வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மேலும் செய்திகள்
சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது
18-Jul-2025
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரிய சாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக, சட்டசபை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18-Jul-2025