உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: -நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டி அடித்தனர். நவ.,1ல் ராமேஸ்வரத்தில் இருந்து 360 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம்போல் இந்திய- -இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்த போது அன்று மாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். கைதுக்கு பயந்து அச்சமடைந்த மீனவர்கள் தொடர்ந்து அப்பகுதியில் மீன் பிடிக்காமல் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக் கொண்டு படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின் ராமேஸ்வரம் எல்லைப் பகுதியில் மீன்பிடித்த போது, எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி பெரும் நஷ்டத்துடன் நேற்று கரை திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி