உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் அதிகாரிகளுக்கு எதிராக முதன்முறையாக போராட்டத்தில் குதித்த போலீஸ் குடும்பங்கள்!

உயர் அதிகாரிகளுக்கு எதிராக முதன்முறையாக போராட்டத்தில் குதித்த போலீஸ் குடும்பங்கள்!

மதுரை: தமிழக போலீஸ் துறையில் 'ஸ்பெஷல் டீம்' என்ற ஒரு பிரிவு இல்லாத நிலையில், அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு 'டீமை' உருவாக்கி விசாரித்து வருவதாலும், நெருக்கடி கொடுப்பதாலும் மட்டுமே ஒட்டுமொத்த போலீசாருக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின்போது அஜீத்குமார் 29, இறந்தார். இதுதொடர்பாக 'ஸ்பெஷல் டீமை' சேர்ந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். 'நெருக்கடி கொடுத்த உயர்அதிகாரிகளை விட்டுவிட்டு போலீசாரை பலிகடா ஆக்குவதா' என கைதான அவர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக போலீஸ் துறை வரலாற்றில் முதன்முறையாக, உயர்அதிகாரிகளை கண்டித்து போலீஸ் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஐ.ஜி., வரை 'ஸ்பெஷல் டீம்'

சட்டம் ஒழுங்கை கவனிக்கும் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எஸ்.பி., ஐ.ஜி., வரையிலான அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு 'ஸ்பெஷல் டீமை' வைத்திருக்கின்றனர். புகாரின் முக்கியத்துவத்தை பொறுத்து 'ஸ்பெஷல் டீமில்' உள்ள போலீசார் செயல்படுவர். மற்ற சமயங்களில் பழைய ரவுடிகள், கொலையாளிகளை தேடுவதில் கவனம் செலுத்துவர். குற்றவாளியை பிடிக்கும்பட்சத்தில் அவரை 'கவனித்து' தேவையான விபரங்களை பெற்ற பிறகே ஸ்டேஷன் 'கணக்கிற்கு' கொண்டு வருவர்.

அவுட்போஸ்ட்டில் 'விசாரணை'

போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி ஏதாவது அசம்பாவிதத்தில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக இரவில் அவரை ஸ்டேஷனில் வைத்திருக்கக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதை சட்டசபை கூட்டதொடர் நடக்கும்போது மட்டுமே போலீசார் பின்பற்றி வருகின்றனர். ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா உள்ளதால், ஏதாவது அசம்பாவிதம் நடந்து நீதிமன்றத்திற்கு பிரச்னை சென்றால் தங்களுக்கு சிக்கலாகி விடும் எனக்கருதி 'ஸ்பெஷல் டீம்' போலீசார், பெரும்பாலும் போலீஸ் அவுட்போஸ்ட், ரோந்து வாகனத்தில் குற்றவாளியை 'விசாரித்து' வருகின்றனர்.

போலீசார் பலிகடா

மேலும் 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய குற்றங்களை செய்தவர்களை மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அடிதடி, தகராறு, சிறு திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கைதானவர்களை 41 ஏ சி.ஆர்.பி.சி.,ன் படி சம்மன் கொடுத்து விசாரித்து போலீசே ஜாமினில் விடுவிக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி உயர் அதிகாரிகள் இதை அனுமதிப்பதில்லை. 'ஒரு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தால் உயர்அதிகாரிகள் தங்கள் பெருமையாக காட்டிக்கொள்கின்றனர். அதுவே சிக்கலாகிவிட்டால் கீழ் உள்ள போலீசாரை பலிகடாவாக்கி விடுகிறார்கள். அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் குற்றவாளியை போலீசார் 'கவனித்து' அது சிக்கலாகும் போது ஒட்டுமொத்த போலீசாருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது' என போலீஸ் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

'ஸ்பெஷல் டீம்' கலைப்பு

போலீசார் கூறியதாவது: போலீஸ் துறையில் 'ஸ்பெஷல் டீம்' என்பது கிடையாது. கொலை, கொள்ளை நடந்தால் அப்போதைக்கு 'ஸ்பெஷல் டீம்கள்' உருவாக்கப்பட்டு ஒவ்வொரு கோணத்திலும் விசாரிக்கப்படும். குற்றவாளியை கைது செய்தபின் அந்த 'டீம்கள்' கலைக்கப்படும். இதுதான் நடைமுறை. இன்ஸ்பெக்டருக்கு மேல் உள்ள அதிகாரிகள், வழக்குகளை கண்காணிக்கவும் அறிவுரை மட்டுமே வழங்க வேண்டும். அவர்களுக்கு தனி 'டீம்' தேவை இல்லை. சிறப்பு பிரிவுகள் இருக்கும்போது இந்த 'ஸ்பெஷல் டீம்' தேவை இல்லாத ஒன்று. இவ்வாறு கூறினர்.இந்நிலையில் திருப்புவனம் விவகாரத்திற்கு பிறகு இதுபோன்ற 'டீம்'கள் கலைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ருத்ரன்
ஜூலை 03, 2025 12:09

உயர் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள காவல் துறை பணியாளர்களுக்கு புத்தி சொல்ல துப்பில்லையா. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை இறக்கும் வரை அடித்து துன்புறுத்துவது என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஏற்று கொள்ள கூடியதா. சரி உயர் அதிகாரிகளே சொல்லி விட்டார்கள் அடித்து உண்மையை கொண்டு வாருங்கள் என்று. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் மனசாட்சி இல்லையா. உண்மையை வரவழைக்க பல வழிகள் உள்ளது. சட்டத்தில் சொல்ல பட்ட வழிகளில் ஏன் முயலவில்லை. அடித்தவருக்கும் அடி வாங்கி இறந்தவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. யாரோ, யாருக்காகவோ, யாரை திருப்தி படுத்தவோ செய்யும் செயல் ஒரு வாழ வேண்டிய இளைஞரை சாகடித்து விட்டீர்கள். அரசு உயர் அதிகாரிகள் முதல் முதல்வர் வரை அனைவருக்கும் கெட்ட பெயர் சேர்த்து விட்டார்கள். மேலும் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்கள்.


Sudha
ஜூலை 03, 2025 11:38

முன் எப்போதோ பீகார் இந்த மாதிரி இருந்த போது அம்மாநிலத்தை வேறு மாநி லத்தவர் ஆள வேண்டும் என்று குரல் எழுந்தது நினைவுக்கு வருகிறது. இப்பொழுது கவர்னர் அதிகாரத்தை காட்டலாம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 03, 2025 11:37

தகுதி, திறமை இரண்டும் என்று தேவையின்றி போனதோ, அன்றே அணைந்து தொலைந்தது. நன்கு படித்த மாணவர்கள் ஐஐடி, மருத்துவம், என்ஜினீரிங், சயின்ஸ், காமர்ஸ், சிஎ போன்ற படிப்புகளுக்கு தங்களது தகுதிக்கு ஏற்ப போய்விடுகின்றனர். மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்று, ஏனோதானோ என்று திணறும் மாணவர்கள் சட்டம் படித்து, அரசியலுக்கு போகின்றனர். அதிலும் தேறாமல் பள்ளியுடன் படிப்பை நிறுத்தியவர்கள் காவல்துறையில் சேர்கின்றனர். போதாதற்கு அந்த இளைஞர்களை தவறாக பயன்படுத்தும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த காவல் இளைஞர்கள் வேளையில் சேர்ந்த நாள் முதல் ரவுடிகள், பொறுக்கிகளுடனேயே தினமும் வழங்குகின்றனர். அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் கலெக்ஷன், கமிஷன், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, ஊழல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.


கண்ணன்
ஜூலை 03, 2025 11:33

மன்னவரு காலத்தில் மு க சொல்லுவார்: தமிழக காவல் துறையின் ஈரல் கெட்டது. ஈரல் மட்டுமல்ல எல்லாமே கெட்டுள்ளன. காவல் துறையின் தலை முதல் கால்கள வரை எல்லோரையும் வீட்ணிற்கு அனுப்பிப் புதியவர்களைச் சேர்க்கவேண்டும்


Sudha
ஜூலை 03, 2025 11:33

பல உண்மைகள் வெளிவர காரணமாக இருந்த அஜித் குமாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். போலீஸ் துறையை கெடுத்தது கருணாநிதி. குடும்ப ரத்தம் முதல்வரின் அலட்சியத்தில் தெரிந்தது. இனி யாரையும் கஸ்டடி யில் அளவுக்கதிகமாக துன்புறுத்த மாட்டோம் என்று போலீசார் உறுதி பூண வேண்டும்


sridhar
ஜூலை 03, 2025 11:15

பல துறைகளில் இருப்பது போல் காவல் துறைக்கும் ஒரு ombudsman வேண்டும், அல்லது விசாரணை கைதிகள் முழு நேரமும் cctv கண்காணிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.


Varadarajan Nagarajan
ஜூலை 03, 2025 10:52

உடல் ஆரோக்கியத்துடன் இருந்த 29 வயது வாலிபர் சாகும்வரை துன்புறுத்துதல் என்பது மனிதாபிமானம் உள்ளவர் எவரும் எந்த பதவியில் இருந்தாலும் செய்யக்கூடியதா? நகையை பறிகொடுத்ததாக கூறுபவர்களிடமிருந்து புகார் பெறப்பட்டதா? சாதாரண பொதுஜனம் இதுபோல புகாரளிக்கச்சென்றால் அந்தப்பொருள் வாங்கியதற்கு ஆதாரமாக அதற்குரிய பில்லை கேட்கின்றார்கள்? பல நேரங்களில் அந்தப்பொருள் தொலைத்ததாக பொய் புகார் கொடுப்பதாக புகார்தாரரையே திருப்புகிறார்கள். போலீஸ் நன்கு விசாரித்ததில் அந்த இளைங்கர் இறந்துவிட்டார். சரி தற்பொழு தொலைந்துபோன நகையை கண்டுபிடித்தாகிவிட்டதா? மேலதிகாரி சொன்னார் என்பதற்க்காக புகார்ன் உண்மைத்தன்மை என்னவென்று முதலில் விசாரிக்கவேண்டாமா? தற்பொழுது மேலதிகாரி சொன்னார் என கூறும் காவலரின் குடும்பங்கள் அந்த மேலதிகாரி குற்றம்சாட்டப்பட்டவர் இறக்கும்வரை தாக்கசொன்னாரா?


ديفيد رافائيل
ஜூலை 03, 2025 10:49

என்னை பொறுத்த வரை இந்த வழக்கில் போலீஸ் உயரதிகாரிகளும், Police cons ம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்


KRISHNAN R
ஜூலை 03, 2025 10:45

உயர் அதிகாரிக்கும்... மேலே அழுத்தம் கொடுத்து நபர் யார். உண்மையில் நகை காணுமா இல்லை.... வாய் தகராறில் பொய் வழக்கா


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 03, 2025 10:16

அப்போ போலீஸ் வேலையில் மரியாதை, சம்பளம், கிம்பளம் வரும்போது மட்டும் இனிக்குதோ? இங்கே திறமை இல்லாதவர்களும், கையாலாகாதவர்களும் காவல் பணியில் குறுக்கு வழியில் சேர்ந்து விடுகிறார்கள். அதுதான் பிரச்னை. அவர்களுக்கு குற்றத்தை நிரூபிக்கும் திறமை இல்லை. தங்கள் இயலாமையை மறைக்க, கண் மூடித்தனமாக இயங்குகிறார்கள். மக்களை துன்புறுத்தி கொள்கிறார்கள். ஆள்வோருக்கு ஸலாம் போடுகிறார்கள். அவர்களை கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் ஆடுகிறார்கள். இன்னொரு முக்கியமான கேள்வி ஒரு பெரிய இடத்தில இதுபோல் செயல்படுவார்களா? இந்த ஐந்து பேரும் சாகடிக்கப்பட வேண்டும் அப்போதுதான் அந்த இளைஞரின் ஆன்மா சாந்தியடையும்.


சமீபத்திய செய்தி