உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்

ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்

சென்னை: தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: ஆர்எஸ்.எஸ் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதூறாக கருத்துக்களை தெரிவித்து, நூறாண்டு கண்ட சேவைக்கு இலக்கணமான உலகம் போற்றும் தலைசிறந்த மனிதநேய இயக்கத்தின் நன்மதிப்பை, பெருமையை, வரலாற்றுச் சிறப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறாக பேசிய முதல்வர் ஸ்டாலின் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.கரூர் கோர விபத்தில் 41 பேர் பலியான உயிரிழப்பு சம்பவத்தின் அரசியல் சதி குறித்து, நிர்வாக சீர்கேடுகள் குறித்து உண்மைகளை வெளிக்குணர தமிழக மக்கள் கோபத்துடன் கேள்வி கேட்பதை திசை திருப்பும் முயற்சியாக முதல்வர் ஸ்டாலின், ஆர்எஸ்எஸ் மீது பொய் பிரச்சாரம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் பற்றி இப்போது பேசும் ஸ்டாலின், கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். திமுகவின் தலைவர் முத்தமிழறிஞர் உங்கள் தந்தை கருணாநிதி திராவிடர் கழகம் போல் ஆர்.எஸ்.எஸ்.,சும் ஒரு சமுதாய இயக்கம் என்று தான் சொன்னார். இப்போது வயதாகி விட்டதால் இந்த வரலாறை நீங்கள் மறந்து விட்டீர்களா? தேர்தல் அரசியலுக்காக மறைத்து விட்டீர்களா? முதல்வர் அவர்களே! ஆர்.எஸ்.எஸ் ஐ அவதூறாக சித்தரிப்பது கடும் கண்டனத்துக்குரியது. சட்ட விரோதமானது. முதல்வர் ஸ்டாலின் ஆர்.எஸ்.எஸ் மீது சுமத்திய சட்ட விரோத கொலைப்பழி பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் குறித்து அவதூறு பேசிய முதல்வர் ஸ்டாலினை முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் ஆத்மா மன்னிக்காது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SULLAN
அக் 04, 2025 00:52

ஆமாம் மன்னிக்காதுதான் ?? உங்களை பேச விட்டு வேடிக்கை பார்ப்பதை. சும்மா சுளுக்கு எடுங்கள் பார்க்கலாம் ஒரு கை . தமிழகத்தில் நமது கொடிதான் பறக்கும்.


ramesh
அக் 03, 2025 21:12

இறந்த 41 பேரின் ஆன்மா விஜய் மற்றும் பிஜேபி காரர்களை மன்னிக்காது என்பது தான் உண்மை


ramesh
அக் 03, 2025 20:48

ஓன்று மட்டும் இந்த கரூர் நெருக்கடியில் சிக்கி உயிழந்தவர்கள் மூலம் இது வரையில் இருந்த ரகசியம் வெளி வந்து இருக்கிறது . நாடு முழுவதும் அனைவருக்கும் தெரியும் விஜய் ரசிகர்களின் பொறுப்பற்ற தனத்தால் இறந்தார்கள் என்று . ஆனால் பிஜேபி அரசியலில் விஜயை வளைக்க ஒரு பொய்யை எப்படி ஊத்தி பெரிதாக்க முயலுகிறீர்கள் . முழு பூசணிக்காயை ஒரு பானை சோத்துக்குள் மறைக்க முடியாது.மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல .


சமீபத்திய செய்தி