உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பதிக்கு நிகராக பழநி: பா.ஜ.,வுக்கு சேகர்பாபு பதில்

திருப்பதிக்கு நிகராக பழநி: பா.ஜ.,வுக்கு சேகர்பாபு பதில்

சென்னை; வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:பழநி முருகன் கோவிலில் அடிப்படை வசதி இல்லை என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஆனால், பக்தராக காவடி எடுத்துச் சென்று, முருகனை தரிச்சித்துள்ளார். அவர் ஏற்கனவே, 48 நாட்கள் செருப்பு அணிய மாட்டேன் என, நேர்த்திக் கடன் செலுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6iooo62r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆன்மிகத்தோடு சம்பந்தப்படுத்தி, அரசியல் ரீதியாக சொன்ன பதிலுக்கு, நேற்று முன்தினம் நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் பழநியில் குடமுழுக்கு நடந்துள்ளது. அங்கு, 98 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடக்கிறது. கடந்த 2010ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, 58 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டார். அதன்பின் வந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், அரசாணை துாக்கத்தில் இருந்தது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அரசாணையை செயல்படுத்தி கருவூலத்திற்கு, 58 கோடி ரூபாய் செலுத்தி, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பதிக்கு நிகராக பழநி இல்லை என்றால், நீங்கள் என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்கிறேன். பழநியில் ஒரு நாளில், 20,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தைப்பூச நாளில், பழநியில் 60 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல், முருகனை தரிசித்து திரும்பி உள்ளனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. தேர்லுக்கு 14 மாதங்கள் உள்ளன. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழகத்தில் 20 சதவீதம் ஓட்டுகள் உள்ளது என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேர்தல் களத்தில் நிற்பவர்கள் எல்லாம், 100 சதவீதம் ஓட்டு எங்களுக்குதான் என தேர்தல் களத்திற்கு வருவர். இறுதி தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sankaranarayanan
பிப் 13, 2025 21:36

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. அரசியல் அல்லாமல் என்ன அவியலா செய்ய போனீங்க அங்கே உண்மையை ஒப்புக்கொண்டதால் என்ன வந்துவிடும் ஏனிந்த ஜாலாப்பு பித்தலாட்டம் பேச்சு யார் காதிலும் பூவை சுத்தவேண்டாம் இனி.


Palanisamy T
பிப் 13, 2025 12:45

திருப்பதி லட்டில் ஊழல். ஆகவே பழனி பஞ்சாமிர்தத்திலும் அதற்க்கு நிகராக ஊழல் enginreergalaa?


Ramesh Sargam
பிப் 13, 2025 12:40

பழனி மலை முருகனின் கோவிலில் நடக்கும் அக்கிரமங்கள் அந்த முருகனுக்கே தெரியும்.


karthik
பிப் 13, 2025 12:39

I feel pity about the state of temples and i recently visited few important ones. While inside the temple is generally clean ,outside areas like Roads ,pathways, washrooms and nearby beaches etc. were in pathetic condition. They make lot of money everywhere which directly goes to royal family and no ones bothers anything other than their cut. These kind of statements should be thrown back on their face while they come to seek vote.


Devaraj R
பிப் 13, 2025 11:15

பஸ்டாண்ட் கழிவறையை பார்க்கலாம் எவ்வளவு சுத்தம் சுகாதாரம் என்பது தெரியும்.


karthik
பிப் 13, 2025 12:41

best Udharanam


rama adhavan
பிப் 13, 2025 11:09

திருப்பதி எங்கே, பழனி எங்கே? வான்கோழி என்ன ஆடினாலும் மயில் ஆக முடியாது. இரு கோவில்களுக்கும் நான் பல முறை சென்று இருக்கிறேன். திருப்பதி வசதிகளில் ஒரு துரும்பு கூட பழனியில் இல்லை. உதாரணம் தங்கும் விடுதிகளில் கூட ஆன்லைன் வசதியை நீக்கி விட்டார்கள் இந்த ஆட்சியில். அமைச்சர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இப்போது இங்கு. தலைமையை குளிரவிட்டால் போதும்.


Murugesan
பிப் 13, 2025 11:06

உலகமாக அயோக்கிய ரவுடி


jayvee
பிப் 13, 2025 11:04

ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் வருமான பெருமளவில் ஈட்டுதரும் பலகோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதேசமயத்தில் பல நூற்றாண்டு கால புராதன கோவில்களும் இடித்துத்தள்ளப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு வருமானம் இல்லை. கோவில் நிலங்களை தாரைவார்ப்பதும் அதிகமாக நடப்பதும் இரண்டு திராவிட ஆட்சியில் நடக்கும் அவலம்தான். GO பெற்று கோவில் நிலத்தை அட்டைபோடும் வசதியை ஏற்படுத்தியது கலைஞர் ஆட்சியில்தான். ஹிந்துக்கோவில் நிலங்களை மற்றமதத்தினர் அபகரிப்பதும் இரண்டு திராவிட ஆட்சியில்தான் .. ஹிந்துக்களும் இதற்கு காரணம் ..


Anand
பிப் 13, 2025 10:42

இவன் எப்பேர் பட்ட அண்ட புளுகன் ஆகாச புளுகன் என்பதற்கு... இது ஒன்றே போதும்.


c.k.sundar rao
பிப் 13, 2025 09:57

Don't compare Thirupathi temple with Palani temple in management practices, Thirupathi temple strictly follows age old Vedic practice in conducting rituals and board members don't interfere rituals ,whereas in TASMAC NADU during Thirithu Dravidian rule the rulers in the government and in temple management members misuse the temple funds for them and deprive devotees the basic needs.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 13, 2025 10:25

Why are you supporting Telugu speaking peoples temple?? People like you are against Telugu people, right ? Kudamuzhukku in Palani temple was conducted by DMK Govt. The admk was in ruling for 10 years bit didnt do anything to Palani temple, right? Development works for 98 crores are in progress in Palani, as minister Sekhar babu states. You visit Palani and can see with your own eyes. Why are you writing TASMAC NADU?? You are not a patriot? பிறந்த நாட்டைக் கேவலமா பேசும் நீங்க நாட்டுப்பற்று இல்லாத தேச துரோகி. எல்லா மாநில அரசுகளும் தான் மது விற்கறார்கள்.


சமீபத்திய செய்தி