உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை கோரி போராட்டம் எம்.ஆர்.பி., நர்ஸ்கள் கைது

வேலை கோரி போராட்டம் எம்.ஆர்.பி., நர்ஸ்கள் கைது

சென்னை,:சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக, 72 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது:தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, எம்.ஆர்.பி., நர்ஸ்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை