உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  செவிலியர்கள் போராட்டம் நீடிப்பு

 செவிலியர்கள் போராட்டம் நீடிப்பு

சென்னை; தமிழகத்தில் ஏழு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் பணியாற்றும், 210 செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, புதிய பணியிடங்களை உருவாக்காமல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர், கறுப்பு பேட்ஜ், கோரிக்கை அட்டை அணிந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தினரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை