உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி

திருச்சி: வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷே கம் நடக்கவுள்ளது. இதற்கென பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டுள்ளார். ஆந்திராவில் வீரபத்ரன் ,கேரளாவில் குருவாயூர், கோயில் சென்று வழிபட்டார். இதன் தொடர்ச்சியாக பிரதமர்3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் பிரதமர் மோடி இன்று (ஜன.,20) சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்கென பிரதமர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்த அவர் கார் மூலம் கோயிலுக்கு சென்றார். வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8fh3nu92&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0Gallery வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு பட்டர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ரங்கநாதர், ராமானுஜர் , கருடாழ்வார் , சக்கரத்தாழ்வார் சன்னதியில் பிரதமர் வழிபட்டார்.

வேஷ்டியில் பிரதமர்

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய வேஷ்டி அணிந்து வந்தார். பொன்னாடை போர்த்தியபடி கை கூப்பி வணங்கியபடி சென்றார் பிரதமர்

ரசித்தார் மோடி

கம்பராமாயண மண்டபத்தில் பிரதமர் மோடி அமர்ந்தார். அவரது முன்னிலையில் இருவர் கம்பராமாயண கடவுள் வாழ்த்து பாடலை பாடினர். கம்பராமாயண பாடலை பிரதமர் மோடி ரசித்தார்.

ராமேஸ்வரம்

மதியம் 2 மணிக்கு பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்தார். இன்று இரவு அங்கு தங்குகிறார். இதையடுத்து, நாளை (ஜன.,21) அவர் தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயிலுக்கு செல்கிறார்.

ஸ்ரீராமர் பூஜித்த ராமேஸ்வரம் திருத்தலம்

ராமர் இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் வந்தார். சிவபக்தரான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபெருமானை பூஜை செய்ய முடிவெடுத்தார்.இதற்காக சிவலிங்கம் எடுத்து வரச்சொல்லி ஹனுமனை கைலாய மலைக்கு சீதாதேவி அனுப்பினார். ஆனால் ஹனுமன் வர தாமதமானதால் சீதை கடற்கரை மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்து அனைவரும் தரிசித்தனர். இங்கு ஸ்ரீ ராமர் சிவனை பூஜித்து வணங்கியதால் சுவாமிக்கு ராமநாதசுவாமி என பெயரிட்டனர்.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ராமர் பூஜித்த இத்திருத்தலத்திற்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஜன.,22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி இன்று(ஜன.,20) ராமேஸ்வரம் கோயிலில் அக்னி தீர்த்தத்திலும், கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.

புனித தீர்த்தம்

இந்த ராமாயண இதிகாச வரலாற்று திருத்தலம் குறித்து ராமேஸ்வரம் பஜ்ரங்தாஸ் பாபா மடம் நிர்வாகி மகராஜ் சீதாராம்தாஸ் பாபா கூறியதாவது: ராமபிரான் சிவனை பூஜித்து வணங்கிய இடத்தில் உள்ள இக்கோயில் வளாகத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பூமியில் ராமர் அம்பு எய்ததும் புனித தீர்த்தம் கிடைத்தது.இது கங்கை, காவிரி உள்ளிட்ட பல புனித நதிகளின் தீர்த்தத்தை உள்ளடக்கிய தீர்த்தமாக கருதப்பட்டதால் இதனை 'கோடி தீர்த்தம்' (22 வது தீர்த்தம்) என்றழைக்கப்படுகிறது. இன்றும் இந்த தீர்த்தம் மட்டுமே கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்த ராமர் கடல் நீரால் பட்டாபிஷேகம் சூட்டுகிறார்.சிவனின் ஆயுதமான கோதண்டம் (வில், அம்பு ) ராமரிடம் இருந்ததால் சிவ பக்தரான விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டியதால் இங்கு கோதண்ட ராமர் கோயில் உருவானது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாதம் பதித்த ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் இக்கோயிலின் புனிதமும், புகழும், வரலாறும் உலகம் முழுவதும் சென்றடையும் என்றார்.

கட்டுப்பாடு விதிப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. திருச்சியில் இன்று மதியம் 2 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

இசக்கி முத்து
ஜன 21, 2024 02:06

தன்னிகரில்லா எங்கள் தலைவன் மோடி.


g.s,rajan
ஜன 21, 2024 00:36

உங்களைப் போன்ற அடிமைகள் மற்றும் கூஜா தூக்கிகளுக்குத் தான் டாஸ்மாக் நிரந்தரம் ,நடுநிலையாளர்களுக்கு என்றும் டாஸ்மாக் அவசியம் இல்லை .....


M S RAGHUNATHAN
ஜன 20, 2024 17:04

ஏன் தமிழகத்தின் அறநிலைய அமைச்சர் அல்லது முதலமைச்சர், HRCE அதிகாரிகள் ஒருவர் கூட தென்படவில்லை.


Mohan
ஜன 20, 2024 14:46

தமிழ் நாட்டுக்கு உதவிகள் செய்யும், தமிழ் மொழிக்கு மரியாதை தருகின்ற முதல் பிரதமர் என்று இருக்கும் மோடி அவர்களுக்கு சற்றும் உரிய மரியாதை தராமல் நக்கலாகவே கருத்து எழுதும் திராவிஷ நபர்கள் தாங்கள் வாங்கும் காசுக்கு குறையில்லாமல் எல்லா ஊடகங்களிலும் எதிர்த்து எழுதி வருகிறார்கள்.


karuppusamy
ஜன 20, 2024 13:39

sirappu


r ravichandran
ஜன 20, 2024 13:00

இங்கு கூட தான் மக்கள் வரிப்பணத்தில் சாமாதிகள், நினைவு இல்லங்கள், விளையாட்டுகள், சிலைகள், ஆடம்பர விழாக்கள் , பேனா ஊர்வலம், நடைபெறுகின்றன. மக்கள் கஷ்டபட்டு கொண்டு இருக்கும் போது இவை எதற்கு என்று, இப்போது கருத்து பரிமாற்றம் செய்பவர்கள் அப்போது கேட்கவில்லையே? செலக்ட்டிவ் அம்னீஷியா வந்து விட்டது போல தோன்றுகிறது.


PR Makudeswaran
ஜன 20, 2024 12:57

சிலர்மாமியார் உடைத்தால் மண்குடம் போல.......... ஸ்டாலின் செய்தால் அது புகழ். மோடி செய்தால் அது விளம்பரம். காமாலை கண்ணனை இறைவன் கூட தூற்றுவான். நின்று பழி தீர்க்க வேண்டும்.


r ravichandran
ஜன 20, 2024 12:54

எத்தனையோ 500 ஆண்டுகள் காத்து கொண்டு இருந்த மக்களுக்கு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி காட்டி உள்ளார் மோடி அதுவும் சட்ட , நீதி மன்றம் அனுமதியுடன்.


A1Suresh
ஜன 20, 2024 12:51

யஜுர்வேதம் சொன்னவழியில் "உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் " என்று கம்பநாட்டாழ்வார் பாடினார் . அதாவது பிரம்மசூத்திரத்தில் கடவுள் யார் என்னும் முதல் இலக்கணம் பின்வருமாறு கூறப்படுகிறது - "யதோ வா விமானி பூதாநி ஜாயந்தே யேன ஜாதனி ஜீவந்தி யாம் பிரயந்தி ஆபிஸம்விசந்தி " தத் விஜிக்ஞாசஸ்வ தத் ப்ரஹ்ம இதி " . மேற்கூறிய யஜுர்வேதத்தின் தைத்திரீய உபநிஷத கருத்தைத்தான் கம்பர் "உலகம் யாவையும் சிருஷ்டித்து , காப்பாற்றி , அழிப்பவன் " எவனோ அவனே கடவுள் என்று பாடினார். அதை மோடிஜி இசைவழியே கேட்டு இன்புறுகிறார்


r ravichandran
ஜன 20, 2024 12:51

கைகட்டி நிற்பதே மிகுந்த மரியாதை. கேரள நடிகர்கள் யதார்த்தமான எளிமை க்கு உதாரணம். அங்கு நடிகர்கள் பந்தா இல்லாதவர்கள். இங்கு போல பச்சோந்திகள் இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை