உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல்துறை மெத்தனம்: ஐகோர்ட் கடும் அதிருப்தி

காவல்துறை மெத்தனம்: ஐகோர்ட் கடும் அதிருப்தி

சென்னை : தமிழக காவல் துறையின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுகளை போலீஸ் நிறைவேற்றுவது இல்லை என, ஐகோர்ட் பலமுறை அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது, 'கோர்ட் உத்தரவையே அலட்சியம் செய்யும் போலீசாரை வைத்துக் கொண்டு எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும்?' என்று கடுமையான கேள்வியும் எழுப்பியது. அந்த பின்னணியில், நேற்று ஒரு வழக்கில் நீதிபதி வேல்முருகன், காவல் துறை மீதான வேதனையை வெளிப்படுத்தினார். காவல் துறைக்கு பொறுப்பான உள்துறை செயலருக்கு, காவல் துறையின் அலட்சியமான செயல்பாடுகள் குறித்து தெரியுமா என்பதே தனக்கு தெரியவில்லை என்றார் அவர். சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் சுந்தர் என்பவர், தன் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்ததாக, 2015ல் புகார் கொடுத்தார். உடனே முதல் தகவல் அறிக்கை எழுதி, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், 10 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், அதற்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் சுந்தர் வழக்கு தொடர்ந்தார்.அதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் நிலை என்ன என்று அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

முடித்து வைப்பு

'வழக்கு, 2015ல் பதிவு செய்யப்பட்டது; அதே ஆண்டில் முடித்து வைக்கப்பட்டது; குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யவில்லை' என, காவல் துறை தெரிவித்தது. இதை ஏற்க மறுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பதிவு செய்யும் வழக்குகளில், புலன் விசாரணை முடிந்த பிறகும், காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது, இது முதல் முறை அல்ல. தமிழகம் முழுதும் பல வழக்குகளில் இவ்வாறு நடந்துள்ளது; இன்னும் நடக்கிறது. ஒரு புகாரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும், உடனே அதை நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். புலன் விசாரணை துவங்கியதும் சாட்சி ஆவணங்கள், வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். குறித்த காலத்துக்குள் புலன் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இது தான் சட்ட நடைமுறை. ஆனால், உண்மையில் அப்படி நடக்கவில்லை.வழக்கு போட வசதி உள்ளவர்கள், வக்கீலை அமர்த்தி மனு தாக்கல் செய்து, போலீஸ் விசாரணைக்கு வேகமாக உத்தரவுகளை பெறுகின்றனர். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வர்? அவர்கள் நீதி கேட்டு போராட வேண்டிய நிலை உள்ளது. சில வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அந்த உத்தரவை போலீசார் பின்பற்றுவது இல்லை.ஏதோ ஒரு வகையில், போலீசார் பொதுமக்களுக்காக அல்லாமல், தன்னிச்சையாக செயல்படுகின்றனர். பாதிக்கப்படும் அத்தனை பேரும் நீதிமன்றத்தை நாடி, உத்தரவை பெற இயலாது. புகார் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யவும், புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றை பார்க்கும் போது, போலீஸ் அதிகாரிகள் சட்டத்தை பின்பற்றுவது இல்லை என்பது தெளிவாகிறது. இந்த வழக்கு, அதற்கு ஒரு உதாரணம். கடந்த 2015ல் பதிவான வழக்கு, அதே ஆண்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதம்

ஆனால், அது குறித்த விபரங்களை ஒன்பது ஆண்டுகள் வரை மனுதாரருக்கு, போலீசார் தெரிவிக்கவில்லை; சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.இதுபோல நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும், அவற்றால் அப்பாவி பொதுமக்கள், ஏழைகள் பாதிக்கப்படுவது குறித்தும், தமிழக உள்துறை செயலருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. எனவே, தமிழக உள்துறை செயலர், இந்த கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Sridhar
ஜன 31, 2025 13:02

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு ஒழுங்குனா என்னான்னே தெரியாதவங்க சொல்றாங்க.


c.k.sundar rao
ஜன 31, 2025 11:31

Not only bureaucrats, even ruling govt politicians should also be questioned by the court for respecting the court order.


Rajasekar Jayaraman
ஜன 31, 2025 10:24

ஐயோ பாவம் வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கி போகலாமே பணத்துக்கு ஆசைபட்டால் தலை குனிவுதான்.


Rajasekar Jayaraman
ஜன 31, 2025 09:47

திருட்டு திராவிடத்தால் போலீஸ் தலைகுனிவு அண்ணாமலை சார் மிகுந்த பாதுகாப்பாக இருங்கள் தமிழகத்தில் பயமின்றி சட்ட ஒழுங்கின்மையை வெளி கொண்டு வருவது நீங்கள் மட்டுமே உஷார்.


sridhar
ஜன 31, 2025 09:43

பாவம் home secretary. அவர் இஷ்டப்படியா போலீஸ் நடக்குது. போலீஸ் துறை மந்திரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 31, 2025 11:36

போலீஸ் துறை மந்திரியிடம் போலீஸ் துறையே இல்லை. எல்லாம் அந்த அந்த ஊர் வட்டங்கள் மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் பத்திரமாக உள்ளது. IAS IPS படித்தாலும் வட்டங்கள் மாவட்டங்களுக்கு கூஜா தூக்கி தான் ஆக வேண்டும். 2026 பிறகு இலவசத்துக்கும் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தமிழகம் விலை போனால் நீதிபதி நீதிபதி என்று பெருமையுடன் இருப்பவர்களே வட்டங்கள் மாவட்டங்களுக்கு கால் மிதியடி ஆக வேலை பார்க்க வேண்டி வரும்.


R.PERUMALRAJA
ஜன 31, 2025 09:35

அவர்கள் தான் socialmedia வில் busy யாக இருக்கிறார்கள், socialmedia வில் வீடியோ /ஆடியோ post செய்கிறார்கள் . socialmedia வில் போஸ்ட் போடுவதில் காவல்துறை அதிகாரிகள் இடையே போட்டி வேறு, அரசு சம்பளம் வாங்கும் சில காவல் துறை உயர் அதிகாரிகள் அதுவும் குறிப்பாக திருச்சி D.I.G வருண்குமார், தங்களின் கடமைகளை செய்யும் விடீயோக்களை socialmedia வில் போஸ்ட் போடுகிறார்கள். அரசு சம்பளம் அரசு வேலை செய்வதற்காக, தனி நபரின் சுய தம்பட்டத்திற்காகவோ, தற் பெருமையிற்காகவோ அல்ல. சீமானை ஒழித்துக்கட்ட இந்த அரசு காவல்துறையிர்க்கு அதிக சுதந்திரம் கொடுத்ததனாலும், முதல்வர் காவல்துறையினரை கண்டுகொள்ளும் நிலையில் இல்லாததனால், காவல் துறையினர், அவர்களுக்குள் இந்த அரசை கோமாளி தனம் கொண்ட அரசாக என்ன துவங்கிவிட்டனர், அதனாலேயே காவல்துறையினர் தங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் லஞ்சம், லாவண்யம், காவல்நிலைய கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா, meth வியாபாரம், socialmedia போஸ்ட் உள்பட அணைத்து வேலைகளையும் தறிகெட்டு ஓடும் வாகனம் போல தங்கள் நடவடிக்கைகளை சுயலாபத்திற்காகவும் தி மு க வினருக்காகவும் செய்து கொண்டுஇருக்கிறார்கள். மேலே சொன்னதில் முன்னோடி socialmedia hero திருச்சி காவல்துறை D.I.G வருண்குமார் .


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 31, 2025 09:34

தமிழ்நாட்டில் காவல்துறை உள்ளதா? நீங்கள் கூறுவது வியப்பாக உள்ளது.


Kalyanaraman
ஜன 31, 2025 08:37

குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடையாது. ஜவ்வு மாதிரி பல வருடங்கள் விசாரணை இழுத்துக் கொண்டே செல்லும். மேலும், நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஆண்மையும் இல்லை முதுகெலும்பும் இல்லை. இருந்திருந்தால் மக்கள் இப்படி நீதிமன்றத்தில் போராட வேண்டிய அவசியம் இல்லை. பாவப்பட்ட சாமானியனிடம்தான் தனது அட்டை கத்தியை சுழற்றும்.


அப்பாவி
ஜன 31, 2025 08:35

கழுவி கழுவி ஊத்தினாலும்.கரை போகாது கோவால்.


Ganesh Subbarao
ஜன 31, 2025 12:27

10 வருடம் கூப்பில் இருந்தது மறந்து போச்சா?


Kasimani Baskaran
ஜன 31, 2025 08:13

பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட ஆட்கள் இருக்கும்வரை இதையெல்லாம் கேள்வி கேட்க முடியாது. அதுதான் அப்படி என்றால் நன்கு படித்தவர்கள் கூட ஓட்டுப்போட போவது கிடையாது. பெரியார் சுதந்திரத்துக்கு போராடினார் என்று நம்பும் உடன் பிறப்புக்கள் கூட ஒரு வகையில் காரணமானவர்கள்தான். அடுத்த தேர்தலில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது [1] ஓட்டுப் போடாவர்களை கண்டுபிடித்து சொந்தச்செலவிலாவது வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்லுங்கள் [2] பணம் வாங்கி ஓட்டுப்போடுபவர்களை காட்டிக்கொடுங்கள் [3] காரியம் கைகூடினாலும் இல்லை என்றாலும் லஞ்சம் வாங்கியவனை காட்டிக்கொடுங்கள் [4] பெனாமிகளை அறிந்திருந்தால் சிபிஐ அல்லது அமலாக்கத்துறைக்கு தகவல் சொல்லுங்கள் [5] கலாச்சாரத்தை இழிவு படுத்தும் எவனையும் சும்மா விடாதீர்கள்..


புதிய வீடியோ