உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு; 2 தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகிறது

சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு; 2 தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகிறது

சென்னை: 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முறைகேடாக நடத்திய, இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் வறுமை காரணமாக பலர் தங்களின் சிறுநீரகத்தை விற்றது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது.

இது, தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரித்து, விரிவான அறிக்கை அளிக்க, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில், தமிழக அரசு குழுவை நியமித்தது. இக்குழு கடந்த மாதம் 22ம் தேதி விசாரணையை துவக்கியது. திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், சிறுநீரக கொடையாளிகள் தொடர்பான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 'மனித உறுப்பு மாற்று சட்டம் 1994'க்கு முரணாக, தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து, நெருங்கிய உறவினர்கள் அல்லாத கொடையாளர்களிடம் பணத்திற்கு உறுப்புகளை பெற்றது தெரிய வந்தது. விசாரணையை முடித்து, அறிக்கையை அரசிடம் வினீத் அளித்துள்ளார். அதை அரசு பரிசீலித்து, அதில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: * திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்றவற்றில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் வழியே நடவடிக்கை எடுக்கப்படும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, இரு தரகர்களான ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் * மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் * மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க, தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நான்கு அங்கீகார குழுக்கள் உள்ளன. இதை சீரமைத்து, மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கி, புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும், ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள குழுக்களை மறு சீரமைப்பு செய்யவும் உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும்* மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களுக்கும், கொடையாளிகளுக்கும், தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் வழங்க, நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்த, மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும் * உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் * உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் குறித்து, உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
ஆக 11, 2025 10:27

ஆக அங்கீகாரம் ரத்து தாற்காலிகமாகதான்.


Yaro Oruvan
ஆக 11, 2025 10:20

திருட்டு முறைகேடு ஆகிவிட்டது இந்த திராவிஷ மூடர் கூட ஆட்சியில் ... விடியல் அஸ்தமனம் ... பை பை விடியல்


Santhakumar Srinivasalu
ஆக 11, 2025 09:36

கோவை மருத்துவமனைகளில் எப்போது துவங்கும்?


Veeraraghavan Jagannathan
ஆக 11, 2025 09:09

உண்மை. ஆனால் அங்கு மற்றும் அதன் பிற கல்லூரிகளில் பணி ஆற்றும் ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் கொடுப்பது இல்லை. பொது மக்கள் இந்த குழுமம் நடத்தும் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கக் கூடாது. எந்தத் தரமும் இல்லாமல் பணம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள்.


உண்மை கசக்கும்
ஆக 11, 2025 08:22

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி இரண்டையும் இழுத்து மூட வேண்டும். தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி இது. கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் நடத்தும் கல்லூரி.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஆக 11, 2025 07:45

இது முறைகேடல்ல. திருட்டு. ஏன் இந்த திருட்டை முறைகேடு என்ற சொல்லை பயன்படுத்தி இவர்களை பாதுகாக்க நினைக்கிறது. அப்பாவி மக்களை ஏமாற்றி கிட்னியை திருடி விற்பவர்களெல்லாம் இப்பொழுது கல்வித்தந்தையாம். நமது பாட்டன் பாரதி இன்னேரம் உயிரோடு இருந்திருந்தால் இந்த திருட்டு திராவிட அதர்மங்களை கண்டு வெகுண்டெழுந்து என்ன பாட்டை பாடியிருப்பானோ என்று தெரியவில்லை.


Padmasridharan
ஆக 11, 2025 07:31

உடல் உறுப்பு தானம் செய்து நடக்கும் அறுவைச் சிகிச்சைகள், மருத்துவர்கள் இலவசமாக செய்கின்றனரா சாமி


S.L.Narasimman
ஆக 11, 2025 07:22

மணல் கனிமவள கொள்ளை சாராய பாட்டில் கமிசன், லஞ்ச லாவண்யம் தாண்டி இப்போது கிட்னி திருட்டும் விடியல் முதல் இடத்திற்கு கொண்டுசென்று சாதனை படைத்துள்ளார்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஆக 11, 2025 12:55

உங்கள் பதிவில் பெரும்பிழை உள்ளது. கனிமவள கொள்ளையென்று சொல்லக்கூடாது " கனிமவள முறைகேடு" அப்படியென்றுதான் சொல்லவேண்டும். சாராய பாட்டில் முறைகேடு அப்படியென்றுதான் சொல்லவேண்டும். லஞ்ச லாவண்யம் அல்ல லஞ்ச முறைகேடு.


ديفيد رافائيل
ஆக 11, 2025 07:15

வரும் தேர்தலில் மக்கள்கிட்ட நல்ல பெயர் வாங்க DMK ன் நாடகம் ஆரம்பமாகிடுச்சு.


Jack
ஆக 11, 2025 07:38

கோஆர்டினேட்டரை பொட்டி பாம்பா ஆக்கிவிட்டார் இந்த அமைதி …


R SRINIVASAN
ஆக 11, 2025 07:13

ஆங்கில மருத்துவர்களிடம் செல்வதை விட ஆயுர்வேத மருத்துவர்களிடம் செல்வது நல்லது. இவர்களிலும் நாடி பிடித்து பார்த்து வைத்தியம் செய்பவர்களிடம் செல்வது சாலச்சிறந்தது. வறுமையினால் சிறு நீரகங்கள் தமிழ் நாட்டில் விற்கப்படுவதை கேட்கும்போது மனம் மிகவும் வேதனை படுகிறது. காமராஜர்,ராஜாஜி போன்றவர்கள் ஆட்சியில் இருந்த பொற்காலம் இனி வருமா என்ற சந்தேகம் வருகிறது


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஆக 11, 2025 12:47

வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை