உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களில் ரூ.1,153 கோடி கொள்ளை; ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தகவல்

கோவில்களில் ரூ.1,153 கோடி கொள்ளை; ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு : ''அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சிகளில், வரி என்ற பெயரில், தமிழக கோவில்களில் இருந்து, மூன்றாண்டுகளில், 1,153 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது,'' என, ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.ஈரோடு ஆருதர் கபாலீஸ்வரர் கோவிலில், ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், நேற்று தரிசனம் செய்தார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஈரோட்டின் புராதனமான ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் தொன்மை அழிக்கப்பட்டுள்ளது. கருவறையை சுற்றியிருந்த பழமையான சிலைகள் திருடப்பட்டு புதிதாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமர், கோவில் சொத்து கொள்ளை அடிக்கப்படுவதாக சொன்னதை உறுதிப்படுத்தும் வகையில், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் மோசடி நிகழ்ந்துள்ளது.கடந்த ஆட்சி, இந்த ஆட்சி என இரண்டு ஆட்சியிலும், கோவிலுக்கு வரி போடுவது மட்டுமின்றி, கோவில் கணக்கை தணிக்கை செய்வதாக காண்பித்து, 2018ல், 327 கோடி ரூபாய், 2019ல், 348 கோடி, 2021ல், 478 கோடி ரூபாயை வரியாக எடுத்துள்ளனர். தற்போது தமிழக ஹிந்து கோவில்களில் இருந்து, 656 கோடி ரூபாய் வரியாக எடுக்கப்படுகிறது. அதாவது மாதந்தோறும், 56 கோடி ரூபாய் வரி போடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சம்பா
டிச 03, 2024 13:19

எடுபடாது பேசாம ஊட்ல ஓய்வெடு


Kanns
டிச 03, 2024 12:44

Temple Asset Usurpers land etc etc are EnormousRuling Party& Stooge Official Conspirator Criminals. Sack& Punish All


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 10:25

ரிட்டயரான பிறகும், சிலை கடத்தல் 4 கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று மக்கள் வரிப்பணத்தில் கார், ஆபீஸ் எல்லாம் வெச்சுக்கிட்டு, 2, 3 வருஷமா ஒன்றும் செய்யவில்லை. சிலை கடத்தல் ஆசாமிகளோடு இவருக்கு உறவு என்று இவர் மீதே கேஸ் வந்ததும், நெத்தி நிறைய பட்டை போட்டுக்கிட்டு, முன் ஜாமீன் வாங்கியதால் வெளிய இருக்கார். ஆளுக்கு ஒரு பிரச்சனை பற்றி பேசுகிறார்கள். இவரு பாத்தாரு, பாஜக வில் தான் வெற்றிடம் நிறைய. எப்படி உள்ளே நுழைய்வது என்று பார்த்து, பாஜக வுக்குப் பிடித்த, ஆனால் தமிழ் நாட்டு மக்களுக்குப் பிடிக்காத மத வாதத்தை, கையில் எடுத்துட்டார். அண்ணாமலை நோட் திஸ் பாயிண்ட்.


Dharmavaan
டிச 03, 2024 11:35

திருட்டு த்ரவிட கிறுக்கனுக்கு இப்படித்தான் தெரியும் உன் குலத்துக்கு நீ ஒரு சாபக்கேடு


sridhar
டிச 03, 2024 12:43

ஹிந்து மதவாதம் பிடிக்காது என்று சொல்லுங்க . கிறிஸ்துவ இஸ்லாமிய மதவாதம் டபுள் ஓகே . கிரிஸ்துவர் அய்யப்பனை அசிங்கமா பேசலாம் , இஸ்லாமியர் ஹிந்து கோவில் வாசலில் குண்டு வைக்கலாம் . ஆனால் ஹிந்து மத உணர்வு புண்பட்டுவிட்டதாக சொன்னால் அது மட்டும் மத வாதம். Shameless, insensitive Hindus are dmk's strength.


M Ramachandran
டிச 03, 2024 10:11

காது கிழிய கத்தி என்ன உபயோகம். மூட மக்கள் இருக்கும் கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் ஒன்றும் நடக்காது. மற்ற மாநிலங்களில் மக்கள் ஓரளவிற்கு விழிப்புடன் யிருக்கிறார்கள். அரசியலில் மாற்றம் நிகழ்கிறது. மண்டூகங்களும் கூடிய மக்களிடமும் குடியர்களினாலும் குணம் மாறாது


AMLA ASOKAN
டிச 03, 2024 09:58

இந்த மாமனிதர் உயர் போலீஸ் பதவியில் இருந்த பொழுது தன் சம்பளத்தை சரியாக எண்ணிப் பெற்றுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு ஆட்சியாளருக்கு அடிபணிந்து சேவை செய்துவிட்டு, இப்பொழுது களவு, திருட்டு என கூப்பாடு போடுவதால் மக்கள் இவர் பேச்சை கேட்க போவதில்லை. இவர் RTI ன் கீழ் விபரங்கள் அறியலாம், நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கலாம். இன்று பக்திமான் போல நடிக்கும் இவர், ஏன் அன்று பதவியை ராஜினாமா செய்யவில்லை? கோவில் நிர்வாகம் தனியார் அமைப்பின் கீழ் சென்றால் பதவி சண்டை, பண மோசடி பெருகிவிடும்


Malarvizhi
டிச 03, 2024 14:53

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதற்கு முன்பு, கோவில்கள் கடவுள் பக்தி கொண்ட உள்ளூர் அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டன . அத்தகைய அறங்காவலர்களாலும், நீதி வழுவா அரசர்களாலும்தான் இத்தனை ஆயிரக்கணக்கான வருடங்களாக கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்தோ கடந்த சுமார் ஐம்பத்தி ஏழு வருடங்களாக தமிழக கோவில்கள் நாத்திகர்களின் கையில் சிக்கி சீரழிகின்றன. தொண்ணூறு சதவிகித கோவில்களில் அறங்காவலர் குழுக்களே இல்லை என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. கோவில்களின் மத விவகாரங்களில், வழிபாட்டு முறைகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. அறங்காவலர் குழுக்களும் இல்லை. பிறகு கோவில்கள் எப்படி சீராக செயல்படும்?


Pandianpillai Pandi
டிச 03, 2024 09:00

உயர் பதவியில் இருந்தவர் அரசியல் சாயம் பூசி பேசுவது சரியல்ல. பிரதமர் மோடி கூறுவது போல கொள்ளை நடக்கிறது என்று கூறுவது அரசியல் தரம் சீர்கெட்டுவிட்டதாக தான் கருத முடிகிறது. உங்களுக்கு அவ்வாறு சந்தேகம் இருந்தால் மாண்புமிகு முதலமைச்சர் மக்கள் குறையை தீர்ப்பதற்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் மக்களின் குறைகளை தீர்த்து வருகிற ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து நீங்கள் புகாராக தந்திருக்கலாம். பொதுவெளியில் அரசை குறை கூறுவது அபத்தமாகும். கோயில்களில் வரும் வருவாயை கோயில்களுக்கு தான் செலவிடப்படிகிறது என்பதை பாமர மக்களும் அறிவர். தி மு க அரசு புகழ் பெறுவதை சகிக்க முடியாத திறனற்ற கட்சிகள் கூப்பாடுகளை புலம்பல்களை மக்கள் நகைப்போடுதான் பார்க்கிறார்கள்.


Bala
டிச 03, 2024 10:43

மாண்புமிகு முதல்வர் மக்கள் குறை தீர்த்தத்திற்கு மழைநீர் வடிகாலுக்கு மந்திரிகளும், மேயரும் சொன்ன ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களே சாட்சி. தமிழகத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய நிகழ்வுகளே சாட்சி. எங்கும் புழங்கும் கஞ்சா விவகாரங்களே சாட்சி. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து மக்கள் அன்றாடம் படும் இன்னல்களே சாட்சி.


sridhar
டிச 03, 2024 12:47

முன்பெல்லாம் இல்லாத காட்சி கடந்த இரண்டு வருடங்களில் - ஒரு நாள் மழைக்கு கூட தாங்காத தமிழக நகரங்கள் . என்ன குறை தீர்த்தார்கள் . .


Malarvizhi
டிச 03, 2024 15:05

தொண்ணூறு சதவிகித கோவில்களில் அறங்காவலர் குழுக்களே இல்லை என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. புகார் கொடுத்துதான் தமிழக அரசு இதை சீர் செய்ய வேண்டுமா? இதை தமிழக அரசே நீதி மன்றத்தில் ஒத்துக் கொண்டிருக்கிறதே? அறங்காவலர் குழுக்கள் பல வருடங்களாக இல்லாதது பெரும் குறை மட்டுமல்ல பெரும் நிர்வாக சீர்கேடு.


Rpalni
டிச 03, 2024 08:53

பொன் மாணிக்கவேல் சொல்வதை போல சில நூறு மடங்கு அதிகமிருக்கும். திருட்டு த்ரவிஷன்கள் கொள்ளை அடிக்காத துறை ஏதாவது இருக்கிறதா? தமிழகம் அண்ணாமலையின் கீழ் வந்தால் ஒழிய நல்லது நடக்க வாய்ப்பில்லை


ராமகிருஷ்ணன்
டிச 03, 2024 07:28

விடியல் அரசின் சாதனைகளில் ஒன்று


N Annamalai
டிச 03, 2024 06:42

மக்களிடம் கோவில் நிர்வாகம் செல்லப் போகிறது. அதன் வழிகள் ஒன்று ஒன்றாக வருகிறது. அந்த அந்த ஊர் பெரியவர்களிடம் கொடுக்க வேண்டும் .அவர்கள் அதில் நல்லது செய்யட்டும் .


raja
டிச 03, 2024 06:33

திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிட கொள்ளை குடும்பத்தை அடித்து விரட்டத வரை தமிழனுக்கு விடியல் இல்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை