உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடு, மாடுகள் மாநாட்டில் சீமான் ஆவேச பேச்சு

ஆடு, மாடுகள் மாநாட்டில் சீமான் ஆவேச பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஆடு, மாடுகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய முடியுமா' என மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆடு, மாடுகளின் மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.அவர் பேசியதாவது:கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதலே ஆடு, மாடுகள் நம் வாழ்வியலோடு ஒன்றி, உடன்பிறந்தவைகளாக இருக்கின்றன. காலுக்கு செருப்பாகவும், தோளுக்கு தோல் பையாகவும் மாடுகளின் தோல் பயன்படுகிறது. ஆனால், அவை உண்பதற்கு வைக்கோல் இல்லை. மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றை உண்கின்றனர். அவையோ போஸ்டர்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்கின்றன. தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளதாக கூறுகின்றனர். அவற்றை ஆக்கிரமித்து அழித்துவிட்டனர். தமிழகத்தில் 1 லட்சத்து 38,000 கோடி ரூபாய் அளவுக்கு, பாலுக்கான சந்தை மதிப்பு உள்ளது. ஆனால், வெறும் 50,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள சாராயத்தை குடிக்க வைத்து தாய்மார்களின் தாலியை அறுக்கின்றனர்.கால்நடைகளை பற்றி கவலைப்படாத கால்நடைத் துறை உள்ளது. மாடே இல்லாமல் மாட்டுப் பாலை பால்வளத் துறை விற்கிறது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் செல்வதால் கால்நடைகள் குடிக்க நீரின்றி தவிக்கின்றன. கேரளாவில் கட்டுமானங்களுக்கு தேவைப்படும் மண், கற்கள் குமரி மலைகளில் இருந்து செல்கிறது. அதற்கு பதிலாக குப்பை, கழிவுகளை இங்கு கொட்டுகின்றனர்.அவர்களது மலை பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில், மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்ப்பதால் பாதிப்பு ஏற்படும். ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல; வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது. அவை இன்றி இயற்கை விவசாயம் கிடையாது. பால் இருக்கும் வரை நாட்டில் பசி பட்டினி இருக்காது. ஆக., 3ல் தேனி மலையடிவாரத்தில் நானே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன். இவ்வாறு அவர் பேசினார். இம்மாநாட்டில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன், ஆடு-மாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanisamy T
ஜூலை 11, 2025 07:23

உங்களின் பேச்சில் சொல்லில் கொஞ்சம் தெளிவும் வெளிச்சமும் இருப்பதாக இப்போது தெரிகின்றது. நேற்று வேறாக நடந்துக் கொண்டீர்கள். இன்று இப்படி நாளை எப்படியோ? ஒருநிலையான தெளிவான அரசியல்வாதியாக நீங்கள் இயங்கவில்லை. இப்படிபட்டவர்கள் எந்தக் காலமும் நல்ல தலைவராக உருவாக முடியாது. உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளவேண்டும். ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் .


Kasimani Baskaran
ஜூலை 11, 2025 03:38

டம்ளர் கோஷ்டிக்கு கிட்டத்தட்ட தெளிவு வந்து விட்டது போல தெரிகிறது.. ஆடு மாடுகள் கூட பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது இல்லை. ஆனால் 60 ஆண்டுகளாக திராவிட மட[த]ம் உருவாக்கியிருக்கும் கால்நடைகள் கூட்டமாக வாக்குரிமையை விற்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை