உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா அழைக்காதது வருத்தம் அளிக்கிறது : முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

அமித் ஷா அழைக்காதது வருத்தம் அளிக்கிறது : முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்வோம்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.கடந்த இரு நாட்களாக சென்னையில் நடந்த, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின், அவர் அளித்த பேட்டி:வரும் சட்டசபை தேர்தலில், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தோம். அடுத்த, 15 நாட்களில், 38 மாவட்டங்களிலும் கூட்டத்தை கூட்டி, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கருத்துகளை கேட்டு, எங்கள் முடிவை அறிவிப்போம். கடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் போட்டியிட்டோம். எங்களைப் பொறுத்தவரை, இன்றுவரை அக்கூட்டணியில்தான் இருக்கிறோம். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னம் தரப்பட்டது. இந்நிலை தொடர்ந்ததால், கடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டேன். என்னை தோற்கடிக்க நடந்த சூழ்ச்சிகளை எல்லாம் மீறி, 33 சதவீதம் அதாவது 3.42 லட்சம் ஓட்டுகள் பெற்றேன். இது எங்களின் நியாயங்களுக்கு கிடைத்த வெற்றி.மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது, எங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது. அவரை சந்திக்க நேரம் கேட்கவில்லை. மறைமுகமாக யாரிடமும் பேச்சு நடத்தவில்லை. தே.ஜ., கூட்டணியில், 9 கட்சிகள் உள்ளன. பழனிசாமி தவிர, மற்ற அனைத்து தலைவர்களும் எங்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். தே.ஜ., கூட்டணிக்கு யார் தலைமை என்பதை பேசிதான் முடிவெடுக்க முடியும். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர். கூட்டணி தொடர்பாக அவருடன் பேசுவேன். அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது, எங்கள் நிலைப்பாடு. அப்படி இணையும்போது யார் தலைமை என்பதெல்லாம் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்க்கு

பாராட்டு''அன்பு சகோதரர் விஜய், அரசியல் கட்சி துவங்கியபோதே வரவேற்றேன். அவரது இலக்கு, எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அரசியல் செயல்பாடுகளை பார்த்துதான் சொல்ல முடியும் என்று சொல்லியிருந்தேன். ''நல்ல இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவர் அடுத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் கவனிக்கிறேன்,'' என்றார் பன்னீர்செல்வம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ramesh
மே 16, 2025 13:42

பன்னீர் செல்வம் உதாசீன படுத்திய பிஜேபியை விஜய் உடன்சேர்ந்து எதிர்க்கலாம் . அது ஓன்று தான் வழி . dmk வுக்கு வந்தாலும் மரியாதை இருக்காது


S.L.Narasimman
மே 16, 2025 11:59

அமித்சா ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை போலும்.


SENTHIL NATHAN
மே 16, 2025 11:35

காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது.


Palanisamy T
மே 16, 2025 10:19

இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. இதுதான் தங்களுக்கு கிடைத்த முதல் மரியாதை, இதுதான் ஆரம்பம். அரசியலில் யாராகயிருந்தாலும் ஆதாயத்தோடும் சுயநலத்தோடும் சுயமரியாதைக் கெட்டு இருந்தால் இப்படித்தான் நடக்கும். இவர்கள் இப்போதே இப்படி. இவர்கள் நாளை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டால் என்னநடக்குமென்று எண்ணிப் பார்க்கமுடியவில்லை.


Saran
மே 16, 2025 09:50

Please take rest from the politics M.P


மணி
மே 16, 2025 09:46

பந்திலயே இடமில்ல


Lakshminarasimhan
மே 16, 2025 06:59

சும்மா அண்ணாமலை க்கு சொம்படிக்கும் வேலைய நொறுக்க வேண்டும் அவரை தலைமையில் இருந்து நீக்கி நீண்ட நாள் ஆகியும் அண்ணாமலை பெயரை உச்சரிப்பது நியாயம் இல்லை திரு நைனார் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து பாஜகவை வளருங்கள் வெட்டியா அண்ணாமலைக்கு சொம்படிக்காதீர்


Vasan
மே 16, 2025 06:43

Jayalalithaa trusted O.Panneer Sekvam and made him the interim Chief Minister, whenever she had to step down. But Sasikalaa forced OPS to quit and made Edappadi Palaniswami the Chief Minister. This caused split in the party. Now it is time for all the factions of the ADMK to forget the past differences and get united and con the elections under the common symbol "Two Leaves" and regain the vote share, which, at the moment is split and favouring their arch rival DMK. Good luck.


Palanisamy T
மே 16, 2025 11:49

Well written short . You maybe right about OPS. ADMK has lost their self-respect and dignity long ago . Although I may not favour DMK rule, look where is Tamilnadu economically today next to Maharashtra, the biggest industrial state in India. Today the Tamilnadu GDP is almost close to reaching Pakistan GDP. Well done State Government. Hope both parties settle their differences for the good of future people of Tamilnadu.


Raja k
மே 16, 2025 06:42

நீங்கள் அங்கம் வகிக்கிற தேசீய ஜனநாயக கூட்டணியீல் நீங்களே தலைமை ஏத்துக்குங்க


மோகனசுந்தரம்
மே 16, 2025 06:23

திரு பன்னீர்செல்வம் அவர்களே நீங்கள் பொறுப்பில் இருந்த பொழுது தொண்டர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால் தான் இன்று நீர் தனிமையில் உள்ளீர். அண்ணாமலை இருந்தது வரையில் உமக்கு நல்ல மரியாதை பிஜேபியில் கிடைத்துக் கொண்டிருந்தது. நல்ல வழியை பார்த்துக் கொண்டு போக வேண்டியது உமது கடமை. அண்ணாமலை என்ற ஒரு நல்ல தலைமை இருந்தது வரையில் பிஜேபிக்கு நல்ல மரியாதை உண்டா இருந்தது. இன்று அது எங்கே என்று தேட வேண்டியதாகி விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை