உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு

ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு

நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ‛அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்ட பரம்பரை, தங்கலான்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து ‛வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். ‛அட்டகத்தி' தினேஷ், சோபிதா துலிபாலா, லிஸி ஆண்டனி , கலையரசன், ஷபீர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். காரைக்குடியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற ஊரில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நேற்று நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hajrwvu6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், 52, என்பவர் காரில் தாவி செல்லும் காட்சி படம் பிடிக்கப்பட்டது. எதிர்பாராவிதமாக மோகன்ராஜ் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கீழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கவனக்குறைவு அல்லது அலட்சியத்தால் படப்பிடிப்பு நடத்தி ஒரு உயிர் போக காரணமாக இருந்ததாக கூறி அவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

r venkatesan
ஜூலை 14, 2025 21:37

யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் நடக்கும்.


sridhar
ஜூலை 14, 2025 20:38

இன்னுமா படம் எடுக்கிறார் .


தாமரை மலர்கிறது
ஜூலை 14, 2025 19:13

பணம் சம்பாரிப்பதற்காக அடுத்தவரின் உயிரை துச்சமாக கருதும் ரஞ்சித் போன்ற இயக்குனர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 18:27

சினிமா படம் எடுக்கிறேன் பேர்வழி என்று தமிழ் சமுதாயத்தை சீரழிக்கும் இந்த தாழ்வானை பிடித்து ஒரு பத்து நாளைக்காவது சிறையில் அடைத்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.


Anand
ஜூலை 14, 2025 18:23

ராஜராஜ சோழனுக்கே இவனோட முன்னோர்கள் தான் படியளந்ததாக கதை அளந்தவன், இவன் மீதே வழக்கா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை