உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய்யான அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள்; செந்தில் பாலாஜி கிண்டல்

பொய்யான அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள்; செந்தில் பாலாஜி கிண்டல்

கரூர்: 'தி.மு.க., மீது ஏதேனும் கூற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கை வெளியிடுகின்றனர்' என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.கரூரில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜாமினில் வெளியே வந்த பா.ஜ.,வினர் பலர் அமைச்சர் பதவியில் உள்ளனர். மத்திய அரசு தேர்வு செய்து லண்டனுக்கு படிக்க அனுப்பிய 11 பேரில் அண்ணாமலையும் ஒருவர். ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வெளிநாட்டிற்கு படிக்கச் செல்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=09g4ctsc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய மின் அமைப்புடன் தான் தமிழகம் ஒப்பந்தம் போட்டதே தவிர தனியாருடன் அல்ல; அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியே பணம் விடுவிக்கப்பட்டது. தி.மு.க., மீது ஏதேனும் கூற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கை வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankar
டிச 08, 2024 18:25

சரி தம்பி - அவர் மீது கேச போடு பார்ப்போம்


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 16:29

அமைச்சர் செந்தில் பாலாஜி யை, சட்ட விரோதமாக 471 நாட்கள் கஸ்டடியில் வைத்திருந்தும் கூட இன்னும் குற்றப் பத்திரிகை தயார் செய்ய முடியவில்லை. இதுங்க தான் அசோக்குமாரிடம் விசாரித்து அப்படியே அறுத்து தள்ளப் போகுதுங்களா? எல்லாரும் ஆபிசில் தூங்கிக் கிட்டிருப்பாங்க. அடுத்த தேர்தல் அறிவிப்பு வந்ததும், டெல்லி எழுப்பி விட்டு, நாலு டாக்சி புக் பண்ணி குடுத்து, இங்கெல்லாம் போயி பழைய பேப்பர் எடுத்துக்கிட்டு வா, கைது பண்ண அனுமதி கட்டுரை எழுது ன்னு சொன்னதும் எழுந்து வருவாங்க.


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 16:25

//மத்திய மின் அமைப்புடன் தான் தமிழகம் ஒப்பந்தம் போட்டதே தவிர தனியாருடன் அல்ல//. இதுநிறைய பேருக்கு தெரியாது. தெரிந்தாலும், தெரியாத மாதிரி தான் பாஜக ஆதாரவாளர்கள் எழுதுவார்கள். திமுக வுக்கு எதிராக ஏதாவது எழுதியே ஆக வேண்டும், இல்லைன்னா மண்டை வெடிச்சிரும் என்கிற நிலையில் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள்.


R.MURALIKRISHNAN
டிச 08, 2024 16:03

ஒரு கவுன்சிலர் ஆக கூட தகுதியற்ற நீர் பொய் திருட்டு கொள்ளை ஊழல் ஆகியவற்றில் மிக மிக திறமை கொண்டு உள்ளதால் ஊழல் மன்னன் கருணாநிதியின் மகன் கட்சியில் உன்னை, சிவப்பு கம்பளம் போட்டு மந்திரி ஆக்கி உள்ளனர்.


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 14:01

அங்கே அஜித் பவார் மீதான வழக்குகளை ஊத்தி மூடிய பாஜக ஆதாரவாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேரை சொல்லக் கூட தகுதி அற்றவர்கள்.


sankar
டிச 08, 2024 18:25

தம்பி - போனஸ் வாங்கியதற்கு இவ்ளோ ஜால்ரா வேணாம்


Ramesh Sargam
டிச 08, 2024 13:30

கிண்டல் பேச்சு வேற...


சம்பர
டிச 08, 2024 12:00

நீ கெட்ட கேட்டுக்கு கிண்டல் வேறயா?


joe
டிச 08, 2024 11:48

கூடு விட்டு கூடு பாயும் ஊழல்வாதியான உன்னுடைய இந்த விமர்சனம் யாருக்கும் தேவையில்லையே. பணத்துக்காக கரூரில் உன்னைப்போல இன்னும் பலர் அரசியல் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள் .இது உனக்கே நன்றாக தெரியும் .அந்த ஊழல்வாதிகளும் வேறு கட்சியில் இருந்தாலும், உன்னுடைய பங்காளிககளே .போதுமா இந்த செய்தி .நீ ஒரு கரூர் ஊழல்வாதி. சரியா .


ஆரூர் ரங்
டிச 08, 2024 11:36

மீண்டும் மந்திரியான பின்னும் அன்பு உடன்பிறப்பு அசோக்குமாரை தேடவில்லையா? 400 நாட்களாக காணோம். பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து தேட வேண்டாமா? உயிருடன் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் அறிவியுங்கள்.


புதிய வீடியோ