உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்; சீமான் பேச்சு

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்; சீமான் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு; தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலை. நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது; பாரதியை விடவா ஒரு புலவன் இருக்கிறான். எல்லா மொழிகளையும் கற்றான் பாட்டன் பாரதி. யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்றான். ஆங்கிலம் படிக்கிறவனுக்கு ஒண்ணு சொன்னான் பாரு. 1926ல் செத்து போய்ட்டான். ஆங்கிலம், ஆங்கிலம் அறிவு என்று பேசுறே? இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்கு பிறகு, உருவான மொழி ஆங்கிலம். இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழின் தொன்மை இலக்கண நூல் தொல்காப்பியம் இருக்குது. உருவாகவில்லை, அது இருக்குது.என்ன, ஆங்கிலத்தில் நீ சிறப்பு வச்சிருக்கே? என் மொழியை எடுத்திட்டா உனக்கு சொல் இல்லை. 500க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள், உயிர்ச்சொற்கள் நான் போட்டது உனக்கு. என் உடன் ஒரு S போட்டால் sudden. என்னுடைய பேச்சு அதன் உடன் ஒரு S சேர்த்தால் speechஎன்னுடைய பஞ்சு, ஒரு S போட்டா ஸ்பான்ஜூ. என்னுடைய கொல், உன் kill. என்னுடைய கட்டுமரம் உன்னுடைய கட்டுமறான். என்னுடைய நாவாய், உன்னுடைய navy. என்னுடைய கலாசாரம், உன்னுடைய culture. உனக்குன்னு என்ன இருக்குது? நான் போட்ட பிச்சையில் உருவாகிட்டு, நான் தான் பெரிய இன்டலிஜென்ட்டுன்னு, போடா... அங்கிட்டு போடா, சும்மா பேசிகிட்டு. தம்பி.. உலகத்தில் எல்லோரும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். தமிழர்கள் நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டு இருக்கிறோம்.இந்த நாட்டின் பிரதமர் மோடி அவர்கள், உலகம் முழுக்க செல்கிறார், என்ன சொல்கிறார் என்று கேளு. உலகின் முதல்மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை. இந்திய மொழிகளின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம்.உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் தமிழை கற்றுக் கொள்ள பேரார்வம் கொண்டு வருகிறார்கள். இதை நான் சொல்லல... நாட்டின் பிரதமர். ஒன்னு தெரிஞ்சுக்க... பெத்த தாயை பட்டினி போட்டுட்டு, எத்தனை ஆயிரம் அன்னதானம் செஞ்சாலும் உனக்கு பலனில்லை. தாய்மொழி தெரியாமல் நீ எவ்வளவு மொழிகளை கற்றாலும் நீ அறிவு கெட்டவன். பெத்த தாயை தெரியாத உன்னை என்னன்னு சொல்றது? இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Varuvel Devadas
ஏப் 08, 2025 16:13

Mr. Simon, can you clarify the basis on which Mr. P. M. is working for the revitalization of the Tamil Language, and what initiatives have been implemented to support its promotion? In my opinion, you can converse with individuals like yourself and your associates who fail to grasp the realities of our nations situation. You frequently talk nonsense, and it appears that you are unaware of what you are saying to the public. It is quite ironic that you hold a leadership position in a party in Tamil Nadu. It is so a misfortune for the Tamil Nadu people.


Mecca Shivan
ஏப் 08, 2025 10:33

அதெல்லாம் சரி சைமன் .. உங்காளுங்க திருவள்ளுவர் ஒரு கிருத்துவர் என்றும் அவர் எழுதிய அதாவது இயேசு பிறந்ததாக சொல்லப்படும் அந்த வருடத்திற்கு கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்னே எழுதப்பட்ட திருக்குறள் பைபிளை பார்த்து காப்பியடிக்கப் பட்டதாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நீங்க அவர்களை கண்டித்ததாக தெரியவில்லை ..ஏன் பயமோ?


Seekayyes
ஏப் 08, 2025 09:57

எனக்கு தெரிந்து சீனர்கள் தங்கள் தாய்மொழியில் தான் படிக்கிறார்கள், பேசுகிறார்கள், தொழில் செய்கிறார்கள், வேலை செய்கிறார்கள். தாய்மொழியை மறந்து ஆங்கிலம் பட்டபடிப்பு வரை படிக்கும் நாம் எந்த ஆராய்ச்சி செய்வதில்லை, ஆர்வமும் இல்லை. வெறும் காசு, பணம், துட்டு பின்னால் ஓடி கொண்டிருக்கிறோம். சீமானின் ஆதங்கம் சரிதானே. தனிப்பட்ட வாழ்க்கையின் விமர்சனம் தவிர்க்கவும், அது இந்த செய்திக்கு தேவையற்றது.


Indian
ஏப் 08, 2025 09:24

சந்தர்ப்ப வாதி ..


Pandi Muni
ஏப் 08, 2025 11:45

அறிவாளி


K.Ramakrishnan
ஏப் 07, 2025 23:36

திடீர் பாஜ விசுவாசியான சீமான் அவர்களே... ஒடிசாவில் நடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு தமிழன் பின்னணியில் பிஜூ ஜனதாதளம் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக, புரி ஜெகநாதர் கோவில் சாவிகள் தமிழ்நாட்டுக்கு போனதாக கூறி தமிழர்கள் மீது திருட்டுப் பழியை பிரதமர் மோடி சுமத்தினார். தமிழ் இனத்தின் மீது மோடி இப்படி விஷம் கக்கியது தமிழ்நாட்டுக்குபெருமை சேர்த்த விஷயமா? தமிழகை உயர்த்திப் பிடிக்கிற லட்சணமா? சொல்லுங்கள்...சைமன் என்ற சீமான் அவர்களே.. உங்களுக்கு நீதிமன்றம் மூலம் இளைப்பாறுதல் கிடைத்ததால் இப்படித் தான் காவடி தூக்குவீர்கள். தமிழ்நாட்டுக்கு வந்தாலே மோடிக்கு தமிழ் மீதும் தமிழ்நாட்டு கலாச்சாரம்மீதும் திடீர் பாசம் வந்து விடும். இந்த இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொண்டு தான் பா.ஜ.வுக்கும், அதை ஆதரிக்கிற அதிமுகவுக்கும் பூஜ்யத்தைதந்தனர். சீமானுக்கும் இனி தொடர்ந்து பூஜ்யம் தான்.


Rajah
ஏப் 07, 2025 21:32

தெலுங்கர்களுக்கு இருக்கும் அதே உரிமை இவர்களுக்கும் இருக்கிறது,


Jegaveeran
ஏப் 07, 2025 21:18

பிரதமர் மோடி அவர்கள் அவரது தாய் மொழியில் பேசியிருந்தால். நன்றாக இருக்கும். அவரே குந்தியில் பேசுகிறார். அவரது தாய் மொழி என்ன என்று அவருக்கு புரியவையுங்கள் மாண்புமிகு சீமான் அவர்களே. தமிழன் தமிழில் கையெழுத்து போட வில்லை என்று பிரதமர் மோடி பேசுகிறார். என்ன கொடுமை சார் இது. பிரதமர் அதையும் குந்தியில் தான் பேசுகிறார். அப்ப யார்? யாருக்கு அறிவுரை சொல்றவு. சீமான்தான் இதை சொல்ல வேண்டும். புது உறவு என்ன சொல்ல..?


Thetamilan
ஏப் 07, 2025 21:15

தமிழின் பெருமை பற்றி பேச சீமானுக்கோ பிரதமருக்கோ என்ன அருகதை உள்ளது ?


Pandi Muni
ஏப் 08, 2025 11:47

அதானே ஓங்கோல் தெலுங்கர்கள்தான் பொய் புரட்டு பேசி தமிழனிடம் கொள்ளையடிக்க வேண்டும் மற்றவர்களுக்கு உரிமை கிடையாது


Krishnan Javantheeswaran
ஏப் 07, 2025 20:05

In the interest of the progress of TN in various fields, it is necessary to install another party or alliance in power in the State in 2026 - a new Govt which can govern maintaining cordial relations with the Centre. Otherwise, quarrel politics as existing now will continue.


V.Mohan
ஏப் 07, 2025 20:01

எல்லா விடியல் சம்பள விசுவாசிகளும் சீமானை கட்டம் கட்ட ஆஜர். என்னய்யா இந்த தமிழ் நாட்டு ஜனங்க? இப்ப ஆட்சியில இருக்கறவங்க தான் ""தாங்களே தான் திரும்ப வரணும்""ன்னு பதவி வெறி புடிச்சு பேசறாங்கன்னா அவனுங்களை எதுக்காகப்பா தேக்கிப் பிடிக்கிறீங்க?? அப்படி என்ன பெரிய - ஆட்சியை நடத்தி சாதிச்சிட்டாங்க? ஆட்சி போகக்கூடாதுன்னு வெறித்தனமா பொய்யையும் கோயபல்ஸ்தனமான விளம்பர யுக்திகளால சுடாலின் இந்த ஆணியை பிடுங்கினாறு அந்த சமாசாரத்தை நாட்டுணாறுன்னு பீலா டுமீல் விட்டுக்கிட்டே இருக்காங்க நடக்கறது என்ன? பல போதைகளால சீரழிவு, பெண்களுக்கு எள்ளளவும்பாதுகாப்பில்லை. ரவுடிகள் அட்டகாசம், கட்சிக்காரங்க கட்ட பஞ்சாயத்து, தேவையற்ற அர்த்தமற்ற நீட் எதிர்ப்பு,மத்திய அரசு எதிர்ப்பு, மும்மொழி எதிர்ப்பு இவைகளினால மக்களுக்கு வர வேண்டிய நன்மைகள் தடைபடுவது - இப்படிதான் நடக்குது. முதுகெலும்பு இல்லாத,பணம் வாங்கி ஓட்டு போடும் புத்தி கெட்ட தமிழர்களே திமுகவை ஓரம் கட்டி மற்றவங்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே இந்த திமுக ஒண்ணும் ஜனங்களை மதிக்கிற ஜனநாயக ஆசாமிகள் அல்ல, தங்களது குடும்ப அரசியலுக்காக உழைத்து சாகும் விவரம் கெட்ட மக்களை ஏமாத்தறத்துக்காகவே வாழுறவங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை