உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின்

மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செம்மொழி அந்தஸ்து, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டக்குடிநீர், சேது சமுத்திர திட்டங்கள் என ஏராளமான திட்டங்கள் மன்மோகன் காலத்தில் தமிழகத்திற்கு கிடைத்தன' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை காமராஜர் அரங்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., இளங்கோவன் படத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலக பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங், இளங்கோவன் ஆகிய இருபெரும் தலைவர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறோம். நாட்டுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமல்ல, எனக்கு தனிப்பட்ட இழப்புதான். நெருக்கடியான காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பிடித்தார் மன்மோகன் சிங்.தமிழர்கள் அதிகளவில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது மன்மோகன் காலத்தில் தான். செம்மொழி அந்தஸ்து, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டக்குடிநீர், சேது சமுத்திர திட்டங்கள் என ஏராளமான திட்டங்கள் மன்மோகன் காலத்தில் தமிழகத்திற்கு கிடைத்தன. பல முக்கியத்துறைகளை தமிழர்களுக்கு கொடுத்தவர் மன்மோகன் சிங். பத்தாண்டுகள் மன்மோகன் சிங் அமைச்சரவை 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர். மன்மோகன் சிங் மறைவு தமிழகத்திற்கு மிக மிக மிகப் பெரிய இழப்பு. தமிழகத்தின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

பேசும் தமிழன்
ஜன 07, 2025 20:03

வேணு மற்றும் ஓவியா போன்ற அடிமைகளை காணவில்லை.... இன்றைக்கு அத்தனை குவாட்டர்களையும்.... வைகுண்டம் அவர்களே தட்டி செல்வார் போல் தெரிகிறது.


veera
ஜன 08, 2025 08:56

உண்மை. மேலும் 200 ரூபாய் ஊக்கத்தொகை அவருக்கே....


theruvasagan
ஜன 07, 2025 19:39

அதைவிட பிரமாதம். இந்திரா ஆட்சி. அப்போதுதான் மிசா கைதுகள். சர்க்காரியா கமிஷன். ஆட்சி டிஸ்மிஸ் போன்ற தரமான சம்பவங்கள் நடந்தன. அந்த பொற்காலத்தை நாங்கள் நினைவுகூர்கிறோம்.


S.Martin Manoj
ஜன 07, 2025 19:20

கடந்த பத்து வருடமாக 2ஜி வழக்கை நிரூபிக்க திறனற்ற வக்கற்ற மத்திய அரசால் எலக்ட்ரோல் பான்ட் மூலமாக பல ஆயிரம் கோடிகளை சுருட்டிய கேடிகளால் நாடு சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது.மன்மோகன் ஆட்சி இந்தியாவின் பொற்காலம்.


panneer selvam
ஜன 07, 2025 18:18

Do not bluff Stalin ji , Chennai metro phase 1 was delayed by your father MK by appointing most corrupt guy as Chennai Metro Chairman , subsequently JJ after becoming CM , she expedited the project . Sethu canal project was a failure after spending 400 crores at that time . Because Tamil is d as Chemmozhi , whole world comes to know about Tamil . All hype boss , no truth .


Radja
ஜன 07, 2025 17:27

அதனால்தான் ன்இதனை லட்சம் கோடி கொள்ளை டிசீங்க. கொள்ளை டிச அதனை கோடிகளும் திரும்ப அரசாங்கத்துக்கு வந்தகனும் ,இல்லனா நாடு ரோட்டில நிக்க வச்சு உனக்கும் உன் திருட்டு குடுமத்துக்கும் சாட்டை அடிதான்.


என்றும் இந்தியன்
ஜன 07, 2025 17:03

மிக மிக சரியான கருத்து சொன்னார் ஸ்டாலின். ஆகவே தான் நாங்கள் அதில் 45% கமிஷன் அடித்து டிக்கெட் எடுக்க வக்கில்லாமல் ரயிலில் திருட்டுதனமாக பிரயாணம் செய்த கோரநிதி சாகும்போது 2.3 லட்சம் கோடி முதலாளி இப்படி தான் ஆனார் என்று இவ்வளவு உண்மையாக யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் ஸ்டாலின் போல - என்ன சுடலை மாயாண்டி ஜோசப் கான் சரிதானே


Kumar Kumzi
ஜன 07, 2025 15:53

ஆமா அந்த அப்பாவி தலையாட்டி பொம்மை மன்மோகனை மெரட்டி பதவிகளை பெற்று திருட்டு திராவிஷ திமுக கொள்ளையடித்ததாக தானே சரித்திரம் சொல்லுது டுபாக்கூர் விடியல்


DUBAI- Kovai Kalyana Raman
ஜன 07, 2025 15:21

ஆமா .. 2ஜி 3 ஜி வருமானம் , கலைஞர் டிவி கு டொனேஷன் , சன் டிவி ,மாறன் வீட்ல 250 BSNL போன் connection ..இப்படி நிறைய திட்டங்கள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 15:15

ஈழத் தமிழர்களால் காங்கிரஸ், திமுக, அதிமுக ஏன்.. இந்தியாவுக்கே கூட காலணா பிரயோஜனம் இல்லை. அப்புறம் ஏன் அவர்களைக் கொல்ல காங்கிரஸ் அல்லது திமுக மெனக்கிடப்போகிறார்கள்?? அவர்கள் சொன்னதும் செய்ய இலங்கை அரசு காங்கிரஸ் திமுக வின் அடிமையா?? ஈழத் தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் இருந்தன. இருக்கின்றன. ஏன் இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் போராடினார்கள்? ஒரு அதிகார பித்துப் பிடித்த சுயநல தீவிரவாதி பிரபாகரன் தான் ஈழத் தமிழினம் அழிய காரணம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 07, 2025 19:05

காலணா பிரயோசனம் இல்லாத ஈழத் தமிழர்களுக்கு கோவை ஆவாரம் பாளையம் பகுதியில் துப்பாக்கிகள் தயார் செய்து கொடுத்தார்கள். கோவையில் பிரபலமான கம்பெனி தயாரித்த லேத்துகள் மாநில அரசுக்கு தெரிந்தே ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பள்ளி கல்லூரி மாணவர்கள் புறக்கணித்து போராட்டம் செய்தார்கள். அதனை அனைத்து திராவிட கட்சிகளும் ஊக்கப்படுத்தின. பிரதமர் ராஜீவ் வேறு உலகின் முதல் மனித வெடி குண்டால் கொல்லப்பட்டார். சம்பந்தப்பட்டவர்கள் ஒற்றை கண் சிவாராசன் அவர் கூட்டாளிகள் கோவை இராமநாதபுரம் கருணாநிதி நகரில் திராவிட கட்சி பிரமுகரால் பாதுகாத்து பெட்ரோல் டேங்கர் லாரி மூலம் பெங்களூர் அனுப்பி வைக்க பட்டார். சிறையில் இருந்தவர்கள் விடுதலைக்காக அனைத்து தமிழக திராவிட கட்சிகளும் வருடக்கணக்காக நீதி மன்றம் ஏறி ஏறி விடுதலை வாங்கி கொடுத்து கட்டி பிடித்து வரவேற்பு.இதெல்லாம் நடந்தது ஒரு அதிகார பித்து பிடித்த சுய நல தீவிர வாதி ஈழத் தமிழினம் அழிய காரணம் பிரபாகரன் என்று இப்போது தான் தெரிந்ததா. நல்லது இப்போது யாவது உணர்ந்தது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 07, 2025 15:08

சனாதன தர்மத்தின் படி இறந்தவர்கள் பற்றி புறம் பேசக் கூடாது என்று ஒன்று உள்ளது. இறந்தவர்கள் எவ்வளவு கொடியவராக இருந்தாலும் தவறாகவோ அவர் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி இகழ்ந்து பேசக் கூடாது என்று சனாதன தர்மத்தில் உள்ளது. ஆகவே தமிழக முதல்வர் சனாதன தர்மப்படி பேசியுள்ளார். அவருடைய நண்பரும் உடன் பிறவாத தோழருமான திரு. ராகுல் கூட மன்மோகன் இறந்து பாஜக கூட ஒரு வாரம் துக்கம் அனுஷ்டித்து நிகழ்ச்சிகள் ரத்து செய்து விட்டது ஆனால் நண்பர் தமிழக முதலமைச்சர் விழா மேல் விழா வைத்து கொண்டு உள்ளார் என கோபித்துக் கொண்டு வெளி நாடு சென்று விட்டார். அவர் திரும்ப வர வேண்டும் என்றால் மன்மோகன் பற்றி ஏதாவது நல்லது தமிழக முதலமைச்சர் பேச வேண்டும் என்று மன நல மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார். பாருங்கள் திரு.ராகுல் அவர்கள் இன்னும் இரண்டொரு நாட்களில் தமிழகமே வந்து விடுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை