உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் உயர்நீதிமன்றம் தடை

தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் உயர்நீதிமன்றம் தடை

மதுரை : இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் மறைந்த தா.பாண்டியனுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மணிமண்டபம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுார் பிரேம்சந்தர் தாக்கல் செய்த மனு: உத்தப்பநாயக்கனுார் அய்யன்கோவில்பட்டியில் என் தந்தை ராஜனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. நிலத்தின் உரிமை தொடர்பாக ராஜன், அவரது சகோதரர் தா.பாண்டியன் (இந்திய கம்யூ.,முன்னாள் மாநிலச் செயலாளர்) இடையே பிரச்னை இருந்தது. ராஜன் 2011 ல் இறந்தார். நான் என் சகோதரர்கள், தாய் மதுரை மூன்றாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். வழக்கு முடிவுக்கு வரும் வரை தடை விதித்தது. அவ்வழக்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது. பாண்டியன் 2021 பிப்.,26 ல் இறந்தார்.இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2024 பிப்.,26 ல் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்ட வந்ததாகக் கூறினர். சில கற்களை வைத்து அதில் கட்சியை கொடியை நிறுத்திச் சென்றனர். சிவில் வழக்கு முடிவுக்கு வராத நிலையில் சொத்தில் யாரும் உரிமை கோர முடியாது. விவசாய நிலத்தில் அனுமதியின்றி, வகைப்பாட்டில் மாற்றம் செய்யாமல் கட்டுமானம் மேற்கொள்ள முடியாது. மணிமண்டபம் அமைக்க அனுமதிக்க வேண்டாம் என தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துத்துறை செயலர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: மணிமண்டபம் அமைக்க யாரும் அனுமதி கோரினால் வருவாய்த்துறை அனுமதியளிக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ