உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில், இன்று மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:'பெஞ்சல்' புயல் பாதித்த, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில், 500 மருத்துவ முகாம்கள், இன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடத்தப்படும்.சென்னை மாநகராட்சியில் மட்டும், 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். மற்ற மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப, முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.முகாம்களில், காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற, அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும்.இதற்கான மருந்துகள் மற்றும் ஓ.ஆர்.எஸ்., கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்றவற்றை, தேவைக்கு அதிகமாக வைத்திருக்க, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்படும் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 08:41

சிறப்பு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, உண்மையிலேயே மக்கள் நலனுக்காக நடக்கும் ஆட்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். துணை முதல்வர் நேற்று பொதுமக்களில் பலரிடம் போனில் பேசி, உதவிகளை உறுதி செய்தார். எல்லாத் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் மிகவும் நன்றாக செயல்படுகிறார்கள். பாராட்டுக்கள். நன்றி.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 01, 2024 12:41

அரசு மருத்துவமனைகளிலேயே போதுமான மருந்துகள் இல்லை ..... பணியில் இருக்கும் மருத்துவர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் அன்றாடம் செய்திகளில் வரும் நிலையில், மருத்துவ முகாம்களில் என்ன வழங்குவார்கள் ???? பாண்டேஜ் துணியும், டெட்டாலும், பாராசிட்டமால் மாத்திரையும்தானே ???? அவையாவது இருக்குமா ????


சமீபத்திய செய்தி