சட்டவிரோத மது விற்பனை பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:மதுக்கடைகளின் எண்ணிக்கை, திறந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, ஆகியவை பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான படிக்கட்டுகள். இவற்றுக்கு முரணாக தி.மு.க., அரசு செயல்படுகிறது.மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் இரவு நேரத்தில் மதுக்கூடங்களில் அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது. சென்னை பூந்தமல்லி பகுதிகளில், 150 ரூபாய் மது பாட்டில் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு பழங்கள், ஊறுகாய் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, தி.மு.க.,வினர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க வழிவகை செய்து உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.