உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் மீது மோதிய திருமாவளவன் கார்:வக்கீலை நையப்புடைத்த கட்சியினர்; வி.சி., கட்சியினரால் ஐகோர்ட் அருகே பதற்றம்

பைக் மீது மோதிய திருமாவளவன் கார்:வக்கீலை நையப்புடைத்த கட்சியினர்; வி.சி., கட்சியினரால் ஐகோர்ட் அருகே பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஐகோர்ட் அருகே, தன் ஸ்கூட்டர் மீது, திருமாவளவனின் கார் மோதியதை தட்டி கேட்ட வழக்கறிஞரை, வி.சி.க.,வினர் விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணையின்போது, காலணி வீச முயற்சி நடந்தது. இதை கண்டித்து, வி.சி.க.,வின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். மதியம் 2:30 மணியளவில் உயர்நீதிமன்றம் அருகே, என்.எஸ்.சி., போஸ் சாலை வழியாக, திருமாவளவன் காரில் சென்றார். அப்போது, முன்னாள் சென்ற ஸ்கூட்டர் மீது, திருமாவளவன் சென்ற கார் மோதியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yqkfzh8z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர் நிலை தடுமாறினார். அவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, கார் அருகே சென்று, 'ஏன் இப்படி காரை ஓட்டி வருகிறீர்கள்' என கேட்க, திருமாவளவன் காரிலிருந்தவர்கள் கீழே இறங்கி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதும், வி.சி.க.,வினர் அவரை தாக்கினர். அவர்களிடம் இருந்து அவர் தப்ப முயற்சித்தபோது, அவரை ஓட ஓட விரட்டி தாக்கினர். அவரது ஸ்கூட்டரை சேதப்படுத்தினர். அங்கிருந்த போலீசாரால் தடுக்க முடியவில்லை. அதன்பின் தாக்கப்பட்ட வழக்கறிஞரை, போலீசார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் வட்டச் செயலரும், வழக்கறிஞருமான நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி, 36, என்பது தெரிய வந்தது. அவர் தன் மீது தாக்குதல் நடத்திய, வி.சி.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து, சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலர் பார்வேந்தன், 'வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது மோதினார். பின் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது, நான் தடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன். அந்த நபரின் நோக்கம், திருமாவளவனை தாக்க வேண்டும் என்பதுதான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளித்தார்.மேலும், அவரை கைது செய்யக்கோரி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் இருதரப்பு புகாரையும் பெற்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை, வி.சி.க.,வினர் விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அண்ணாமலை கண்டனம்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பட்டப்பகலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், வி.சி., கட்சியினர் ஒரு வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர், கார் டிரைவரை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்டுள்ளார். அந்த காரில் வி.சி., தலைவர் திருமாவளவன் இருந்தார். அவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து நடந்த போராட்டத்தில் இருந்து திரும்பி வந்த போது, அவரின் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது, மோசமான செயல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.http://x.com/annamalai_k/status/1975523662611857862இதேபோல், தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமனும், கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

l.senthil kumaran
அக் 12, 2025 08:50

காட்டுமிராண்டிகள் கூட்டத்தின் தலைவன் இவன் எண்ணம் இப்படித்தான் இருக்கும் அயோக்கிய பையன்


கூத்தாடி வாக்கியம்
அக் 08, 2025 17:18

வக்கீல் தம்பி யேன் சாக்கடையில் கல் எறிந்தீர்கள் . தியமுக் விடம் காசு வாங்கி கொழுத்து கிடக்கானுங்க.


ManiK
அக் 08, 2025 11:58

அராஜக கூட்டணி கும்பல் மாநிலத்தை ஆளுகிறவரையில் இது தான் சாதாரண மக்களின் நிலை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 08, 2025 09:51

கட்சி கொள்கையை செயல் முறையில் காட்டும் தொண்டர்கள் மற்றும் தலைவர்.


SIVA
அக் 08, 2025 08:24

அடங்க மறு அத்து மீறு


SIVA
அக் 08, 2025 08:17

மக்களே எப்படியோ நாலரை வருடத்தை கடத்திடீங்க இன்னும் ஒரு ஆறு மாசம் தான் அதையும் தாங்கிட்டிங்க நீங்க ஜெயிச்சுடீங்க ....


SIVA
அக் 08, 2025 08:15

இப்ப தெரியுதா ஏர்போர்ட் மூர்த்தி ஏன் பாக்கெட் கத்தியை பயன் படுத்தினார் என்று, போலீஸ் முன்பு தான் தாக்குதல் நடத்தப்படுகின்றது


SIVA
அக் 08, 2025 08:14

போன மாசம் டிஜிபி அலுவலக வாசல் முன்பு, இன்று கோர்ட் வாசல் முன்பு, அடுத்து எங்கே.....


சாமானியன்
அக் 08, 2025 08:11

இந்த அல்ப விஷயங்களை பொருட்படுத்த வேண்டாம். பாஜகவிற்கும் இதே அறிவுரை.


D Natarajan
அக் 08, 2025 08:10

அடிபட்டவர் கைது செய்யப்படுவார். கூண்டாஸ் சட்டம் பாயும். விடியல் ஆட்சி இப்படித்தான் நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை