உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஷ்யாவில் பயிலும் தமிழக மாணவரை போருக்கு அனுப்ப கட்டாய பயிற்சியா; மகனை மீட்க பெற்றோர் கோரிக்கை

ரஷ்யாவில் பயிலும் தமிழக மாணவரை போருக்கு அனுப்ப கட்டாய பயிற்சியா; மகனை மீட்க பெற்றோர் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற சேத்தியாத்தோப்பு வாலிபர், தன்னை உக்ரைன் போருக்கு அனுப்ப, அந்நாட்டு போலீசார் வலுக்கட்டாயமாக பயிற்சி அளிப்பதாக, அவரது பெற்றோருக்கு அனுப்பிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை சரவணன் மகன் கிஷோர், 23; 2021ல் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். இவரும், சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த நித்திஷ், மூன்று ரஷ்ய மாணவர்களும் அறையில் தங்கி படித்தனர்.ஐந்து பேரும், 'கூரியர்' நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு சேர்ந்தனர். 2023 மே, தடை செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ததாக, ஐந்து பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து, கிஷோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர், கிஷோருக்கு முன்ஜாமின் பெற ஏற்பாடு செய்து வருகின்றனர்.கிஷோர், தன் பெற்றோருக்கு ஒரு ஆடியோ அனுப்பியுள்ளார். அதில், 'தடை செய்த பொருட்களை டெலிவரி செய்ததாக கைதான ஐந்து பேரில், மூன்று ரஷ்ய மாணவர்களை போலீசார் விடுவித்தனர். தன்னையும், நித்திஷ் என்பவரையும் அழைத்து சென்று தனி அறையில் பூட்டி சித்ரவதை செய்தனர். ஆவணங்களில் கையெழுத்து பெற்று, மிரட்டுகின்றனர். உக்ரைன் போருக்கு வலுக்கட்டாயமாக தங்களை அனுப்ப, போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர்' என, கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, இந்திய துாதரகம் மூலம் மகனை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

விளாடிமீர்
ஜூலை 21, 2025 09:23

கட்டிப்புடி நட்பெல்லாம் பெரிய லெவல்லதான்.


manjagrup
ஜூலை 21, 2025 11:14

கஞ்சா விட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார் போன் எப்படி கிடைத்தது நட்பால் தான் அரபு நாடுகள் போல் தூக்கு தண்டனை விதிக்கவில்லை


veeramani
ஜூலை 21, 2025 09:13

தமிழக பெ ற்றோர்களுக்கு ஒரேயொரு கேள்வி இந்தியாவில் மருத்துவ படிப்பு இல்லையா ???நீங்களாகவே முடிவு எடுத்து ரஷ்ய நாட்டிற்கு அனுப்புவார்கள். அங்கு மாணாக்கர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என தெரியாது. பிரச்சினை என்றால்மட்டும் அரசாங்கத்தை குறை கொள்ளமுடிகிறது ..வெட்கம்


visu
ஜூலை 21, 2025 07:25

நம்ம நாட்டில் வெளிநாட்க்காரர் வந்து கடத்தல் பொருளை சப்ளை செய்தால் கைது செய்வோமா மாட்டோமா படிக்க போன படிக்கிற வேலையை பார்க்கணும் தெரியாத ஊரில் இந்த மாதிரி வேலை செய்தால் இப்படி மாட்டிக்கணும் சரி கோரியர்ல வேலை செஞ்சு ஏன் கஷ்டப்படுற போருக்கு போனால் 1 கோடி ரூபாய் தருகிறோம் என்று சொல்லி இருக்கலாம்


suresh Sridharan
ஜூலை 21, 2025 07:21

நம் நாட்டை போல் ரஷ்யர்கள் நாட்டுப்பற்று உடையவர்கள் அங்கு போய் நீங்கள் உண்டு உறங்கினால் நீங்களும் அந்நாட்டு மக்களே ரஷ்யாவிற்கு எதிரிகள் அதிகம் கண்டிப்பாக உங்களை வேலை வாங்குவார்கள் அதில் ஏந்த சந்தேகம் இல்லை செய் இல்லை செத்துமடி தமிழகம் போல் எல்லாம் ஓசி ஓசி கிடைக்காது


naranam
ஜூலை 21, 2025 07:21

இவர்களை யார் எந்தவித அனுமதியும் இல்லாமல் பகுதி நேர வேலை செய்யச் சொன்னது? பிறகு தடை செய்யப்பட்ட பொருள்களை ஏன் டெலிவரி செய்தனர்? பிறகு குய்யோ முறையோ என்று கதறி என்ன பிரயோஜனம்? உடனே மாவட்ட ஆட்சியர் முதல்வர் பிரதமர் நீதி மன்றம் என்று கோரிக்கையில் ஆரம்பித்து போராட்டம் வரை செல்ல வேண்டியது! கேரள நர்ஸ் நிமிஷா விவகாரம் இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது என்பதை பெற்றார்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே குற்றங்களை நமது நாட்டில் செய்தால் விட்டு விடுவோமா?


பெரிய குத்தூசி
ஜூலை 21, 2025 07:21

இந்த மாணவராக சென்றுள்ள நபர் சொல்வது அபத்தம். நிறைய பேர் இப்படித்தா மாணவர் விசாவில் சென்று எதையாவது செய்து போலீசில் மாட்டிக்கொள்வது, பின்னர் பொய் சொல்லி தான் உத்தமர் போல் காட்டிக்கொள்வது. நாங்கள் இருக்கும் தெருவில் வசிக்கும் 2 ரஷ்யாவில் மாணவர் விசாவில் சென்று பெண்கள் தனது ஆண் நண்பருடன் ஹோட்டல் அறையில் போதை மருந்து சாப்பிட்டு உல்லாசமாக இருந்தபோது ரஷ்ய போலீஸ் ரைட் ல் பிடிபட்டு இப்போது இந்திய திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார்கள். இது போன்று போதை பொருளை விநியோகம், பயன்படுத்துதல் போன்ற செயல்களை செய்தால் போலீஸ் பிடிக்கத்தான் செய்யும். தான் செய்த தவறை மறக்க போருக்கு அனுப்பறாங்க அதுஇதுனு கதை விட்டுகிட்டு திரியிறாங்க, இது ஒரு திராவிட மாடல் பொய்.


Kasimani Baskaran
ஜூலை 21, 2025 05:39

அங்கும் வெட்டி வேலை செய்தால் பிடிக்கத்தான் செய்வார்கள்.. போன இடத்தில படித்தோமா வந்தோமா என்று இருக்கவேண்டும்.


anonymous
ஜூலை 21, 2025 05:13

சுடாலியன் உடனடி இதில் தலையிட்டு தனது தளபதி உதயநிதியை நேரடியாக அனுப்பி போரிட்டு மீட்டு வருவாராக. கடிதம் எழுதி ஏமாற்ற ஏமாற்றும் வேலை வேண்டாம்.....


Jack
ஜூலை 21, 2025 06:35

புட்டினுக்கு தளபதி ஆணையிடலாமே ?


புதிய வீடியோ