தெளிவாகிறது ONLY FITTEST WILL SURVIVE. இனி அரசியல் வரலாற்றில் திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது.. இனி தமிழகத்திற்கு இது தான் சுதந்திரமாக இருக்கும்.


S Srinivasan
டிச 11, 2024 15:14

Mr Vijay is DMK B team and congress BPlus team, here he needs to split the vote so that dmk wins again, dmk woll not do anything foe his speeches against govt, ellam oru drama thaan, TN people cane diverted easily நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிறேன் நான் திருப்பியும் அழுகிறேன்


அப்பாவில்
டிச 11, 2024 13:56

பா.ஜ வுக்கு பயமே இல்லை. மடியில் கனமும் இல்லை. சீமான், அண்ணாமலை எல்லாம் ஒரே படகில்.


venugopal s
டிச 11, 2024 19:10

அவர்களுக்கு மக்கள் ஆதரவும் இல்லை என்று சொல்ல மறந்து விட்டீர்களே !


SUBRAMANIAN P
டிச 11, 2024 13:46

இங்க வந்து முதலாளி மக்கள்தான். ஆனால் மக்களைப்பார்த்து யாரும் பயப்படுவதாக தெரியவில்லை. ஏன்னா அந்த கூமுட்டைகளுக்கு காசு கொடுத்தா போதும் ஓட்டு தன்னாலே விழும் அப்படின்னு அரசியல்வாதிகள் புரிஞ்சிக்கிட்டாங்க.


தமிழன்
டிச 11, 2024 15:20

காசே கொடுக்க வேண்டாம். மிஷின் இருக்கிறது.. இவர்கள் வாக்காளர்களை வாங்குவார்கள். அவர்கள் வேட்பாளர்களையே வாங்குவார்கள். காசு கொடுத்து தான் தேர்தல் நடக்கிறது என்று தெரிந்தே தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துகிறது என்றல் அவர்கள் எவ்வளவு வாங்கி இருப்பார்கள்.. நீங்கள் சொன்ன முட்டையில் எந்த முட்டை அவர்கள் என்று நீங்கள் தான் சொல்லணும் சுப்ரமணியன்


hari
டிச 11, 2024 13:33

பற்றளான் பதருவதை பாருங்கள்....நிச்சயமாக திமுகவுக்கு பயம் வந்துடுச்சி ஹ. ஹ


xyzabc
டிச 11, 2024 13:05

இதெல்லாம் ட்ராமா வாக தெரிகிறது. தி மு க விற்கு தான் பயன்.


vadivelu
டிச 11, 2024 14:09

100% உண்மை.தி உ க எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க அந்நியர்களின் வேலை இது.


Mani . V
டிச 11, 2024 12:59

அதெல்லாம் இல்லை.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 12:30

ஒரு படத்தோட TICKET 200 க்கு விற்க வேண்டிய டிக்கட்டை ஆயிரம் இரண்டாயிரம் ஐந்தாயிரம் என்று உங்கள் ரசிகர் மன்ற தலைவர்கள் விற்றதை தெரிந்தும் கண்டுக்காமல் இருந்த நீர் இப்படி மக்களுடய பணத்தை சுரண்டிய முதல் ஊழல் வாதி நீர் தான் , அரசியல் வாதி அடிக்கும் பணத்தை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து வெற்றி பெறுகிறான் அனால் உம்மிடம் வந்த பணம் ONEWAY தான் அப்படி எனில் நடிகர்கள் தான் முதல் குற்றவாளி


raja
டிச 11, 2024 13:44

எப்புர்றா... எம்புட்டு முட்டு கொடுத்தாலும் கொத்தடிமைகள்லுக்கு ருவா இறநூறு தான் ...துணை முதல்வர் பதவியோ அல்லது கட்சி தலைவர் பதவியோ கிடையாது... அதெல்லாம் ஆல்ரெடி ரிசெர்வட் பார் கோவால் புற கட்டுமர குடும்ப பரம்பரைக்கு தான்...


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 12:30

1. தமிழ் நாட்டு அரசியலில் திராவிட இயக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று பா ஜ க வின் தாய் அமைப்பான ஆர எஸ் எஸ் திட்டம் போட்டு காய் நகர்த்து கிறது. முதல் முயற்சியாக அஇஅதிமுக வை உடைக்கப் பார்த்தார்கள். அது தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிவரை இந்நிலை தொடருமா என்று கூற முடியாது. திரு ஓபி எஸ் அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டதைத் தான் பார்க்கிறோம். 2. 2. அடுத்த முயற்சியாக திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் வாக்கு வங்கியை சிதைப்பது அல்லது குறைப்பது. இதில் சிறுபான்மை வாக்குகளையும் தலித் வாக்குகளையும் மடை மாற்றம் செய்வது.. இதன்படி திருமா வை வழிக்கு கொண்டு வர இயலாது . அதை ஆதவை வி சி க வில் இணையச் செய்து அரசியலிலும் பங்கு ஆட்சியிலும் பங்கு என்ற அஸ்திரத்தை பயன்படுத்தி ,சாத்தியமில்லாத இதனை வைத்து வி சி க வை கூட்டணியில் இருந்து பிரிப்பது. 3. 3 ஆர் எஸ் எஸ் க்கு தேவை வடக்கே உள்ள பகுஜன் சமாஜ் கட்சி போன்று தலித்துகளை இணைத்து இயக்கம் கண்டு தலைவர்கள் சௌகரியமாக இருக்கச் செய்து ,தலித்துகளைப் பற்றி கவலை கொள்ளாது மத்திய அரசிற்கு ஆதரவு நிலையை எடுக்கச் செய்வ 4. கூடுதலாக நடிகர் விஜயை அரசியல் கட்சி ஆரம்பிக்கச் செய்து திமுக விற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் தூண்டில் போடச் செய்து அவரை திமுக விற்கு எதிரி என்று மாற்றி விட்டுள்ளார்கள். ஏற்கனவே சீமான் அவர்களும் இந்த வளையத்திற்குள் தான் இருக்கிறார்.இதன் அடிநாதமே தற்போதைய கூட்டணி வாக்குகளைப் பிரிப்பது தான் .இப்படியாக தி மு க வைப் பலவீனப் படுத்தி ,திராவிட இயக்கங்களை அழிப்பது நிறை வேறும் என்று நம்புகிறார்கள்


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 12:26

அம்பேத்கர் விழா இதில் இவர் சங்கராச்சாரியார் நல்ல சாமியார் என்று சொல்லுகிறபோதே இவர் பின்னால குரு மூர்த்திகளின் கைகள் வெளியே பட்டவர்த்தனமா தெரிகிறது ஏன் இதே சங்கராச்சாரியாயர் ஒரு கோவெர்னெர் தமிழ் இம்சையை நடத்திய விதம் எவ்வளவு அ ருவருப்பை கொடுத்தது , அவர் த லித் இல்லை த லித் என்றால் எப்படி ஜனாதிபதிக்கு பார்லிமென்ட் விவகாரம் மாதிரி ஆகி இருக்கும் , இவர்க்கு லாட்டரி சீட் ரெய்டுக்கு பிஜேபி DMK கூட்டணியை சிதைக்க அனுப்பிய அஜித் பவார் இவர்