உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக பொது செயலாளரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக பொது செயலாளரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக பொது செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hen62w9a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகிய இருவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். வன்முறையை தூண்டி கிளர்ச்சியை உண்டாக்கும் எண்ணத்தோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sivagiri
அக் 01, 2025 16:02

ஆக விஜயையும் , அவரது கட்சியையும் , பல சுள்ளான் ரௌடி கட்சிகளோடு சேர்த்திட போறாங்க போல , இனிமே எங்க போனாலும் , என்ன பண்ணாலும் , தீவிர கண்காணிப்பில் இருக்க போறாங்க . .


Jay Al
அக் 01, 2025 15:01

கைதுக்கு பயந்து விஜய் ஒளிந்து கொண்டார்


Perumal Pillai
அக் 01, 2025 14:47

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் ஒளிந்திருந்த இடத்தில தான் இவரும் ஒளிந்திருப்பார் .


கொங்கு தமிழன் பிரசாந்த்
அக் 01, 2025 14:02

பிடிச்சு உள்ள போடுங்க சார் மூணு பேரையும்.


Moorthy
அக் 01, 2025 13:29

எங்காவது ஓரிடத்தில் இருப்பார்...


ஆரூர் ரங்
அக் 01, 2025 13:11

கைது செய்ய முடியுமா?


திகழ்ஓவியன்
அக் 01, 2025 13:39

கோழையை கைது செய்து என்ன பயன்


திகழ்ஓவியன்
அக் 01, 2025 12:30

இன்னும் விஜய் திருந்தலை செய்த தவறை அரசின் மீதே மடை மாற்றுகிறார் , 12 மணிக்கு வருவேன் என்றவர் அப்போதே சாப்பாடு பொட்டலம் தண்ணீர் வசதி செய்து கொடுத்து இருக்கலாம் அனால் வந்தது இரவு 7.30 மணிக்கு அவருக்கு மனசாட்சி வேண்டாம் , 7 மணி நேரம் காக்க வைத்தோமே என்று


G Mahalingam
அக் 01, 2025 12:13

ஆதவன் அர்ஜூனா மட்டும் வழக்கு பதிவு‌ மட்டும். கைது இல்லை. மற்றவருக்கு கைது நடவடிக்கை. என்ன திராவிட மாடல் சட்டம். அந்த மார்ட்டின குடும்பம் திமுகவுக்கு அட்சய பணம் பாத்திரம்.‌‌ ஆகையால் கைது கிடையாது.


Svs Yaadum oore
அக் 01, 2025 12:12

இது சிறுபான்மை விவகாரம் ....அதனால் நடிகன் என்ன பேசினாலும் விடியல் பார்த்து பக்குவமாக மத சார்பின்மையாக பிரச்னையை அணுக வேண்டும் ...இல்லை என்றால் சமூக நீதி சிறுபான்மை வோட்டு விடியலுக்கு ஊத்திக்கும் ...


pakalavan
அக் 01, 2025 12:01

விஜயோட வலது கை - ஒரு லாட்டரி வியாபாரி விஜயோட இடது கை - ஒரு சாராய வியாபாரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை