உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மனைவிக்கு நன்றி சொன்ன எம்.எல்.ஏ.,

அமைச்சர் மனைவிக்கு நன்றி சொன்ன எம்.எல்.ஏ.,

சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அவரது மனைவிக்கும், தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனி நாடார் நன்றி தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று, உணவு, கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பழனி நாடார், ''தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம், 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது. ''இதற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நேரில் வந்து, கும்பாபிஷேகத்தை சீரும் சிறப்புமாக நடத்தி தந்த அமைச்சர் சேகர்பாபுவின் துணைவியாருக்கும் தென்காசி மக்களின் சார்பில் நன்றி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ