உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகனின் அறுபடை வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட நவாஸ் கனி ஆதரவாளர்கள்

முருகனின் அறுபடை வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட நவாஸ் கனி ஆதரவாளர்கள்

மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலையின் புனிதத்தை காக்கும் வகையில், அங்கு உயிர்ப்பலி கொடுத்து சமைத்து சாப்பிட, போலீசார் தடைவிதித்துள்ள நிலையில், ராமநாதபுரம் எம்.பி.,யும், வக்புபோர்டு வாரிய தலைவருமான நவாஸ் கனி ஆதரவாளர்கள் , மலைப் படிக்கட்டில் பிரியாணி சாப்பிட்டனர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்றதை, போலீசார் தடுத்தனர். 'வழிபடத் தடையில்லை; உயிர்பலி கொடுக்கத்தான் தடை' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை பொருட்படுத்தாமல், கடந்த 18ல், ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக கூறி சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மலையேற முயன்றனர். இதற்கிடையே மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் நேற்றுமுன்தினம், நவாஸ் கனி எம்.பி., திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை ஆய்வு செய்ய வந்தார். அங்குள்ள போலீசாரிடம், 'மலை மேல் உணவு கொண்டு போக எழுத்துப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளதா?' எனக் கேட்டார்; போலீசார் 'இல்லை' என்றனர். அவருடன் வந்தவர்கள், 'பார்சல் கொண்டு வந்து சாப்பிடவும் தடை உள்ளதா?' எனக் கேட்க, 'இல்லை' என போலீசார் கூறினர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட அவர்கள், தயாராக பார்சலாக வாங்கி வந்த பிரியாணியை, மலை படிக்கட்டுகளில் வைத்து அமர்ந்து சாப்பிட்டனர். இதற்கு, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

புனிதமாகக் கருதப்படும் மலைமீது, உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என்று, தொடர்ந்து போராடி வருகிறோம். அசைவ உணவை வேறு இடத்தில் சமைத்து எடுத்து வந்து மலையில் எந்த இடத்திலும் அமர்ந்து சாப்பிட்டாலும், அதுவும் புனிதத்தை பாதிக்கும் செயல்தான். காலம் காலமாக ஹிந்து - முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருந்து வரும் நிலையில், சில அமைப்புகளின் துாண்டுதலால், திருப்பரங்குன்றம் மலையை, பிரச்னையாக்கி வருகின்றனர். ஆதிகாலத்தில் இருந்து என்ன நடைமுறைகள் இருந்ததோ, அது தொடர வேண்டும். ஹிந்துக்களின் புனிதத்தை பாதிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் போராட தயங்க மாட்டோம். முருகன் மலையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 120 )

maruthu pandi
பிப் 18, 2025 15:59

இந்திய தாய்நாட்டின் இதயத்தை 3 ஆக பிளந்து வளமிக்க பஞ்சாப் சிந்துநதி பாயும் நிலத்தையும் கங்கை கடலில் சங்கமிக்கும் பங்காளதேசத்தையும் கூறுபோட்டு பாகப்பிரிவினை செய்துகொண்டபோதே இந்திய இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது, இது இனி இந்துஸ்தானம் என அழைக்கப்படும் என்று ஆண்ட்ரியா காந்தியும் நேருவும் சட்டம் இழைக்க தவறினர் . இந்தியாவை அணைத்து மதத்துக்கும் உரிய நாடு என அறிவித்துக்கொண்டனர் .அதனுடைய பலனை நாம் இன்று அனுபவிக்கிறோம்


Senthoora
ஜன 31, 2025 04:51

உண்மையில் இவர்கள் ஹமாஸ் தொழுகை செய்பவர்களாக இருந்திருந்தால், புனித குரானை படித்து அதன் படி நடப்பவர்களாக இருந்தால் இந்த மாதிரி மாற்றுமதத்தை கேவலப்படுத்த மாட்டார்கள். இவர்கள் இஸ்லாம் மதத்துக்கு தகுதி இல்லாதவர்கள் .


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 13, 2025 23:17

அப்படி பாத்தா திருப்பரங்குன்றம் சமணர் கோவிலாக மாற்றி அமைக்க வேண்டும்.


Ramalingam Shanmugam
ஜன 29, 2025 18:48

வீரமணியை கவனித்த தாமரை கனி மறுபிறவி எடுத்து வரமாட்டாரா


RAJ
ஜன 29, 2025 07:29

மசூதி பக்கத்தில் கோயில்களை கட்டுவோம்.. _____ இறைச்சி கடையை தொடங்குவோம் ... .. ஒண்டவந்த பிடரி நம்மை சீண்டுவதா? .. விரட்டுவோம்ம்ம்.


r.thiyagarajan
ஜன 27, 2025 23:13

டியர் நவாஸ் கனி யு திங்க் யு ஆர் கிரேட் … பட் கடவுள் ஒன்னு யு ஹவ் டு திங்க் .. யு ஹவ் டு சி தி கொன்செயூன்சஸ் …ஹி will decide wait ன் see….


திண்டுக்கல் சரவணன்
ஜன 27, 2025 13:00

இந்து மதத்திறக்கு இவர்கள் மரியாதை கொடுப்பதில்லை என்பதை ஹிந்துக்கள் உணர்ந்துகொண்டால் போதுமானது.


sankar
ஜன 27, 2025 11:13

முருகன் படைவீட்டில் முஸ்லீமுக்கு என்ன வேலை. சர்ச்சைக்குரிய தர்காவை வேறு இடத்துக்கு மாற்றுவதே முறை.


Karthik
ஜன 26, 2025 10:45

This is wrong attitude, in past everyone were hunters and so, why don't you follow this path.. go to forest for survival. Please go and read about Adi Shankarayar, how he saved Sanatana Dharma and defined rules and regulations on temple and worship places., etc. Hinduism is a way of life, if you cannot follow, be away from it.


Prabagar B.
ஜன 24, 2025 22:46

நம் முன்னோர்கள் எல்லோருமே மாமிசம் சாப்பிட்டவர்கள். கடவுளுக்கும் சைவ/அசைவ உணவுக்கும் என்ன சம்பந்தம் தெரியல. யார் சம்பந்தம் படுத்துனாங்க தெரியல. நமக்கு ரொம்ப சின்ன யோசனை அத பத்திரிக்கைகாரர்கள் பணம் பண்ண பயன்படுத்துகிறார்கள். உணர்ச்சிவசபட்டு நிதானத்தை இழக்க வேண்டாம்


திண்டுக்கல் சரவணன்
ஜன 27, 2025 13:05

முருகன் கோவிலில் உங்க முன்னோர்கள் சாப்பிட்டுள்ளார்களா என வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள். என்ன சாப்பிடுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அது எங்கே என்பதுதான் கேள்வி. சில இடங்களில் தவிர்க்கப்படவேண்டும்.


Balamurugan
ஜன 24, 2025 17:05

இவனை கைது செய்ய சட்டத்தில் இடமில்லையா. அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களே தூண்டிவிட்ட செயலா? மதக்கலவரம் தூண்டிவிட முயற்சிக்கிறார் ஆனால் இன்னும் பல இந்துக்கள் இன்னும் சொரணை இல்லாமல் இருப்பதால் தான் இவனை போன்ற தருதலைகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அறநிலைத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் என்னத்த புடுச்சி ஆட்டிகிட்டு இருக்கான்.


Senthoora
ஜன 31, 2025 04:57

உண்மையிலே நான் ஒரு நீதிபதியாக இருந்தால் இவரை ஒரு மசூதியில் அடைத்து, 7 நாட்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 ணிவரை குரானை ஒதசொல்லியிருப்பேன். அப்பவாது மண்டையில் ஏறும்.


புதிய வீடியோ