உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் இன்று ஆய்வு

தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் இன்று ஆய்வு

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனருக்கு தெரியாமல், ஒட்டு கேட்கும் கருவியை யார் பொருத்தி உள்ளனர் என்பது குறித்து, தனியார் துப்புறியும் நிறுவனத்தினர் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர். விருத்தாசலத்தில் நேற்று நடந்த வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,'என் வீட்டில் நான் உட்காரும் இடத்தில், என்னுடைய நாற்காலிக்கு பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி லண்டனிலிருந்து வந்துள்ளது. விலை அதிகமானது. இந்த கருவியை யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து வருகிறாம்' என, கூறியிருந்தார்.இந்த ஒட்டு கேட்கும் கருவி தைலாபுரம் தோட்டத்திலுள்ள ராமதாஸ் இல்லத்தில் இரு தினங்களுக்கு முன், பொருத்தியிருந்தது, சென்னையிலுள்ள தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, ராமதாசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கட்சி தொடர்பான அவசர முடிவுகள் எடுக்கும் போது, உடனுக்குடன், கட்சிக்கு எதிராக உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் தெரிந்த பின்னர்தான், தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுகேட்கும் கருவி ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் ஆய்வு நடத்திய பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இரு நாட்கள் கட்சி தொடர்பான கூட்டங்களை முடித்துக்கொண்டு, ராமதாஸ் நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை, தனியார் துப்பறியும் ஏஜென்சி மீண்டும் தைலாபுரம் தோட்டத்தில், ஒட்டுகேட்கும் கருவி குறித்து, நேரடியாக வந்து ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டு கேட்கும் கருவி எங்கிருந்து வாங்கப்பட்டது, யார் மூலம் வாங்கி தைலாபுரம் தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து, தனியார் துப்பறியும் ஏஜென்சி, கட்சி நிறுவனர் ராமதாசிடம் முறைப்படி, விவரமாக தகவல் அளிக்க உள்ளது. இதன் அடிப்படையில் சென்னையிலுள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில், முறையாக தைலாபுரம் தோட்டம் சார்பில் புகார் கொடுக்கப்படும் என்று பா.ம.க.,வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N PALANISAMY
ஜூலை 14, 2025 13:49

நிச்சயம் இது பற்றி சின்னமாங்காய்க்கு எதுவும் தெரியாது என்று, பெரிய மாங்காயும் நாங்களும் நம்பிவிட்டோம்... ஆமா...


Balaji
ஜூலை 13, 2025 15:40

ஆளும் கட்சியின் சார்பான டிவி சானல்கள் மிக முனைப்புடன் பா.ம.க பிளவு எப்போது, என எதிர்பார்த்து காத்திருப்பது, அது சம்பந்தமான விஷயங்களை உடனுக்குடன் ஒளிபரப்புவது, அனைவரும் அறிந்த விஷயமே.


Nalla Paiyan
ஜூலை 13, 2025 11:27

இது என்ன பெரிய விஷயம் இது ஒன்னு ராமதாஸோட மகன் என்ன மகள் வச்சிருக்கீங்க அவ்வளவுதான் என்ன பெரிய ராணுவ ரகசியமா பேசிக்க போறாங்க மத்த கட்சிக்காரர்கள் ஓட்டு கேட்கிற கருவி வெச்சி கேக்குறதுக்கு வேலைய பாருங்கய்யா வெண்ணைங்களா.....


Bhaskaran
ஜூலை 12, 2025 20:09

அய்யா யோசனைப்படி இந்தியா முன்னேறி விடக்கூடாது என்கிற அச்சத்தில் அய்யாவின் செயல்பாடுகளை கண்காணிக்க அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏற்பாட்டின்படி சி அய்.ஏ கைக்கூலிகள் பொருத்தி உள்ளனர் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது


Renganathan J
ஜூலை 12, 2025 18:45

சரியாக சொல்லப்பட்டது. இருவரும் இணைந்து நாடகம் நடத்துகிறார்கள்..... மக்கள் ஏமாற மாட்டார்கள்


ashok krishna
ஜூலை 12, 2025 15:51

laser device spy and misguide tamilian


KRISHNAN R
ஜூலை 12, 2025 14:27

நல்லா பாருங்க... சின்னையா ஏற்பாடா இருக்கும்


தமிழ் நாட்டு அறிவாளி
ஜூலை 12, 2025 10:01

ஒரு தக் லைப், செக்க சிவந்த வானம் படம் பார்ப்பது போல இருக்கு


பெரிய குத்தூசி
ஜூலை 12, 2025 08:28

வாக்கு வங்கியை பெற பொதுமக்களிடம் ஒரு சிம்பதியை பெற அப்பாவும் மகனும் டிராமா பண்ணிக்கிட்டு இருகாங்க. டெய்லி இத ஒரு செய்தியா பாக்கறது ரொம்ப போர் அடிச்சிடிச்சி. என்ன நாடகம் போட்டாலும் பாமக ஜாதி கட்சிதான். பாமக, பொய்யா புளுகிதள்ற திமுக, புளுத்துப்போன அதிமுக, வீணாப்போன விசிக, நாசமா போன நாதக, எவன் முதுகிலேவது சவாரி பண்ணும் முடமான தமிழக பிஜேபி, அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய சாக்கடை புழுக்கள்தான் . முதல தைலாபுரம் பாமக நாடகத்தை நிறுத்துங்கப்பா.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 08:03

டாக்டர் ராமதாஸ் உலகநாடுகள் பலவற்றிற்கு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார் ,,அவர் கொடுக்கும் ஆலோசனையை காப்பியடித்து முன்னேற சில விஷமி நாடுகள் தைலாபுரதோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவியை பொருத்தி இருக்கின்றனர் ..டாக்டர் ராமதாஸ் அவர்களின் பொருளாதார நிபுணத்துவத்தை கேட்டு முன்னேறியவர்தான் இலன்மஸ்க் ,,வாரன்பப்பட் , பில் கேட்ஸ் .. போன்றவர்கள் ...யுனைடெட் கிங்டம் , குவைத் , அமெரிக்கா , பஹ்ரைன், ஓமான் , ஜோர்டான் , ஜிப்ரால்டர் , ஸ்விஸ்ச்சர்லாந்து போன்ற நாடுகளின் பணமதிப்பு கூடியதற்கு ராமதாஸின் பொருளாதார அறிவுரைதான் கரணம் .. இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளதான் ஒட்டு கேட்கும் கருவி .பொருத்தப்பட்டுள்ளது .அதை நல்லவேளை ராமதாஸ் தன நுண்ணிய அறிவால் கண்டுபிடித்துவிட்டார் ..இதை எந்தநாடு செய்த்து என்று தனியார் துபாப்ரியும் நிபுணர்கள் கண்டுபிடித்து ஸ்காட்லாந்து யார்ட் உளவுத்துறைக்கு சொல்லிவிட்டார்கள் .. இனி பல நாடுகளுக்கு ஆப்பு கன்போர்ம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை