உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உச்ச நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை

உச்ச நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி: ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில், 1,000த்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன; 2,500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தமிழகம் முழுதும் தற்காலிக, நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் களைகட்டி வருகிறது. அந்தந்த ஊரில் பட்டாசு விற்கப்பட்டாலும், சிவகாசியில் வாங்கினால் விலை குறைவு என, நேரடியாக வாங்குவதற்கு பலர் விரும்புகின்றனர்.இதற்காக ஒரு சிலர் ஆன்லைன் வாயிலாக, பட்டாசுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். பட்டாசு உரிமையாளர்கள், வியாபாரிகள் யாரும் ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்வதில்லை. ஆனால், ஒரு சில புரோக்கர்கள் சிறிய அலுவலகம் அமைத்து, ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனை செய்கின்றனர். இதனால், கடைகளில் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்படுகிறது என வியாபாரிகள் குமுறுகின்றனர்.புரோக்கர்களில் சிலர் ஆன்லைன் வாயிலாக பணம் பெற்று, வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு அனுப்பாமல் மோசடி செய்கின்றனர். இதனால், சிவகாசி மீது வெளி மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையும் குறைந்து விடுகிறது. எனவே, ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பட்டாசு வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.Varadarajan
அக் 22, 2024 22:29

மக்களின் அன்றாட வாழ்வில் மக்களுன் உரிமைகளை பறித்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதுதான் நீதித்துறையின் ஙேலையா? சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதா என்றும் சட்டங்களை விளக்கவும்மட்டுமே அத்துடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். எதிலும் தங்கள் மனதிற்கு தோன்றியதை சகட்டு மேனிக்கு அறிவுரை விமரிசனமாக வாரி வழங்குவதை நிறுத்திக்கொள்ள ஏண்டும். எதற்கும் ஒரு வரையறை உண்டு. தங்களைடைய அரசியல் மத ஈடுபாடுகளை மறந்து செயல்படவேண்டும். மேலும் நீதிபதிகள் தங்கள் நீதிமன்றங்களில் தங்கள் ஆசனங்களில்ல அமர்ந்திருக்கும்வரை தான் அவர்களுடைய மாட்சி. நீதிமன்றங்களுக்கு வெளியே அவர்களும் சாதாரண குடிமகன்களே விசேஷ சலுகைகள், மரியாதையை எதிர்பார்க்ககூடாது நீதிபதிக்கே இந்த கதியா என சிதம்பரம் ஆலய விஷயத்தில் அங்கலாய்த்தது ஒரு உதாரணம்


Subash BV
அக் 22, 2024 18:46

Think seriously why online should be banned for crackers. Accident can happen any time anywhere. Earning money shouldnt be main motto. Who will bear the risk. IS THE GOVT IS READY. Think again.


ram
அக் 22, 2024 13:04

ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு வருடம் எந்தவிதமான பண்டிகைகளையும் கொண்டாட கூடாது அப்ப தெரியும் என்ன அனால் இவர்கள் ஒன்று கூட மாட்டார்கள். ஏகப்பட்ட பண்டிகைகள் ஹிந்து மாதத்தில், அன்பு அமைதி மக்கள் மாதிரி ஒன்று / இரண்டு பண்டிகைகள் இருந்தால், ஹிந்துக்கள் பணம் மிச்சம் ஆகும்.


Subash BV
அக் 22, 2024 18:47

Unfit to be in BHARATH. Migrate to non hindu nation immediately


veeramani
அக் 22, 2024 09:46

தீபாவளி ... இந்தியாவில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நிகழ்வு. பிரபலமான பண்டிகை. நமக்கு உலகத்தையும் வளங்களையும் அளித்துவிட்டு போன நமது முன்னோர்கள் வாக்குப்படி, நமது பேரக்குழந்தைகளுக்கு இந்த உலகத்தையும் வளங்களையும் திரும்ப கொடுப்பது நமது கடமையாகும்.. நுறு வருடங்களுக்கு முன்னர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதேயில்லை திருவிழாவில் கூட வெடி கிடையாது. சிவகாசி பாட்டாஸிற்கு வருவோம். சுமார் ஐம்பது அறுபதுகளில் தான் பட்டாசு தொழில்நுட்பம் இங்கு வந்தது. ஆனால் இதில் காற்றை மாசு படுத்தும் வெடிகள்தான் உள்ளன . மேலும் மக்களுக்கு ஒவ்வாத கார்பன் மோனாக்ஸிடே, சல்பர் டி ஆக்ஸிடே, போன்ற கொடூரமான விஷ வாயுக்களும் வெளிப்படுகின்றன. மத்திய அரசு இத நீக்கிவிட்டு கிறீன் பட்டாசு தன வெடிக்கவேண்டும் என ஆர்டர் போட்டுஉள்ளது ஆனால் சிவகாசியில் ஒருவரும் இந்த ஓரத்தேரை மதிக்கவேயில்லை. இன்னும் விஷ வாயுக்கள் உருவாகும் வெடிகளைத்தான் தயார்செய்கின்றனர். ஜல்லிக்கட்டு விரவிளையாட்டை கோர்ட் சென்று தடுத்தது மாதிரி பட்டாசு உற்பத்தியையும் தடை செய்ய கோட்டிற்கு செல்லுவதற்கு தயாகலாம் மாசில்லா உலகு மனிதர்களுக்கு தேவை. ஒரு சிலர் இதில் வேலை பாதிக்கும் தொழிலாளிகளை பற்றி பேசலாம்.


Kasimani Baskaran
அக் 22, 2024 05:47

தீபாவளிக்கு 75000 கோடி செலவு செய்வதன் மூலம் இந்துக்கள் நடத்தும் பல தொழில்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன. அதை தடுத்தால் இந்துக்கள் வீழ்வார்கள் என்ற அடிப்படையில் அரசு சாரா அமைப்புக்களை வைத்து நீதிமன்றம் மூலம் இது போல ஒரு ஏற்பாடு.


வைகுண்டேஸ்வரன்
அக் 22, 2024 10:43

ஒன்றிய அரசு தான் எப்போ பட்டாசு வெடிக்கணும், எப்போ குளிக்கணும், எப்போ என்ன பட்சணம் பண்ணனும் ங்கறது வரை டைம் டேபிள் போடச் சொல்லி உச்ச நீதிமன்றத்துக்கே கிளாஸ் எடுக்குது. பட்டாசு வெடிக்காதே ன்னு சொன்னால் இந்து மதம் அழிஞ்சுடுமா?


அப்பாவி
அக் 22, 2024 05:26

ஆன்லைன் வர்த்தகம். டிஜிட்டல் புரட்சி. முடியாதவங்க ஃபேக்டரியை மூடிட்டு போயிரலாம். எங்களுக்கு ஜி.எஸ்.டி வசூலானா போதும்.


raja
அக் 22, 2024 05:04

ஆமா உச்ச நீதிமன்ற தடையை யாருமே மீருல பாரு.. கூம்பு வடிவ ஒலி பெருக்கி ஐ கூட தடை செஞ்ச்சுசி. காலையில நாலுமணிக்கே தூக்கத்தை காட்டிலும் என்று அலருது...எவன் கேகுறான்...


முக்கிய வீடியோ