உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாவட்டங்களில் வரும் 12ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

6 மாவட்டங்களில் வரும் 12ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: செங்கல்பட்டு, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், வரும் 12ம் தேதி, தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடக்கிறது.தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில், வரும் 12ம் தேதி நடக்கிறது.அரசு நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களில், இந்த முகாம்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.'நல்வாழ்விற்கான இரு துளிகள், போலியோ இல்லா வெற்றிநிலை தொடரட்டும்' என்ற தலைப்பில் இம்முகாம் நடக்கிறது.இம்முகாம்களில், 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் அடுத்தக்கட்டமாக சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தியாகு
அக் 10, 2025 11:43

சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும் குழந்தைகளே, மருந்து டுமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தால் அதுவும் கட்டுமர திருட்டு திமுகவினரின் பினாமி ஆலைகளில் தயாரிக்கப்பட்டு இருந்தால் வாயை திறக்கவேண்டாம். எப்படியாவது மருந்தை உண்ணாமல் துப்பி விடவும்.


தியாகு
அக் 10, 2025 12:00

ஹி...ஹி...ஹி...போட்டோவில் இருக்கும் குழந்தை தமிழ்நாட்டு குழந்தை மாதிரி தெரியவில்லை, மருந்தை பார்த்தாலும் தமிழ்நாட்டில் தயாரித்தது மாதிரி தெரியவில்லை. அதனால் குழந்தை சந்தோசமாக ஏதோ இனிப்பு கொடுக்கிறார்கள் என்று வாயை திறக்கிறது. ஹி...ஹி...ஹி.. அழகு செல்லம். ஹி...ஹி...ஹி...


Ramesh Sargam
அக் 10, 2025 09:24

முகாமில் தரமான மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்கவும். அந்த காஞ்சிபுரம் இருமல் மருந்து போல ஏதாவது தரமில்லா மருந்தை கொடுத்து.... குழந்தைகளை எதுவும் செய்திடாதீர்கள். இது என் பணிவான வேண்டுகோள்.


GMM
அக் 10, 2025 07:35

தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில், வரும் 12ம் தேதி நடக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதிகள் கண்காணிப்பது நல்லது. ஆளும் கட்சி சார்பு இல்லாத மக்களும் உதவ வேண்டும். மத்திய அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியலாக மாறும்?


Samy Chinnathambi
அக் 10, 2025 06:51

இதையாவது தரமா தயாரிச்சிங்களா? இல்லை திராவிட மாடல் அரசு பதில் சொல்லனுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை