4 நாட்கள் மட்டும் மனுதாக்கல்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: சட்டசபை தேர்தலுக்கு, வரும் 30ம் தேதி, காலை 11:00 மணி முதல் மனு தாக்கல் செய்யலாம். பொது விடுமுறையாக, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31ம் தேதி, ஏப்., 1, 3 மற்றும் 5ம் தேதி மனுதாக்கல் செய்ய இயலாது. மனுதாக்கல் செய்வதற்கு 6ம் தேதி கடைசி நாள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும், 30 மற்றும் ஏப்., 2, 4, 6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்.