உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவக்கிரக கோவில்களை புனரமைக்க ரூ.30 கோடி நிதி..

நவக்கிரக கோவில்களை புனரமைக்க ரூ.30 கோடி நிதி..

சென்னை: 'பிரசாத்' திட்டத்தின் கீழ், தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒன்பது நவக்கிரக கோவில்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புனரமைக்க, மத்திய அரசு, 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மாமல்லபுரம் பாரம்பரிய பூங்கா, நீலகிரி மலர் தோட்டம் மற்றும் ராமேஸ்வரத்தை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற, 4,574 கோடி ரூபாய் நிதி கேட்டு, மத்திய சுற்றுலா துறை அமைச்சரிடம், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் கடந்தாண்டு நவம்பரில் கோரிக்கை மனு அளித்தார்.அதன்படி, மாமல்லபுரம் மற்றும் தேவாலா திட்டத்திற்கான, 170 கோடி ரூபாய் நிதியை, மத்திய சுற்றுலா துறை கடந்தாண்டு நவம்பர் இறுதியில் ஒதுக்கீடு செய்தது.அதன் தொடர்ச்சியாக, பிரசாத் திட்டத்தின் கீழ், தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒன்பது நவக்கிரக கோவில்களில், பக்தர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கோவில்களை புனரமைக்கும் வகையில், 30 கோடி ரூபாய் நிதியை, மத்திய சுற்றுலா துறை சமீபத்தில் ஒதுக்கீடு செய்துள்ளது.சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக சுற்றுலா துறை சார்பில், பிரசாத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள எட்டு நவக்கிரக கோவில்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 44.95 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.ஆனால், மத்திய சுற்றுலா துறை, தமிழகத்தின் எட்டு கோவில்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு கோவிலுடன் சேர்த்து, ஒன்பது நவக்கிரக கோவில்களில் சுற்றுலா பயணியருக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புனரமைக்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள சூரியனார் கோவில், திங்களூர் கைலாசநாதர் கோவில், கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் உள்ளிட்ட எட்டு நவக்கிரக கோவில்களும்; புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலும் சேர்த்து, விரைவில் புனரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nellai tamilan
மார் 16, 2025 12:39

வழக்கம் போல இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தமாட்டோம் ஆனால் நிதியை எங்களிடம் தந்துவிடுமாறு கடிதம் எழுதுவோம் - இப்படிக்கு ஓங்கோல் திருட்டு திராவிடியா அரசின் அமைச்சர் சேகர் பாபு


Padmasridharan
மார் 16, 2025 10:36

9_நவகிரஹங்கள் இப்பொழுது 8_அஷ்டகிரஹங்கள் ஆச்சோன்னோ கடவுளே. கேட்கலையா இத ஏன்னா


B MAADHAVAN
மார் 16, 2025 09:48

ஐயா, ஸ்டிக்கர் ஒட்ட விடாமல் பார்த்துக்கோங்க. மேலும், ஒதுக்கப்பட்ட தொகை பூரணமாக ஒதுக்கப்பட்ட காரணத்திற்காக செலவு செய்யப் பட வேண்டுமானால், அதை மத்திய அரசு நேரடிப் பார்வையிலேயே செலவு செய்யுங்கள். இல்லாவிடில், இங்கு "ஈயம் பூசின மாதிரி இருக்கணும்.. ஆனால், பூசப் படாது" என்பது மாதிரி வேலைகள் நடக்கும். பார்த்து நடந்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே, திருவண்ணாமலை பக்கம், தண்ணீர் இணைப்பு கொடுக்கமலேயே சும்மா பேருக்கு குழாய் பதித்து ஃபோட்டோ எடுத்துப் போட்ட செய்தி எல்லாம் பத்திரிக்கையில் பார்த்து இருப்பீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.


A.Muralidaran
மார் 16, 2025 09:43

ஏதாவது சோதிடன் துர்காவிடம் சொல்லி இருப்பான் ...


Svs Yaadum oore
மார் 16, 2025 06:13

இந்த திட்டம் பிரசாத் திட்டத்தின் கீழ், ஒன்பது நவக்கிரக கோவில்களை புனரமைக்கும் வகையில், 30 கோடி ரூபாய் நிதியை, மத்திய சுற்றுலா துறை சமீபத்தில் ஒதுக்கீடு செய்துள்ளதாம் .......இது மத்திய அரசு திட்டம் கோவில்களை மேம்படுத்தும் திட்டம் என்பதால் இதற்கு இங்குள்ள விடியல் திராவிட மதம் மாற்றிகள் நிச்சயம் தடை செய்து இதை வர விடாமல் பார்த்து கொள்வார்கள் ..தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் போல் இந்த திட்டமும் விடியல் ஆட்சியில் கிடப்பில்....


புதிய வீடியோ