உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர்: வி.சி., காரசாரம்

கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர்: வி.சி., காரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க.,வுடனான கூட்டணி பங்கீட்டில், கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலன் அறிக்கை:

பிரசாந்த் கிஷார் - விஜய் சந்திப்பு, என்ன வேடம் கட்டினாலும், ஆட்டம் எடுபடாது. வியூகம் என்பது குறளி வித்தை. தேர்தல் வியூகம் என்பதெல்லாம் ஒரு மாயை. வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர், பீஹார் தேர்தலில் பல தொகுதிகளில், 'டிபாசிட்' தொகையைக் கூட பெற முடியாமல், அதள பாதாளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த வியூக வண்டி. தேர்தல் வியூகம் என்பது குறுக்கு வழி; மக்களை ஏமாற்றும் வழி; ஜாதி அடிப்படையிலான ஓட்டுகளை நியாயப்படுத்தும் வழி.கடந்த, 2021ல் தி.மு.க., வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் காரணம் என்றால், 2024 லோக்சபா தேர்தல் வெற்றிக்கு யார் காரணம்? வியூகம் என்பது ஒன்றும் கிடையாது. வேலையில்லா இளைஞர்களை வைத்துக்கொண்டு, கட்சிகளிடம் பணம் பறிக்கும் வேலை.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுகிறது என்றால், கொள்கை சார்ந்து வலுவான கூட்டணி அமைத்தது தான் காரணம். தி.மு.க., கூட்டணி கட்சிகளில் காங்கிரசை தவிர, மற்ற கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஆறு தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக்கூடாது என, கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்துவிட்டு சென்றவர். வியூகத்தை நம்பாமல், கொள்கையோடு மக்களை நாடினால் மட்டும் வெற்றி கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

ponssasi
பிப் 14, 2025 17:22

இந்த பிரசாந்தை என்ன செய்தால் தகும். கழுத்தில் கைவைக்கும் அளவுக்கு வந்தபின் கழுத்தை நெரித்து இரண்டு சீட்டும் கொடுக்காமல் போட்டிருக்கவேண்டாமா?


panneer selvam
பிப் 14, 2025 16:14

Thiruma ji , your confession on electoral strategy is explicit. Just deceive the voters with short cut promises & emotional dialogue and induce the e affinity . So all Dravidian parties have adopted these strategy to occupy the power .


RAMESH
பிப் 14, 2025 15:39

அடங்க மறு அத்து மீறு நபர்கள் இதை ஸ்டாலின் மற்றும் திருமாவிடம் சொல்ல முடியுமா....உனக்கு இதே அதிகம்.....கொடுத்ததை பெற்று கொண்டு அடக்கி வாசி


M Ramachandran
பிப் 13, 2025 13:27

கழுத்தை நெரித்தாலும் பரவாயில்லை ஒரு நபர் 25 கோடி பெரிசென்று தலையாட்டி விட்டார் நீஙகளூம் பை நிறையா காசு நிச்சம் MP ஆகி அதில் கிடைக்கும் லாபம் ஏராளம் என்று அப்போது கப்சிப் என்று அடக்கமாகி விட்டிர்கள்.


S.V.Srinivasan
பிப் 14, 2025 15:54

அதெல்லாம் அவருக்கு இப்போ நினைவில்லீங்கோ . 2 எம்பி சீட் கிடைத்தவுடன் வாய மூடி க்கிட்டாரு. இப்போ சவுண்ட் விட்றாரு.


theruvasagan
பிப் 13, 2025 13:04

நடந்து நாலு வருசமாச்சு. அப்ப ஏன் வாயை தொறக்கல. ஒருத்தனக்கு தனது வாய் தன்னோடதாகத்தான் இருக்ணும். அதை வாடகைக்கு விட்டு பொழைக்கறது எல்லாம் மானங்கெட்ட பொழப்பு. அதான் எவனும் சல்லிக்காசுக்கு மதிக்கிறதில்லை. தன்மானமில்லாதவன் ஆயுசு முழுக்க அடிமையாக காலடியில் கிடந்துதான் பொழப்பை ஓட்டணும்.


அன்பு
பிப் 13, 2025 16:39

எல்லாமே திமுகவின் நாடகம். திருமா, ஆதவ், விஜய் நடிக்கும் புதிய படம்.


மண்
பிப் 13, 2025 11:38

அதான பார்த்தேன் விஜய் கட்சிக்கு போன அங்கேயும் கிஷோர் ஹி..ஹி சீட்டு பேரபேச முடியாது அதான் இந்த ஊளை விடுகிறீர் குருமா!!


xyzabc
பிப் 13, 2025 11:36

200 ரூ அடிமைகள் தி மு க விற்கே வோட்டை போடுவார்கள். Pk வந்தால் என்ன, போனால் என்ன ?


R.MURALIKRISHNAN
பிப் 13, 2025 11:34

நெரித்தாலும் ஓசி சோறு மட்டுமே முக்கியம் என்று இருந்த நீர் இதை பற்றி பேச அருகதையற்றவ.ர்


Narasimhan
பிப் 13, 2025 11:11

திமுக உதவி இல்லாமல் உங்கள் கட்சிக்கு சட்ட மன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ஒரு சீட் கூட கிடைத்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் தகுதிக்கு எது சரியோ அதை செய்யுங்கள். உங்களால் தலித்துகளுக்கு ஒரு முன்னேற்றமும் வரவில்லை. ஒதுக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் சமமாக முன்னேற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதில் அரசியல் ஆதாயம் தேடும் தங்களை போன்றோர் ஒரு சாபக்கேடு


தமிழ்வேள்
பிப் 13, 2025 11:03

பி கே, ஜாதி அடிப்படையிலான ஓட்டுக்களை நியாயப்படுத்துவது தவறு -என்றால், அதே தவறை கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாக மனசாட்சியின்றி உங்கள் திருட்டு திராவிடம்தானே செய்தது ..அது அப்போது சரியா? இவர்களுக்கு பாதகம் என்றால் கூவுவது, சாதகம் என்றால் தூக்கி பிடிப்பது. இவர்கள்தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்.. பி கே வேலையில்லாத இளைஞர்களை வைத்துக் கொண்டு கெடுக்கிறார் என்றால், குருமா வகையறா மட்டும் என்ன செய்கிறது ? புளுகரத்துக்கு எல்லையில்லையா டே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை