வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ரயில் நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள். குழு என்று ஒன்றை வைத்துக் கொண்டு அவர்களின் விருப்பப்படி ரயில் இயக்க வேண்டும் என்று பலர் பல விதமாக கூறுவார்கள். கடந்த மூன்று நாட்களாக பயணித்து வருபவர்களில் இவர்கள் யாரும் கிடையாது. இவர்களின் வசதிக்கு ரயில் விட கோரிக்கை விடுப்பார்கள். பிறகு ஆட்கள் காணாமல் போய் விடுவார்கள். இவர்களால் எந்த பயனும் கிடையாது. தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பயணித்து வருகிறேன். இதில் அதிகம் பயணிப்பவர்கள் தினப்படியாக பயணிக்கும் மிஸ்டர் பொது ஜனம், மற்றும் ஏசி ரயில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுபவர்கள். மிஸ்டர் பொது ஜனத்திற்கு இந்த ரயிலின் நேரம் அட்டவணை, கட்டணம் இன்னும் சரியாக சென்று சேரவில்லை. இதற்கு அந்த குழுக்கள் என்ன செய்தார்கள் ? நீங்கள் யாரையும் கேட்க வேண்டாம். உங்களிடம் எண்ணிக்கை இருக்கிறது. எந்த வழித்தடத்தில் எந்த நேரத்தில் விட்டால் மக்கள் வருவார்கள் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.
ஏசி மின்சார ரயில் சேவை குறித்தும், மேம்பாடு குறித்தும், பயணியரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பயணியர் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்து, கால அட்டவணை மாற்றம் உள்ளிட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையை அறிமுகப் படுத்துவதற்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டும் அல்லவா? சங்ககால மன்னர்கள் அதைத்தான் செய்தார்கள்.
நமக்கு சம்பளம் உயரனும் ஆனால் பேருந்து ரயில் கட்டணம் உயரக்கூடாது பெட்ரோல் டீசல் விலை குறையும். ஆனால் டயர் விலை ஊதியம் காரணம் சொல்லி கட்டணம் குறைக்க மாட்டோம்.
டிக்கட் மட்டும் அஞ்சு ரூபா இருக்கணும் ..
பேசாம ரயிலை படகுல வெச்சு தொனியை சுழற்றினால் ஐந்து ரூபாய்க்கு செல்லலாம் ..போகிற வழியில் மீனை பிடிச்சி லபக் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்