வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Raj
நவ 30, 2024 15:02
நல்ல தகவல்
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் மாலை 4 மணி வரை 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.பெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் மாலை 4 மணி வரை 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.ரெட் அலெர்ட்
* விழுப்புரம், * வேலுார், * திருவண்ணாமலை, * காஞ்சிபுரம், * ராணிப்பேட்டை, * திருவள்ளூர், * செங்கல்பட்டு, * சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.மிதமான மழைக்கு வாய்ப்பு
* கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நல்ல தகவல்