உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு

 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாம் நாளாக நேற்று, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர். சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நாளாக, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, இடைநிலை ஆசிரியர்களை, ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக தயாரித்து, அதில், 'கரம் பிடித்து சொன்னீர்களே, கண்ணீர் துடைப்பேன் என்று; காத்திருக்கிறோம், எப்போது வருவீர்கள் எங்கள் முதல்வரே' என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளனர். அதை கையில் ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சிலர், வெயிலின் தாக்கத்தால், திடீரென மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நீதி தேவதை போல ஆசிரியர்கள் சிலர் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, தராசை கையில் பிடித்து, நுாதன போராட்டம் நடத்தினர். ஆசிரியர்களின் குழந்தைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.

'ஸ்டாலின் தாத்தா களத்துக்கு வரணும்!'

போராட்டத்தின் போது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின், 9 வயது மகள் சாய்ருத்ரா பேசும்போது, ''நான் பிறந்ததில் இருந்து, என் அம்மாவுடன், போராட்டம் நடத்தி வரு கிறேன். ஸ்டாலின் தாத்தா களத்துக்கு வந்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
டிச 31, 2025 04:03

தேர்தல் நேரத்தில் சிக்கல் வேண்டாமே என்று விட்டு வைத்து இருக்கிறார்கள். இல்லை என்றால் குண்டர் துறையை வைத்து தூக்கி தனிமை சிறையில் வைத்து சாத்து சாத்து என்று சாத்தியிருப்பார்கள். ஆசிரியர்களுக்கு சாதகமாக இருந்தாலுமே இனி தீம்க்காவுக்கு ஓட்டுப்போட யோசிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ