உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி சமாதிக்கு ரூ.250 கோடி செலவா? கொளுத்தி போட்ட சீமான்

கருணாநிதி சமாதிக்கு ரூ.250 கோடி செலவா? கொளுத்தி போட்ட சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை:கருணாநிதி சமாதிக்கு ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டம்

வரலாறு எம்மை வழிநடத்தும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=muq0zh5t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

என்ன தெரியும்?

தமிழர் இன வரலாற்றை பேச தொடங்கினாலே எப்போது பார்த்தாலும் பழமைவாதம் பேசுவதாக கூறுகின்றனர். இவர்களுக்கு இதை விட்டால் வேறு என்ன தெரியும் என்று இழிவாக பார்க்கிற, பேசுகிற நிலை இன்றுவரை தொடர்கிறது. வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளை சேமித்து வைக்கிற நோட்டு புத்தகம் அல்ல.

ஓட்டு விழுமா?

நான் கருணாநிதி மகன் அல்ல, எம்ஜிஆர் வாரிசும் அல்ல. 36 லட்சம் வாக்குகள் பெற்று மண்ணில் நிற்கிறேன் என்றால் அதுதான் புரட்சி. கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் தனியாக கட்சி ஆரம்பித்து கொள்கை பேசியிருந்தால் நான்கு ஓட்டாவது விழுமா? நாங்கள் சாதி பேசாமல், மதம் பேசாமல் தனித்தே 36 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளோம்.

ரூ.250 கோடி

போய் பாரு, கருணாநிதி 250 கோடியில் சமாதி கட்டி படுத்திருக்கார். ஆனால் உன் பாட்டிக்கு சமாதி இங்கு கடைத்தெருவில் காட்டுகிறேன். ஒரு நாளைக்கு 6 மணிநேரம் பேசி இருக்கிறேன். எல்லா மருத்துவர்களும் இப்படி பேசலாமா என்று கேட்கின்றனர்.

நடிப்பு சூப்பர்

அப்படி பேசியும் இன்னமும் விடியலையே? நேற்று கூட்டத்தில் பேசிவிட்டு போகிறேன். 2 பேர் வந்து மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சூப்பராக நடித்துள்ளீர்கள்? இப்போது எந்த படத்திலும் நடிக்கவில்லையா? மறுபடியும் படம் எதுவும் எடுக்கவில்லையா? என்று கேட்கின்றனர். அதுதான் அவர்களுக்கு பிரச்னை.

லட்டு சாப்பிடுவேன்

லட்டுவில் மாட்டுக் கொழுப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. நான் எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன். எனக்கு லட்டு இருந்தால் போதும். லட்டு பற்றி நாடு முழுவதும் பேசுகின்றனர். என் மீனவர்களை தாக்கி, படகுகளை பறிக்கின்றனர். அதை பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. இவ்வாறு சீமான் பேசினார்.கருணாநிதி சமாதிக்கு 39 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், 250 கோடி ரூபாய் என்று சீமான் கொளுத்திப் போட்டிருப்பது, அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

TRE
மார் 06, 2025 11:35

எவ்ளோ


Shanmugam J
செப் 23, 2024 11:37

இப்போ அரை மெண்ட்டல் முக்கா மெண்ட்டலாக உயர்ந்துள்ளது? என் செய்வது? வந்தவழி மேயும் விலங்கினம்?


Shanmugam J
செப் 23, 2024 11:32

இப்போ அரைமெண்டல் முக்கா மெண்ட்டலாக உயர்ந்தூள்ளளதே? இளி எடுபடாதுங்கோணும்?


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 22, 2024 01:01

லைப் time


Venkatesh
செப் 21, 2024 21:45

ஆனாலும் இந்த திருட்டு கோமாளியை நம்பி பேசற கூட்டம் எந்த மாதிரியான கூட்டம். ....


vadivelu
செப் 21, 2024 20:06

ராமா சிலை, படேல் சிலை இதுக்கும் இடங்களுக்கு மக்கள் பணம் செலுத்து கிறார்கள். அரசுக்கு அதனால் வருமான. மாநிலத்தில் கோயில்களில் சிலைகளை வணங்க காசு வாங்குவது போல இங்கேயும் செய்யட்டுமே. டாஸ்மாக்கை விட தினம் வருமானம் வருமே


Anand
செப் 21, 2024 17:49

உண்மையை கூறுகிறார், ஆனால் தீயசக்தி குடும்ப பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என அவர் மேல் வழக்கு போட்டாலும் போடுவார்கள். அப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சி.


Corporate Goons
செப் 21, 2024 17:46

ராமர் சிலைக்கும், படேல் சிலைக்கும் , சிவாஜி சிலைக்கும் தேவைப்படும்போது இது ஏன் தேவையில்லாமல் போய்விட்டது ?


V RAMASWAMY
செப் 21, 2024 17:19

நன்றாக சொன்னீர்கள் திரு சீமான் அவர்களே. "தமிழர் இன வரலாற்றை பேச தொடங்கினாலே எப்போது பார்த்தாலும் பழமைவாதம் பேசுவதாக கூறுகின்றனர். " மற்றவர்கள் பழமை பேசக்கூடாது. இவர்கள் மட்டும் தங்களுக்கு புரியாத தெரியாத ஒரு கிழவர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக சொன்ன பிராமண ஆதிக்கத்தையே கையில் எடுத்துக்கொண்டு திரும்பாத திரும்ப அதையே பேசிக்கொண்டிருக்கலாம். மக்கள் கவனத்தை திசை திருப்பி அவர்களுக்கு வேண்டிவரை செய்து கொண்டிருக்கலாம். இது நியாயமா? வாக்காள மக்கள் யோசனை செய்யாமல் வாக்களித்தால், அனுபவிக்கவேண்டியது தான்.


T.sthivinayagam
செப் 21, 2024 16:43

இன்னும் பத்து வருடம் ஆனாலும் தமிழக பாஜக சீமான் பேச்சுக்கு பின்னால் தானா தானக வளர வாய்ப்பே இல்லையா மக்கள் கேட்கின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை