பஸ் சேவையை மேம்படுத்த கருத்து கேட்பு
சென்னை:விரைவு பஸ்கள் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாயிலாக, தினமும் 2,500க்கும் மேற்பட்ட விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரைவு பஸ்களில் பயணம் செய்வோரிடம், புகார்கள் பெறுகிறோம். சேவையை மேம்படுத்த, பொதுமக்கள் https://www.tnstc.inஎன்ற இணையதளம் வாயிலாக, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கருத்துகளை ஆய்வு செய்து, சேவையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.