உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிகவும் சிக்கலான விஷயம்; கேரள நர்ஸ் மரண தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்

மிகவும் சிக்கலான விஷயம்; கேரள நர்ஸ் மரண தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, ''மிகவும் சிக்கலான விஷயம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம்'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 38. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1869mjkw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவருக்கு அந்நாட்டு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16ல் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று (ஜூலை 14) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி கூறியதாவது: மத்திய அரசு செல்லக் கூடிய ஒரு கட்டம் உள்ளது. நாங்கள் அதை அடைந்துவிட்டோம். ஏமன் உடன் உலகின் வேறு எந்த நாட்டையும் போல இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இருப்பினும் அதிகபட்ச முயற்சிகள் நடந்து வருகிறது. மிகவும் சிக்கலான விஷயம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம். அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. அந்த நாடு ராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கப்பட வில்லை. ஏமன் உலகின் வேறு எந்த நாடு போல கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: ''ஒரு வெளிநாட்டிற்கு எதிராக எப்படி உத்தரவை நாம் எப்படி பிறப்பிக்க முடியும்? யார் பின்பற்றப் போகிறார்கள்? என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

நிமலன்
ஜூலை 14, 2025 19:48

உங்களால் முடியவில்லை என்று ஒத்துக்கொண்டு எங்கள் கட்சியை அணுகுங்கள். ஒரு போராட்டம், ஒரே ஒரு பேரணி நடத்தி அந்த பெண்ணை மீட்டு கொண்டு வருவோம் என்று கருணாஸ் அவர்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.


Sivak
ஜூலை 14, 2025 19:20

எவன் நம்ம நாட்டு உச்ச நீதிமன்றத்துல கேஸ் போட்டது? நம்ம நாட்டு நீதி மன்றம் ஏமன் நாட்டு அரசுக்கு உத்தரவு போடுவார்களா? வாயால சிரிக்க மாட்டாங்க ...


Sivak
ஜூலை 14, 2025 19:17

இதே ஒரு ஆம்பளையாக இருந்திருந்தால் சத்தம் போடாம போயிருப்பாங்க ... ஒரு கொலைகாரிக்கு என்னமா முட்டு கொடுக்கறாங்க ....


Easwar Kamal
ஜூலை 14, 2025 17:16

கேரள பெண்மணிகளோ ஆண்களோ எந்த எல்லையுக்கும் செல்வார்கள். பணம் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பது தன முக்கிய குறிக்கோ. தன கணவன் இந்தியாவுக்கு திரும்பிய பின்னரும் தன அங்கு இருந்து பணம் சம்பாதிக்க எந்த எல்லையுக்கு சென்று இருக்கிறார் என்பது நடராகவே தெறியும். இப்போது இந்திய இந்த பெண்ணை விடுவித்தாலும் கூட அடுத்த பிலைட்டை பிடித்து வளைகுடா நாட்டிற்கு சென்று ஏதாவது ப்ரிச்சனை இழுத்து கொண்டுதான் இருப்பார்கள். இதை அந்த நாடு மற்றும் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன முடிவு செய்ய வேண்டும்.


கல்யாணராமன்
ஜூலை 14, 2025 16:09

நம்மூர் கோர்ட் அல்ல 20 வருடம் வழக்கை நடத்திக்காட்டி விடுதலை செய்ய சொல்லி உத்தரவு பிறப்பிக்க. கொலைகாரி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.


V Venkatachalam
ஜூலை 14, 2025 15:31

இந்த வழக்கின் சாராம்சம் தெரியவில்லை.‌ வழக்கு யாருக்கு எதிராக தொடுக்கப் பட்டு இருக்கிறது? ஏமன் நாட்டுக்கு எதிராகவா? அல்லது இந்திய மத்திய அரசுக்கு எதிராகவா? வழக்கை தொடுத்தவர் கள் இந்த விஷயத்தில் ஏன் கோர்ட்டுக்கு போகிறார்கள்? அந்த நர்ஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறது. என்னை டார்ச்சர் செய்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறது. டார்ச்சர் செய்தவர்கள் கேட்கும் பணத்தை கேரளா கவர்மெண்ட் கொடுத்து அந்த குற்றவாளியை காப்பாற்றலாமே அதை ஏன் கேரளா கவர்மெண்ட் செய்யவில்லை. வெளி நாடுகளில் இந்திய பிரஜைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டால் மத்திய அரசு போய் அவர்களை அவசியம் காப்பாற்ற வேண்டுமா?


panneer selvam
ஜூலை 14, 2025 16:56

The blood money compensation nearly 1 million USD already arranged but deceased family is not accepting it . What to be done next


Indian
ஜூலை 14, 2025 15:26

சகோதரியே , வருவதை , தைரியமாக எதிர்கொள்ளவும் ....... ஏமன் , ஈரான், பாக்கிஸ்தான் , போன்ற பயங்கர வாதி நாடு தானாக அழிந்து போகும் .....


கல்யாணராமன்
ஜூலை 14, 2025 16:06

ஒரு கொலைகாரிக்கு ஆறுதல், தைரியம் சொல்கிறீர்களா?


Indian
ஜூலை 14, 2025 16:34

. அவள் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்ய வில்லை . அந்த கொடூரனிடம் இருந்து பாஸ்போர்ட் எடுக்க அவள் செய்த செயல் பாதகமாக முடிந்து விட்டது. பெண்கள் மேல் கொஞ்சம் கனிவு காட்டு


Bahurudeen Ali Ahamed
ஜூலை 14, 2025 17:11

இந்த பெண் தற்காப்பிற்காக கொலை செய்யவில்லை திட்டமிட்டு விஷ ஊசி போட்டு கொன்றிருக்கிறாள் அத்துடன் விட்டிருந்தாலாவது இந்தப்பெண்ணை விடுதலை செய்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் கொன்றது மட்டுமல்லாமல் அந்த மனிதனின் உடலை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தியிருக்கிறார் அதை கோர்ட்டிலும் ஒப்புக்கொண்டிருக்கிறார்


Indian
ஜூலை 19, 2025 18:13

கொலை செய்யும் நோக்கம் இந்த பெண்ணுக்கு இல்லை . அவளை அந்த ஏமன் நாட்டு காரன் பல வகைகளில் துன்பப்படுத்தி பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்து கொண்டான் . இவள் அவனிடம் இருந்து பாஸ்போர்ட் எடுக்க செய்த காரியம் தவறாக போய்விட்டது ......... சும்மா வாய்க்கு வந்ததை எழுத வேண்டாம்.


JaiRam
ஜூலை 14, 2025 15:18

சிறுபான்மை இன மகளாக இருந்திருந்தால் மீட்கும் ரகசியத்தை குருமா உதயநிதி ஆகியோர் கண்டுபிடித்து இருப்பார்கள்


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 19:12

பக்ருதின் அலி அஹமத் கூறுவது உண்மை இந்தப் பெண் தன் தற்காப்பிற்காக விஷ ஊசி போட்டாலும் அதில் தவறு காண முடியாது ஆனால் உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு எப்படி மனமும், தைரியமும் வந்தது எனவே இந்த பெண் தண்டனைக்கு உரியவள்தான் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி இறந்தவரின் குடுப்பத்தினர் அதற்கான ஒரு பெரும் பணத்தை இழப்பீடாக வாங்கி கொண்டு இவரை மன்னித்து விட்டால் இவர் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்புண்டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..


Svs Yaadum oore
ஜூலை 14, 2025 15:01

கேரளாவில் வேலை எதுவும் கிடையாது ....புதிய தொழில் எதுவும் வரவும் கேரளா சேட்டன்கள் விட மாட்டார்கள் .....காரணம் கேரளா கடவுள் பூமி ....ஆனால் அவன் மாநிலத்து மருத்துவ கழிவை தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டுவார்கள் .....ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது பிறகு நீதி மன்றம் தண்டனை .....அந்த ஏமன் நாட்டவரை இவர் ரெண்டாம் திருமணம் செய்தாராம் ..ஏற்கனவே கேரளாவில் முதல் திருமணம் ....இதற்கு மத்திய அரசு என்ன செய்யுமாம்?? .....முதலில் கேரளா பெண்கள் கேரளாவில் வேலை பார்க்கட்டும் ....


விவசாயி
ஜூலை 14, 2025 14:45

16 ந் தேதி தூக்கு, 18 க்கு வழக்கு தள்ளி வைப்பு? என்ன நடக்க போகுதுனு தெரியல, முடிந்த வரை ஏமனு க்கு வேலைக்கு போவதை இந்தியர்கள் தவிர்க்க பாருங்கள்


V Venkatachalam
ஜூலை 14, 2025 15:35

எமனுக்கு வேலை செய்ய போகலாம். அதனால் என்ன? போய் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்த விஷயத்தில் இந்த நர்ஸ் கொலை செய்து விட்டு அதை கோர்ட்டில் ஒப்புக் கொண்டு இருக்கிறது.


Indian
ஜூலை 19, 2025 18:22

அப்போ அரபி குற்ற செயலில் ஈடுபடலாமா ?? அவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யலாமா ? பாஸ்போர்ட் பிடுங்கி வைக்கலாமா ? மயக்கம் போட்டு பாஸ்போர்ட் எடுக்க செய்த காரியம் , தவறாக போய்விட்டது . சூழ்நிலை சந்தர்ப்பத்தால் குற்றம் ஆகிவிட்டது . இவ்வளவு கமெண்ட் கொடுக்கும் நீ , தகப்பன் இல்லாத பெண் என்ற முறையில் கொஞ்சம் இரக்கப்படலாம் அல்லவா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை