உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!

சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி: சிவகாசி அரசு பள்ளியில் மகள் அன்பிற்கினியாளை இரண்டாம் வகுப்பில் நீதிபதி விஜயபாரதி சேர்த்துள்ளார்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இடம் மாற்றப்பட்டு, சிவகாசி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் சேர்ந்துள்ளார். இவரது மனைவி கங்கா, விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.இவர்கள், தங்கள் மகள் அன்பிற்கினியாள், 7, என்பவரை விஸ்வநத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். தலைமை ஆசிரியர் தனபால், உதவி ஆசிரியர் முருகன் விண்ணப்ப படிவத்தை கொடுத்து பள்ளியில் சேர்த்தனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'நீதிபதியின் மகளை அரசு பள்ளியில் சேர்த்தது பிற பெற்றோர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Muruga Raj
ஜூன் 11, 2025 11:16

ஐயா நீதிபதி அவர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் தங்களின் மகளை அரசு பள்ளியில் சேர்த்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எனது இரண்டு குழந்தைகளும் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர் தங்களைப் போலவே மற்றவர்களும் அரசு பள்ளிகளில் தனது மாணவர்களை பிள்ளைகளை படிக்க வைப்பார்கள் தங்களின் செயல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக அமையக்கூடும் மேலும் பள்ளி நிர்வாகமும் திறமையாக செயல்படும் வாழ்க வளமுடன்


vel murugan
ஜூன் 10, 2025 19:24

வாழ்த்துக்கள்.முன்னுதாரனம் ...நீதீபதிகளில் 1% மட்டுமே இவ்வாறு இருக்கிறார்கள்.


K.seenivasan K.seenivasan
ஜூன் 10, 2025 18:54

வாழ்த்துக்கள் sir


Ramesh Natarajan
ஜூன் 10, 2025 15:44

நல்ல செய்தி. பிறருருக்கு எடுத்துக்காட்டாக அமையும். இனிமேலாவது அரசு பள்ளிகளின் தரம் உயரும்.


MUTHUKUMAR C
ஜூன் 10, 2025 15:24

அப்படியே தமிழ் மட்டுமே என் உயிர், தமிழ் மட்டுமே என் மூச்சு என்று பொய் சொல்லி இந்த தமிழ் நாடு மக்களை முட்டாளாக்கும் கூட்டம் அவர்கள் பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் படிக்க வைத்த வரலாறு எதுவும் இல்லை, ஆனால் ஹிந்தியை அனுமதிக்கு மாட்டோம் என்று மார் தட்டிக்கொள்ளும் சிலர் இருக்கும் வரை தமிழகம் உருப்பட வாய்ப்பில்லை.


Sundar R
ஜூன் 10, 2025 15:12

12வது வகுப்பு வரை கல்வியையும், அனைத்து மாவட்டத் தலைநகர்களில் பெரிய மருத்துவமனைகளையும், எல்லா கிராமங்களிலும் சிறிய மருத்துவமனைகளான. PUBLIC HEALTH சென்டர்- களையும் கட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கட்டணம் இல்லாத மருத்துவ சிகிச்சைகளையும் அளிக்க வேண்டியது பொதுமக்கள் வரிப்பணத்தில் மாநில அரசு செய்ய வேண்டிய முக்கியமான கடமை. இது நம் பாரதத்தைத் தவிர எல்லா நாடுகளிலும் பள்ளிக்கல்வியும், மருத்துவமும் இலவசம். ஆசிரியர் பணியிலும், மருத்துவர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளிலும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும். இட ஒதுக்கீடு இருந்தால், யோக்கியதை குறைவான ஆசிரியரிடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்காது. இட ஒதுக்கீடு முறையில் வந்த யோக்கியதைக் குறைவான மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிப்பார்கள். Second Opinion, Third Opinion என்று மேலும் பல நல்ல மருத்துவர்களை நாடி வயதான காலத்தில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கும். அமெரிக்காவில் பள்ளிக்கல்வி இலவசம். கனடாவில் பள்ளிக்கல்வியும், மருத்துவமும் இலவசம். உலகெங்கும் அனைத்து நாடுகளிலும், பள்ளிக்கல்வி இலவசம். நம் தமிழகத்தில் தேசவிரோத , பிரிவினைவாத, சமூகவிரோத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளான திமுக, தவெக, விசிக ஆகியோர் தங்களுக்கு சொந்தமாக ஏராளமான தனியார் பள்ளிகளை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு ஒரு லகரத்திற்கு குறையாமல் ஃபீஸ் வாங்கி குறுகிய காலத்தில், விரைவாக அவர்கள் கோடாடீஸ்வரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் பள்ளியில் ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவை மொழிப் பாடங்களாக இருக்கின்றன. ஆனால், அரசு பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை தேசிய கல்விக் கொள்கை மூலம் கட்டணமின்றி படிக்கும் வாய்ப்பை ஹிந்தி திணிப்பு என்று சொல்லி இதே கம்மனாட்டிகள் தடுக்கின்றனர். திமுக போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, மின்சாரம், விளையாட்டு திடல், மாணவர்களுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான மாத சம்பளம், ஆகியவை பற்றி ஒன்றும் கவலைப்படாமல் இருப்பார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு BONDED LABOURER மாதிரி பிரதி மாதம் ₹. 15,000/- வழங்கப்படுகிறது. சில காலம் கழித்து, அரசு பள்ளிகள் DILAPIDATED CONDITION- க்குப் போனால் பள்ளியை மூடி விடுவார்கள். அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அரசு பள்ளிகள் இந்த மாதிரி கவலைக்குரிய நிலையில் இருக்கும் சூழ்நிலையில், மதிப்பிற்குரிய சிவகாசி நீதிபதி அவர்கள் தன்னுடைய மகளை அரசு பள்ளியில் சேர்த்தது பாராட்டுக்குரியது. இவரது இந்த செயல்பாடு பிறருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. அரசு ஊழியர்கள், அரசு பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் கண்டிப்பாக தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும். பிறரும் சேர்க்கலாம். அனைத்து மக்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். அதற்கு ஏதுவாக, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு அனைத்தும் சிறந்த தரத்துடன் FULLY EQUIPPED - ஆக இருக்க வேண்டும். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதய வித்யாலயா பள்ளிகளை இன்னும் அதிகமாக எல்லா மாவட்டங்களிலும் ஆரம்பித்து ஏராளமான மாணவ, மாணவிகளைப் பயிற்றுவிக்க வேண்டும். அந்த மாணவமணிகள், ISRO, DRDO, DEFENCE EQUIPMENTS MANUFACTURING COMPANIES - லவ் பணிக்கு சேர்ந்து அறிவியல் , பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்களில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்து நம் நாட்டிற்கு அர்ப்பணித்து, அம்மாணவர்களும், நம் நாடும் பெரும்புகழ் பெறவேண்டும். தற்போது மாணவ, மாணவிகளின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பவர்கள் தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளான திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக மற்றும் மநீம ஆகிய கட்சிகள். அனைத்து ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து, இக்கட்சிகளை தேர்தல் களத்திற்கு வரவிடாமல் விரட்டி அடிக்க வேண்டும். குறிப்பாக 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்ய வேண்டும். வாழ்க சிவகாசி நீதிபதியும், அவரது மகளும்.


P. SRINIVASAN
ஜூன் 10, 2025 14:28

ஒண்ணுமே பேசல


Karuthu kirukkan
ஜூன் 10, 2025 11:29

பாவம் நேர்மையான தமிழ் பற்று உள்ள நீதியரசர் போல தெரியுது.. ..அவர் பணியாற்றும் நீதிமன்றத்தில் நீதி தேவதை ஒரு பக்கம் சாயாமல் நிற்பாள் ...


Varuvel Devadas
ஜூன் 10, 2025 11:28

This is purely meant for publicity. What is great about it? The judge has two horns, or what? It is his wisdom, thats it. There is no need not to celebrate it.


கல்யாணராமன்
ஜூன் 10, 2025 11:25

அம்மா அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியை. மகளை அரசு பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்த்தால் ஆசிரியை கூடவே தகப்பனார் நீதிபதி இருவருமே விமர்தனத்திற்கு ஆளாவார்கள். இதற்கு அஞ்சியே தன் பெண்ணை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். இதை ஒரு பெரிய சாதனையாக விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புகைப்படம் எடுக்கும்போது அந்த நீதிபதி விளம்பரம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.


K.seenivasan K.seenivasan
ஜூன் 10, 2025 18:53

Vazahalthukkal sir


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை