உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை; மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை; மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

சென்னை; கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 18 மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.அவற்றில் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு மே 17 ம் தேதி கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். எஞ்சிய 14 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 2 மசோதாக்களுக்கு ஜூன் 2ம் தேதி ஒப்புதல் தந்தார்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது, உயிரி மருத்துவக்கழிவுகளை கொட்டினால் தண்டனை விதிக்கும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து இருந்தார். இந் நிலையில், கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ரவி இன்று ஒப்புதல் அளித்து இருக்கிறார். இந்த மசோதா மூலம் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. கடன் தரும் நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
ஜூன் 14, 2025 20:17

தமிழக மக்கள் நலனுக்கு எதிரான மசோதா என்றால் ஆளுநர் ஒப்புதல் கொடுத்து இருக்க மாட்டாரே!


SP
ஜூன் 14, 2025 11:38

மிக மிக தவறான சட்டம், இதை போன்று தான் பள்ளி மாணவ மாணவிகளை அடிக்கக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு தடை விதித்தது அதில் கண்ட பலன் என்ன? ஆசிரியர்களுக்கு அடங்காத மாணவர்கள் உருப்படபோவதில்லை. அது போல தான் இதுவும் வாழ்க ஜனநாயகம்


அப்பாவி
ஜூன் 13, 2025 21:15

வங்கிகளே பயம் வாணாம். பீதி வாணாம். தாராளமா கடன் குடுங்க. வசூல் பண்ண முடியலேன்னா வாராக்கடன் வங்கிக்கு தள்ளிவிட்டு புதுக்கடன் குடுக்க நிதியமச்சகம் ரெடியாக்கீது. 2020 ல இப்பிடித்தானே உங்ஜ பேலன்ஸ் ஷீட்டை கிளியர் செஞ்சாங்க.


vivek
ஜூன் 14, 2025 08:06

காங்கிரஸ் பண்ணாத அட்டூயினா அறிவிலி கோவாலு


தாமரை மலர்கிறது
ஜூன் 13, 2025 21:12

மிக தவறான சட்டம். கடன் கட்டாதவர்களிடம் வங்கிகள் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது. அதிரடி நடவடிக்கைகள் எடுக்காவிடில், சோம்பேறிகள் வங்கிகளை ஏமாற்ற ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு மல்லையாவையே வங்கியால் தாங்க முடிய வில்லை. ஊரில் உள்ளவரெல்லாம் மல்லையா ஆகிவிட்டால், வங்கிகள் காலி.


RAAJ68
ஜூன் 13, 2025 19:48

வங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்ச வேண்டாம். இப்படி எல்லாம் ஒரு சட்டம் வந்தால் எவனும் கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்க மாட்டான் அதுவும் போக்கிரிகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். எனவே கடன் கொடுக்காதீர்கள் கொடுக்காதீர்கள் கொடுக்காதீர்கள்


V Venkatachalam
ஜூன் 13, 2025 19:23

திருட்டு தீய முக காரனுங்க ஆதாயம் இல்லாமல் சட்டம் இயற்றுவான்களா? இதில் கடன் வாங்கி தில்லுமுல்லு செய்பவன்கள் பெரும்பாலும் திருட்டு தீய முக காரனாகத்தான் இருப்பானுங்க. கட்டு மரம் கருணா காலத்தில் இருந்தே அப்படித்தான். இந்த சட்டத்தினால் ஆதாயம் அடைபவன்கள் கட்சி ஆளுங்களா இருப்பானுங்க. இதில் பொதுமக்கள் நலன் என்பது கண்துடைப்பு. சட்டம் அமுலுக்கு வந்து விட்டால் அதற்கு தனி வசூல் பண்ணி ஆட்டைய போடுவானுங்க. இந்த சட்டம் கொண்டு வர மூல காரணத்தை தோண்டினால் இவனுங்க ரகஸிய டீல் வெளியே வந்துரும்.


Kulandai kannan
ஜூன் 13, 2025 19:09

Persons with Tamil Nadu address may be blacklisted by credit card companies


அப்பாவி
ஜூன் 13, 2025 18:45

இனிமே ஒரு பய கடன் குடுக்கமாட்டான்.கடன் குடுத்தாலும் ஆணையை அடகு வெச்சு, ஆட்டு மதிப்புக்கு கடன் குடுப்பான்.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 18:16

இனிமே 200 உ.பி க்களுக்கு கடன் கைமாற்றாக எதுவும் கொடுக்குறதுக்கு முன்னாடி யோசிங்க. ஒன் வே டிராபிக் ஆகிவிடும்.


panneer selvam
ஜூன் 13, 2025 17:43

Thanks Stalin ji , you made every money lenders have to beg for their money at their clients gate . It is the great revolutionary action . There are so many pending cases , where Tamilnadu Transport corporation have failed to pay the compensation to the accident victims family . Let us Jail all the transport higher corporations official along with transport minister for 5 years.


புதிய வீடியோ