உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அல் குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு; 22 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

அல் குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு; 22 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

சென்னை : அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவோரை கைது செய்ய, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் 22 இடங்களில் நேற்று, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகள், கடந்த ஏப்., 22ல், அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இக்கொடூர சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், நாட்டின் பல மாநிலங்களில் அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணிகள் நடப்பதை கண்டறிந்தனர். மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப் படுவதாகவும், அவர்களுக்கு புகார்கள் சென்றன. அதற்கு ஏற்ப, தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதி அஹலதுர் முகமது, 22, என்பவர், தமிழக காவல் துறையின் ஏ.டி.எஸ்., எனும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரின் மொபைல் போனில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த விபரங்கள், அவரின் பயண திட்டங்கள் இருந்ததும் தெரிய வந்தது. சம்பாதிக்கும் பணத்தில் 40 சதவீதத்தை ஆயுதம் வாங்க சேமித்து வந்ததும் கண்டறியப்பட்டது. அவரது கூட்டாளிகளும் தமிழகத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அஹலதுர் முகமது பதுங்கி இருந்த இடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இவர் பற்றி தொடர் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பயங்கரவாத சதி செயல்களை முறியடிக்கும் வகையிலும், அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபடுவோரை கைது செய்யவும், பீஹார், உ.பி., தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீரில், 22 இடங்களில் தனித்தனி குழுக்களாக சென்று, நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். துாத்துக்குடி, தாளமுத்து நகர் அருகே சிலுவைப்பட்டி பகுதியில், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு தங்கியிருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷா ஆலம், 18, என்பவரிடம், காலை 6:00 - 10:00 மணி வரை விசாரணை நடத்தினர். சமீபத்தில் கைதான ஷாகில் என்பவரின் மொபைல் போன் எண், ஷா ஆலம் என்பவரிடம் இருந்ததால் விசாரணை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். பின், அவரை தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவருடன் தங்கி இருப்பவர்களிடம், உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, தாளமுத்து நகர் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ManiMurugan Murugan
செப் 10, 2025 00:09

வெளி மாநிலத்தவர் என்ற ப் திரையில் பலர் உள்ளன ரா என்ற ஐயம் எழுகிறது பாக் குற்றங்கள் தமிழகத்தில் நடப்பதற்கு அவர்கள் உடந்தையாக உள்ளது தெரியவருகிறது அனைத்து மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலத் தாரை ஒரு முறை விசாரிக்கலாம இவ்வளவு பிரச்சனை உள்ளது இதில் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட்டம் முதலில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணியை விசாரிக்கவும்


என்றும் இந்தியன்
செப் 09, 2025 17:07

கேரளா எங்கே???அங்கேயும் சர்வசாதாராணமாக இது நடக்கின்றது.


Rathna
செப் 09, 2025 16:58

போலி செகுலரிஸ்ம் பேசும் மாநிலங்களை தீவிரவாதிகள் தேர்ந்து எடுக்கிறார்கள். சில எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை வோட்டு வங்கி என்று பார்ப்பதால் இது நடக்கிறது. இது அவர்களின் ஆட்சிக்கே கேள்வி குறியாக அமையும்.


Barakat Ali
செப் 09, 2025 11:21

ஹிந்துக்களுடன் அமைதியை விரும்பும் இஸ்லாமியர்கள் என் ஐ ஏ வின் இந்த நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும் ......


Palanisamy T
செப் 09, 2025 09:29

சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் மக்களிடம் இந்த பயங்கர நடவடிக்கைப் பற்றி மக்களிடம் பதில் சொல்லவேண்டும். யார் யார் எங்கு எங்கு எப்படி எப்படியெல்லாம் எவ்வளவுக் காலமென்பதையும் தெளிவுப் படுத்தலாம். அப்போதுதான் மக்களின் ஒத்துழைப்புக்கள் கட்டாயம் கிடைக்கும்.


V RAMASWAMY
செப் 09, 2025 09:13

மக்கள் விழிப்புடனிருந்து செயல்படவேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் அதற்கான துறைக்கு ரகசியமாக விபரங்கள் கொடுக்கவேண்டும். ஏற்கனவே வளர்ந்துவிட்ட, வளரவிடப்பட்ட இந்த நாசக்காரர்களை இனியும் வளரவிட்டால் நாட்டுக்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் ஆபத்துதான்.


Tamilan
செப் 09, 2025 08:44

இந்து மதவாத பயங்கரவாத கூட்டங்களை ஒழிப்பது எப்போது


என்றும் இந்தியன்
செப் 09, 2025 17:11

தமிழனல்லா தமிழனை ஒழித்தபின்பு


பேசும் தமிழன்
செப் 09, 2025 08:04

அனைத்து தீவிரவாதிகளும் தமிழகத்தை தான் புகலிடமாக நினைக்கிறார்கள். தீவிரவாதிகள் மீது அந்தளவுக்கு மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள் திராவிட மாடல் ஆட்கள்.


Sriniv
செப் 09, 2025 07:06

All the culprits belong to a particular religion. TN has become a hiding and recruiting ground for these people, and the delta districts have become very safe hideouts. Is vote bank politics more important than national security ?


என்றும் இந்தியன்
செப் 09, 2025 17:17

Is vote bank politics more important than national security ? Yes 100% When I can make make election success as MLA/MP and make money in Crores why should I care about national security of the 1 nation, 2 sincerity to the humanity, 3 sincerity to the religion / / place of living??? This is the motto.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை