உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி நாகேந்திரன் உடல் முன் இளைய மகன் திருமணம்

ரவுடி நாகேந்திரன் உடல் முன் இளைய மகன் திருமணம்

சென்னை: சென்னை வியாசர்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில், ரவுடி நாகேந்திரனின் உடல் முன், அவரது இளைய மகன் திருமணம் செய்து கொண்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக, ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நாகேந்திரன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் மூத்த மகனான அஸ்வத்தாமனிடம், நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை, வியாசர்பாடியில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டி ருந்த நாகேந்திரனின் உடல் முன், அவரது இளைய மகன் அஜித்ராஜ் - ஷகினா ஜோடி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2023ல் நிச்சயிக்கப்பட்ட திருமணம், பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், நேற்று நடந்தது. நாகேந்திரனின் இறுதி சடங்கிற்காக, அஜித்ராஜ் கடந்த 9ம் தேதி சிறையில் இருந்து பரோலில் வந்தது குறிப்பிடத்தக்கது. மாலை 4:00 மணியளவில், நாகேந்திரனின் உடல் வியாசர்பாடி, முல்லை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வாய்மையே வெல்லும்
அக் 13, 2025 12:20

நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.. பேசாம அந்த பெண்ணை ஜேப்படி செய்வது எப்படி என நாகேந்திரன் பிள்ளை சொல்லி கொடுக்கவேணும் . உடனே திருட்டு கேஸ் ல மாட்டிய பின்னே அதே போலீஸ் நிலையம். ஜையிலியேயே வாழ்க்கையை இருவரும் சுகமாக கழிக்கலாம் அரசு செலவில் .. என்னுடைய ஐடியாவிற்கு முட்டு கொடுப்பவர்கள் ஓரமாக சண்டைபோட்டுக்காம விளையாடவும்.


KOVAIKARAN
அக் 13, 2025 12:17

மரணம் அடைந்த ஒரு கைதிக்கு 600 போலீசார் பாதுகாப்பு. எதற்கு? பிணத்திற்காகவா? வேறு எவரும் அதைத்தூக்கிக்கொண்டு போகக்கூடாது என்பதற்காக 600 போலீசார் காவலா?


Rathna
அக் 13, 2025 11:47

கெட்டவர்கள் கெட்ட செயல்களை கெட்ட நேரத்தில் செய்வர். இது ஊழ்வினை. செய்த பாவங்கள், மீண்டும் மீண்டும் மனிதர்களை தவறான வழியில் கொண்டு செல்லும்.


Natchimuthu Chithiraisamy
அக் 13, 2025 10:33

சிறையிலிருந்து வந்தவர் திருமணம் செய்துகொண்டால் ஓராண்டு சிறையில் போகவேண்டுயது இல்லை என ஆங்கில சட்டத்தில் உள்ளதோ என்னோவோ


baala
அக் 13, 2025 09:25

மாப்பிள்ளையும் சிறையிலிருந்த வந்தாரா?


Mani . V
அக் 13, 2025 05:38

ஏன் பாஸ், ஒரு ரௌடியின் உடலுக்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியும் உங்களால், கரூர் கூட்டத்துக்கு ஏன் போதிய பாதுகாப்பு வழங்க முடியவில்லை? யோவ், நாம கூடுதல் பாதுகாப்பை வழங்கி இருந்தால், நமது மேல்மட்டம் எப்படி டேக் டைவேர்ஷன் ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க முடியும்?


நிவேதா
அக் 13, 2025 11:46

உங்கள் கேள்வி அண்ணாமலை பேச்சினால் உந்தப்பட்ட கேள்வி. அன்று, ஜெயலலிதாவுக்கு அணிலாக மாறிய விஜய் போன்று, இன்று அண்ணாமலை, விஜய்க்கு அணிலாக மாறிக்கொண்டிருக்கிறார்.


புதிய வீடியோ