உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அண்ணாமலை அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஒன்றரை ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது? நான்கு வருடங்களில் நீங்கள் போட்ட வேடங்களில், தேர்தல் நேரத்தில் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது.உடனடியாக, கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Devanand Louis
ஜூன் 18, 2025 09:35

பெறுநர்: ஆணையர், திருமங்கலம் நகராட்சித் துறை, மதுரை மாவட்டம், தமிழ்நாடு. மதிப்புக்குரிய ஐயா / அம்மையாருக்கு, மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கர்பகனா பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: • உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. • வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. • சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். • பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1. சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை உங்கள் அலுவலகம் உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டு, பொது நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.


Delhi Balaraman
ஜூன் 18, 2025 08:57

இவனும் இவன் இருக்கிற பீசப்பி கட்சியும் கொடுக்காத இம்சையா முதல்வர் எம் கே எஸ் கொடுத்திட்டார். தேர்தலுக்காக பீசப்பி ஆடும் கபட நாடகத்தை வேறு மாநிலங்களில் அரங்கேற்றலாம், ஆனால் பகுத்தறிவு மனிதநேயம் கொண்ட தமிழகத்தில் இந்த மாதிரியான பருப்பு வேகாது.


Bhaskaran
ஜூன் 17, 2025 11:57

இன்னும் ஏதேனும் மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை அடிமாட்டு விலைக்கு வாங்க திமுக பெரிய தலைகள் தயாராக உள்ளனர்


K.n. Dhasarathan
ஜூன் 16, 2025 21:17

விவசாயிகளை பற்றி பேச பொய் ஜே பி காரர்கள் யாருக்கும் தகுதி கிடையாது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்ததே எட்டி கூட பார்க்காத பிரதமர், இன்று தேர்தல் வந்ததும் அல்லி விடுகிறார், பணத்தால் அடித்து ஒட்டு வாங்கிடலாம் என்கிற நினைப்பு இதில் தினம் நூறு பொய் பேசும் அண்ணாமலை என்னும் சீடர் அவருக்கு வக்காலத்தா போயி ஆடு மாடு மேய்த்து பிழைப்பை பாருங்க, முதல்வருக்கு தெரியும் என்ன எப்போ செய்யணும் என்று பொறுத்திருந்து பார்க்கவும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 17, 2025 06:50

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகள் இருக்கும்போது பஞ்சாப் விவசாயிகள் மட்டும் டெல்லியில் போராட்டம் நடத்தியது ஏன்? மோடி கொண்டுவந்த புதிய சட்டங்கள் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, அரசு கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் சந்தைகளை நீக்கி, விவசாயிகள் நேரடியாக பெரிய நிறுவனங்களுக்கு விற்க வழிவகுக்கும். இதற்காகத்தான் தமிழ்நாட்டில் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயசங்கம் போராட்டம் நடத்தியது. விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை தான் விரும்புகிற விலைக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் விற்க முடியும் ...இந்தியாவின் எந்த பகுதியிலும் விற்கமுடியும் ..இதை மண்டிமுதலாளிகள் அதாவது இடை தரகர்கள் எதித்தார்கள்.. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளில் 6 சதவிகிதம் பேர்தான் மண்டியின் மூலம் தனது விளைப்பொருள்களை விற்பனை செய்கிறார்கள். மீதமுள்ள 94 சதவிகிதம் பேர் அவர்கள் விருப்பப்படியே விற்பனை செய்கிறார்கள். இந்த மண்டிகாரகள் தான் போராட்டம் நடத்தினார்கள் .


Gajageswari
ஜூன் 16, 2025 20:48

அரசு அனுமதி பெற்ற ஆலைகள், திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் நிறுவதை தடுக்கும்


suresh guptha
ஜூன் 16, 2025 17:55

they should demand establishment of new tasmac then it is genuine, asking old dues, u should give some sweet box then it will happen what happen to hundi parties ,why they have not raised their voice


முக்கிய வீடியோ