உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச மின்சாரத்துக்கு மானியம் ரூ.777 கோடி வழங்க உத்தரவு

இலவச மின்சாரத்துக்கு மானியம் ரூ.777 கோடி வழங்க உத்தரவு

சென்னை:இலவச மின்சாரம் வழங்குவதற்காக, மின் வாரியத்திற்கு, 777 கோடி ரூபாய் கூடுதல் மானியம் வழங்குமாறு தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுதுமாகவும், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மானிய விலையிலும், மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. அதன்படி, நடப்பு 2025 - 2026ம் நிதியாண்டிற்கு, அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து, 16,274 கோடி ரூபாயை மானியமாக வழங்க, அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதி முதல், மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவுக்காக, 777 கோடி ரூபாயை, கூடுதல் மானியமாக வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி