உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; உங்க மாவட்டம் இருக்கா நோட் பண்ணுங்க!

நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; உங்க மாவட்டம் இருக்கா நோட் பண்ணுங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று (நவ.,28) மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (நவ.,28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை (நவ.29) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டிச.,2ம் தேதி வரை கனமழை நீடிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sainathan Veeraraghavan
நவ 28, 2024 17:14

வருடா வருடம் வெள்ளம் தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னையில் ஏற்படும். விடியாத அரசு ஒன்றும் செய்யாது. வெள்ள நிவாரண பணிகள் முழு வீச்சில் நடை பெறுகின்றன என்று மந்திரிகள் அறிக்கை விட்டு விட்டு குறட்டை விடுவார்கள்


MARI KUMAR
நவ 28, 2024 15:17

செய்தியும் சிறப்பு படம் சிறப்பாக உள்ளது


புதிய வீடியோ