உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் துயரம்; அரசியல் கட்சியினர் அனைவருக்கும் பாடம்!

கரூர் துயரம்; அரசியல் கட்சியினர் அனைவருக்கும் பாடம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

-நமது நிருபர்-கரூர் விஜய் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்றிரவு நிகழ்ந்த துயரம், பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டும் அரசியல் கட்சியினர் அனைவருக்கும் ஒரு பாடம். தமிழகம் போன்ற கல்வியறிவு மிகுந்த ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு துயரம் நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=atzwb9kl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான காரணங்களை, கூட்டம் நடத்துவோர், அனுமதி வழங்குவோர், கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். 'பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினால் தான் நமக்குப் பெருமை' என்று நினைக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு, கூட்டத்தை பாதுகாப்புடன் வழிநடத்த தெரிவதில்லை. அனுமதி அளிப்போருக்கும், கூடும் கூட்டத்தை கையாளும் ஆற்றல் இருப்பதில்லை.கட்டடத்தில் ஏறுவது, மரத்தில் ஏறி நிற்பது, மின் கம்பம், டிரான்ஸ்பார்மரில் ஏறுவது என்று தலைகால் புரியாமல் திரியும் இளம் தலைமுறையினரை வழி நடத்துவது எவராலும் இயலாத காரியம். அத்தகைய கூட்டத்தை கட்டுப்படுத்த, அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் மட்டும் போதுமானவை அல்ல. எல்லாம் நல்லபடியாக நடந்தால் தான் மட்டும் பெருமைப்பட்டுக் கொள்வது, அசம்பாவிதம் நடந்தால் அடுத்தவர் மீது பழியை போடுவது என்பதே இன்றைய அரசியல்.இதைப்புரிந்து கொள்ளாமல் ஆர்வக்கோளாறில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு சென்று, நெரிசலில் முண்டியடிப்போர் தான் இப்படி உயிரிழக்கின்றனர். நிவாரண நிதியும், இரங்கல் அறிக்கைகளும், இழந்த உயிரை திரும்பத் தராது என்பதை தங்கள் தலைவர்களுக்காக கூட்ட நெரிசல்களில் முண்டியடிக்கும் தொண்டர்கள் கூட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும். இனியாவது, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், கண்டிப்பான ஒழுங்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் கட்சி கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும். இத்தனை பேர் உயிரிழப்புக்கு பிறகும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணாவிட்டால், தமிழகம் பெற்ற கல்வியறிவுக்கு பலன் எதுவுமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Padmasridharan
செப் 30, 2025 19:37

வீட்டுல இருக்கிற நபர்களை விட விஜயம் செய்யும் நடிகர்கள் பெரிதல்ல. அவர் வர வேண்டாமென்றும், ஏற வேண்டாமென்றும் சொல்லியும் அதை செய்பவர்கள் நல்லவர்களாக மாட்டார்கள். நடிப்புத்தொழில் பொது மக்களை போதையில் விட்டிருக்கின்றது. அரசியலில் உதயமாவதற்கு முன் நடிப்பதும், சில அரசியல் கட்சிகள் நடிகர்களை வைத்து பொது மக்களிடம் வோட்டை வாங்கியும் வெற்றி பெறுகின்றனர்.


Srinivasan Narasimhan
செப் 28, 2025 16:39

ஒருத்தருக்கும் பாடம் இல்லை ஏன் என்றால் யாரும் திருந்த போவதில்லை. உயிரிழந்த குடும்பத்துக்கு இதுவரை 32 லக்ஷம் மாநில அரசு 10 விஜய் 10 மத்திய அரசு 2கிடைக்கப் போகுது. வாய அடைச்சாச்சு. கள்ள குரிச்சி காச குடுத்து வாயடச்சாச்சு யாராவது இந்த காசு வேண்டாம்னு சொல்ல போராங்களா. மணிதணிண் உயிருக்கு மதிப்பில்லை.


KRISHNAN R
செப் 28, 2025 15:45

கூட்டம் கூட முடியாத இடத்தில் அனுமதி? திட்டமிட்ட செயல்?... அரசியல் கூட்டம்.... பொது வெளியில் மட்டுமே இருக்க அல்லது வாடகைக்கு... தர வேண்டும்..... எல்லாம்... எலக்சன் போது...... டிரிபிள்" சி "..... மற்றும் பிரியாணி வந்தவுடன் மறந்து போய் விடுவார்கள்


Ramesh Sargam
செப் 28, 2025 15:22

கரூர், அதை கருமாதி ஊர் ஆக்கிவிட்டனர் அரசியல்வாதிகள். அடுத்த ஊரையும் கருமாதி ஊர் ஆக்குவதற்குள் மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது.


SUBBU,MADURAI
செப் 28, 2025 14:50

அப்படி ஏன் ஒரு நடிகனின் கூட்டத்திற்கு உன் புள்ள குட்டிகளை கூட்டிட்டு போக வேண்டும் இப்ப கதறுங்க


rajasekaran
செப் 28, 2025 13:54

ஒரு சமயம் நான் சென்னை ரயிலை பிடிக்க பஸ்சில் போகும்போது பண்ருட்டி நாலு முனை சந்திப்பில் அப்போது குமரிஅனந்தன் அவர்கள் நதிகள் இணைப்பு என்ற பெயரில் வேனில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார். அப்போது பஸ் சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தது. கூட்டம் முடிந்த பிறகு மேலும் அரை மணி நேரம் ஆயிற்று டிராபிக் ஒழுங்கு செய்வதற்கு. கடைசியில் நான் ஒரு மணி துளியில் ஓடி போய் ரயிலை பிடித்தேன். இனிமேலாவது அரசாங்கம் மற்றும் போலீஸ் ரோட்டியில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது. ground இல் தான் கூட்டம் போட வேண்டும் என்று உடேன ஒரு அரசனை வெளியிடவேண்டும்.


amuthan
செப் 28, 2025 13:51

மக்களுக்கு தான் பாடம்.


Anantharaman Srinivasan
செப் 28, 2025 13:38

அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா மாயையை வைத்து அரசியல் தலைவராக உலா வரும் தலைவர்களும் இதுபோல் பணம் கொடுத்து கூட்டத்தை திரட்டி வந்து ஷோ காட்டுவதை இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் தடைசெய்யலாம். TV போன்ற ஊடங்கள் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் தலைவர்கள் அதில் பேசி பிரசாரம் செய்தால் போதாதா..?


Venugopal S
செப் 28, 2025 13:32

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அரசு இயந்திரத்தை விட பொது மக்கள் தான் இது போன்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்ற முக்கிய பாடம் கற்க வேண்டும்!


s.sivarajan
செப் 28, 2025 13:22

தனக்கான தேவைகளையம், பாதுகாப்பையும் தாமே பெற மக்கள் முயற்சி செய்ய வேண்டும், எல்லாவற்றையும் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கக்கூடாது


சமீபத்திய செய்தி