உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது

எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது

தி.மு.க.,வின் ஊழல்களுக்கு கவர்னர் ரவி, மிகப்பெரிய தடையாக இருக்கிறார். ஏதாவது ஒரு பைலை அவருக்கு அனுப்பி, அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், எதிரியாக சித்தரிக்கின்றனர். கவர்னர் மீது, தி.மு.க., அரசுக்கு வன்மம். தமிழகத்தில், ஊடகங்கள் முடக்கப்படுவது, அராஜகம். தி.மு.க., எப்பவுமே, அவர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவோரை நல்லவர்கள் எனவும், எதிராக செய்தி வெளியிடுவோரை கெட்டவர்கள் எனவும் சொல்லும். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது, எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது. - முருகன் மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை