அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்யுங்கள்
தமிழகத்தில் நெல் கொள்முதல், தற்போது உடனுக்குடன் மேற்கொள்ளப்படாததற்கு, அரிசி செறிவூட்டல் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு இன்னும் வழங்காதது தான் காரணம் என, உணவுத்துறை அமைச்சர் கூறுகிறார். நேரடி கொள்முதல் நிலையங்களில், தற்போது தேங்கி இருக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதன்பின், அரிசி செறிவூட்டுதல் திட்டம், ஈரப்பதத்திற்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். - - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்