மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
04-Sep-2025
திண்டிவனம்,: திண்டிவனம் முருகன் கோவிலில் பஞ்சலோக வேல் உள்ளிட்ட பொருட்கள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் கோட்டை மேடு, செந்தமிழ் நகரில் ஞானவேல் முருகன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தரிசனத்திற்கு பிறகு, முன்பக்க இரும்பு கேட் பூட்டப்பட்டது. நேற்று காலையில், கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து நிர்வாகி ஆத்மராமன் அதிர்ச்சியடைந்தார். கோவில் உள்ளே சென்று பார்த்தபோது, மூலஸ்தானத்தின் இரும்பு கேட் உடைக்கப்பட்டு, முருகனுடைய பஞ்சலோக வேல், வெள்ளி பட்டம், பூஜை பாத்திரங்கள், செம்பு உண்டியல், கோவில் வளாக கிணற்றின் நீர் மோட்டார் உள்ளிட்டவை திருடு போனது தெரிந்தது. இது குறிதது கோவில் கோவில் நிர்வாகி கொடுத்த புகாரில், கோட்டைமேடு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
04-Sep-2025